புதன், 7 ஆகஸ்ட், 2019

அறநெறி பாடசாலை ஆசிரியருக்குரியது



16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன?

“கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே”

16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன?

சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலர வைத்து அவர்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் விரிவடைய வைக்கும் கல்வியை வழங்குவதே ஆகும்.

16260) அறநெறிக் கல்வியின் “குறிக்கோள் வாசகம்” என்ன?

சிறார்களின் மனம் ஏற்றுக்கொள்கின்ற பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு தெரிந்துகொள்ளவும் ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்ந்துக்கொள்ளவும் மனதிலும் உணர்விலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் பயிற்சி யளித்து வழிகாட்டி ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.

16261) அறநெறிக் கல்வியின் குறிக்கோள்கள் எத்தனை? பத்து

16262) அந்த பத்து குறிக்கோள்களும் எவை?

1.இந்து வாழ்ககை முறைகளை கற்கவும் அதன்படி வாழவும் சிறுவர்களுக்கு உதவுதல்,

2. கடமை, பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்தை பதிய வைத்தல்

3. உள்ளார்ந்த மனித மதிப்புகளின் புரிதலுக்கும் நடைமுறைக்கும் ஊக்கமளித்தல்

4. ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அடக்கியாளவும் ஒழுக்கத்தை பேணவும் பயிற்சியளித்தல்

5. சிறார்களின் எண்ணம், சொல், செயலில் தூய்மையும் ஒற்றுமையும் இருக்க வழிகாட்டுதல்,

6. சரியானதற்கும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காண்பதற்காக உள்ளிருக்கும் தெய்வீகத்தை பின்பற்ற பயிற்சியளித்தல்,

7. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான வழிமுறைகளையும் அருளாளர்களது வாழ்க்கையையும் போதனைகளையும் பின்பற்றி சுயநலமற்ற சேவையை வழங்க பயிற்சி அளித்தல்

8. இந்து கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளில் அறிவு மற்றும் ஆளுமை விருத்திக்கு பயிற்சியளித்தல்,

9. நம்பிக்கைகளுக்கும் மனித குலங்களுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து சிறார்கள் நன்கு அறிந்திருக்க உதவுதல்,

10. நேர் விளைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால தலைவர்களாக வளர்வதற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களை வளர்க்க உதவுதல்

16263) அறநெறிக் கல்வி மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமைகளை எத்தனை நிலையங்களில் மலரச் செய்கிறது?

ஐந்து

16264) அந்த ஐந்து நிலைகளையும் தருக

1. புத்தி சார்ந்த நிலை

2. உடல் சார்ந்த நிலை

3. உள்ளம் சார்ந்த நிலை

4. மனம் சார்ந்த நிலை

5. ஆன்மீக நிலை

16265) அறநெறிக் கல்வி வழங்குகின்ற அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16266) அந்த ஐந்து அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்களும் எவை?

1. அமைதியாக அமர்தல்

2. பிரார்த்தனை

3. இசை மற்றும் குழுவாகப் பாடுதல்

4. கதை கூறல

5. குழுச் செயற்பாடுகள்

16267) உயர் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16268) அந்த ஐந்து உயர் கற்பித்தல் நுட்பங்களையும் தருக

1. தியானம்

2. யோகா (சூரிய நமஸ்காரம்)

3. தலைமைத்துவப் பயிற்சி

4. சேவைத் திட்டங்கள்

5. கருத்தரங்குகள்

16269) அறநெறி பாடசாலை எத்தனை பிரிவுகளாக இயங்குகிறது?

நான்கு

16270) அந்த நான்கு பிரிவுகளும் எவை?

பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, இளைஞர் பிரிவு

16271) பாலர் பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 1,2

16272) எத்தனை வயது பிள்ளைகள்? 5,6,7

16273) கீழ்ப்பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 3,4,5

16274) எத்தனை வயது பிள்ளைகள்? 8,9,10

16275) மத்திய பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன? 6,7,8

16276) என்னென்ன வயது பிள்ளைகள்? 11,12,13

16277) மேற்பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன?9,10,11

16278) என்னென்ன வயது பிள்ளைகள்?14,15,16

16279) இளைஞர் பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னெனன? 12,13

16280 ) என்னென்ன வயது பிள்ளைகள்? 17,18,19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...