திங்கள், 24 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(யாகம்)


8320 யாகம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

அர்ப்பணித்தல்.


8321 யாகத்திற்கு உரிய பொருளை விரிவாக கூறுவதானால் எவ்வாறு கூறலாம்?

பொருட்களில் புனிதமானவைகள் என கருதக் கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும்.


8322 பஞ்சயெக்கியங்களைத் தருக?

தெய்வயெக்கியம், பிதுர்யெக்கியம், மனுஷயெக்கியம், பூதயெக்கியம், பிரம்மயெக்கியம்.


8323 தெய்வயெக்கியம் என்பது என்ன?

தினசரி கடவுளை வழிபடுவது.


8324 பிதுர்யெக்கியம் என்பது என்ன?

பெற்றோரை அன்றாடம்

வணங்குவது.


8325 மனுஷயெக்கியம் என்பது என்ன?

நலிந்தோருக்கு தொண்டு செய்வது.


8326 பச்சை புல்லையும் படர்ந்து நிற்கும் கொடியையும் ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும் களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது என்ன எக்கியம் ஆகும்?

பூதயெக்கியம்.


8327 அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷிகளையும் தெளிவைக் கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது என்ன எக்கியம்?

பிரம்மயெக்கியம்


8328 இந்த ஐந்து யாகத்தையும் யார் செய்யலாம்?

யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


8329 இந்த ஐந்து யாகத்தையும் செய்பவன் என்னவாகிறான்?

உண்மையான மனிதனாகிறான்.

திங்கள், 17 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(சடங்குகள்)


8313) ஒரு பொருளை தூய்மை அல்லது புனிதப்படுத்தும் வழிமுறைகளுக்கு என்ன பெயர்?

சடங்குகள்

8314) புனிதப்படுத்துவதால் எத்தனை வகை நன்மைகள் உள்ளன?

இரு வகை

8315) புனிதப்படுத்துவதால் ஏற்படும் இரு நன்மைகளையும் தருக?

அதன் புனிதத் தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.

8316) சடங்குகளின் பயன்கள் எவ்வாறு அமையலாம்?

கண்களுக்கு புலனாகும் படியும் புலனாகாதபடியும் அமையலாம்.

8317) ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் அதிலுள்ள அழுக்குகள் மறைந்து பிரகாசம் பெறலாம். இது என்ன பயன்?

கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு

8318) ஒரு பொருள் மந்திரம் ஏற்றப்பட்ட ரோல் என்னவாகும்?

புனிதம் பெறும் இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்துகொள்ள முடியாது. மாறாக உணர முடியும்.

8319) சடங்குகள் மூலம் மனிதன் தன் உடம்பை என்ன செய்து கொள்ளலாம்?

புனிதப் படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 10 ஜனவரி, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மஞ்சள்)


8302) மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது எது?

மஞ்சள்


8303) மஞ்சள் இருக்கும் இடத்தில் யார் வாசம் செய்வதாக கூறப்படுகிறது?

திருமகள்

8304) சுமங்கலப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்வது ஏன்?

அதில் திருமகள் வாசம் செய்வதால்

8305) புத்தாடை அணியும் போது அதில் என்ன தடவப்படுகிறது?

மஞ்சள்

8306) எந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதழ் என்றாலும் அதில் என்ன தடவி கொடுக்கிறோம்?

மஞ்சள்

8307) அட்சதைக்கு எடுக்கப்படும் அரிசி எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?

முனை முறியாத அரிசாக இருக்க வேண்டும்

8308) அட்சதை தயாரிக்கும் போது என்ன சேர்க்கப்படுகிறது?

மஞ்சள்

8309) சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு என்ன கொடுப்பது வழக்கம்?

மஞ்சள், குங்குமம்

8310) சுமங்கலிகளுக்கு இவ்வாறு மஞ்சள் குங்கும் அளிப்பது ஏன்?

அவை மங்கலத்தின் அடையாளம் என்பதால் ஆகும்.

8311) பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் எதனை கட்டி அடுப்பில் ஏற்றுவார்கள்?

மஞ்சள் கிழங்கு செடியை


(கரும்பு)


8312) பொங்கலில் மஞ்சளைப் போல் கரும்பு முக்கிய இடத்தை பெறக் காரணம் என்ன?


கரும்பு இனிமையின் அடையாளம் அடி முதல் நுனி வரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக் கரும்பு உப்பு சுவையுடையது. அடிக் கரும்பு தித்திப்பாய் இனிக்கும். இதன் மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால் தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதன் முடிவில் கரும்பு போல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்

திங்கள், 3 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



பஞ்சாங்கம்

8292. நட்சத்திரங்கள் எத்தனை உள்ளன? 27


8293. 27 நட்சத்திரங்களையும் தருக!

அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.


8294. ராசிச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட எத்தனை பகுதிகளை குறிக்கும்? 27


8295. இவ்வாறு 27 பகுதிகளைக் குறிப்பது எவை? நட்சத்திரங்கள்


8296. நட்சத்திரம் எப்படி கணக்கிடப்படுகிறது?

சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக் கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது


8297. சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப் பகுதி என்னவென்று கூறப்படுகிறது?

யோகம்


8298. கரணம் என்பது என்ன?

ஒரு திதியின் முற்காலம் பிற்காலம் ஆகியவையே கரணம் எனப்படும்.


8299. கரணம் திதியின் எந்தளவு பங்கு கொண்டது?

கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும்.


8300. திதிகள் எத்தனை? 30


8301. முப்பது திதிகளுக்கும் எத்தனை கரணங்கள் உள்ளன?

60

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...