கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
நிறை குடம்
8962) நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள் எவை?
நிறைகுடம் (நீர் நிறைந்த குடம்), சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையாரின் சிலை நெல் அல்லது பச்சரிசி, தலை வாழை இலை, முடித் தேங்காய் 1, மாவிலை 5 அல்லது 7, குத்து விளக்கு 2, தேங்காய் எண்ணெய், விளக்குத் திரி, விபூதி + கிண்ணம், சந்தனம் + கிண்ணம், குங்குமம் + கிண்ணம், பன்னீர் + செம்பு, பலநிறப் பூக்கள், வாழைப்பழம் ஒரு சீப்பு, தேசிக்காய், தேங்காய் உடைப்பதற்கு) வெற்றிலை 3, பாக்கு 3, சாம்பிராணி.
8963) நிறைகுடம் வைக்க முதலில் என்ன செய்ய வேண்டும்?
ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன் மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும், அதன் பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை வைக்கவும்.
8964) தலைவாழை இலையை, இலையின் நுனிப் பகுதி எந்தத் திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும்?
வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு
வைக்க வேண்டும்.
8965) மேற்கூறிய முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால் என்ன செய்யலாம்?
பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக்கூடியதாக வாழை இலையை வைக்கவும்.
8966) வாழை இலையை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?
நெல் அல்லது அரிசி பரப்பி, அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும்.
8967) கும்ப குடத்தை வைத்த பின் என்ன செய்ய வேண்டும்?
அதன் இரு பக்கங்களிலும் குத்து விளக்கு ஒவ்வொன்று வைக்கவும்.
8968) அதன் பின் என்ன செய்ய வேண்டும்?
ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித் தேங்காயை அதன் மேல் வைக்கவும்.
8969) அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது எத்தனை மாவிலைகளை வைப்பார்கள்?
மூன்று
8970) கும்பத்தை வைத்தபின் என்ன செய்யலாம்?
ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பு ஒன்றும் வெற்றிலை பாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்) தேசிக்காய் ஒன்று ம் வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
8971) மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கொண்ட தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்.
இடது பக்கத்தில்.
8972) இந்தத் தட்டை இடது பக்கத்தில் வைத்து என்ன செய்யலாம்?
அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையாரை அல்லது பிள்ளையார் சிலையை வைக்கலாம்.
8973) சந்தனம், குங்குமம், பன்னீர்ச் செம்பு, விபூதி, இவற்றை என்ன செய்யலாம்?
இன்னொரு தட்டில் வைக்கவும்.
8974) இந்தத் தட்டை கும்பத்தின் எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டும்?
வலப்பக்கத்தில்
8975) இவ்வாறு நிறைகுடம், சந்தனம், குங்குமம் வைத்தபின் என்ன செய்வார்கள்?
நிறைகுடத்திற்கு மாலை போடுவார்கள் அல்லது பூக்களால் அலங்கரிப்பார்கள். குத்துவிளக்குக்கும் மாலை போடுவார்கள்.
8976) குத்து விளக்குகளை எப்போது கொளுத்த வேண்டும்?
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்
8977) எத்தனை திரிகளை கொளுத்த வேண்டும்?
திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ
8978) குத்துவிளக்கை கொளுத்திய பின் செய்யக்கூடிய செயல் என்ன?
தேங்காய் ஒன்றை உடைத்து கும்பத்தின் இருபக்கங்களிலும் வைக்கலாம். தூபம் ஏற்றலாம். ஒன்று அல்லது மூன்று சாம்பிராணிக் குச்சிகளைக் கொளுத்தி வாழைப்பழத்தில் குத்திவிடலாம்.
திங்கள், 27 பிப்ரவரி, 2012
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(மாசிமகம்)
8955) மாசி மாதத்தில் சூரிய பகவான் எந்த ராசியில் சஞ்சாரம் செய்வார்?
கும்பராசியில்
9856) மக நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியது?
சிங்க ராசி
8957) மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பவர் யார்?
சந்திரன்
8958) சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பதை என்னவென்று கூறப்படும்?
மாசிமகம்
8959) மாசிமகத்தில் நடைபெறும் உற்சவம் எது?
தீர்தோற்சவம்
8960) மாசி மகத்தன்று நடத்தப்படும் விழாவை என்னவென்று கூறுவர்?
கடலாடும் விழா
8961) பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன் நாள் எது?
மாசிமகக் கடலாடு தீர்த்தமாடும் நன்நாளாகும்.
திங்கள், 13 பிப்ரவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8941. காளைக்குரிய வேறு பெயர் களைத் தருக.
நந்தி, எருது, விடை,
ஏறு வெள்ளேறு, ரிஷபம், இடபம், நந்திதேவர், நந்தி மகாதேவர், நந்தி கேசுவரர்.
8942. நந்தி தேவரின் நான்கு கால்களும் எதை உணர்த்து கின்றன?
நான்கு வேதங்களை
8943. பிரதோஷநேரத்தில் முதல் பூசை யாருக்கு உரியது?
நந்தி தேவருக்கு
8944. சிவன், நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடை யில் திருநடனம் புரியும் நேரம் எது?
பிரதோஷ நேரம்.
8945. பிரதோஷ நேரத்தில் முதல் பூசை நந்தி தேவருக்கு நடத்துவது ஏன்?
சிவன் அந்நேரம் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் திரு நடனம் புரிவதால் அந்த நேரம் சிவ தரிசனம் செய்தால் அளவற்ற நற்பலன்கள் கிடைப்பது உறுதி என்பதால் ஆகும்.
8946. பொற்பெட்டியில் அவதரித்தவர் யார்?
நந்தி தேவர்.
8947. இவர் பொற்பெட்டியில் அவதரிக்க காரணமானவர் கள் யார்?
சிலாத முனிவரும் சித்ராவதியும்.
8948. மகப்பேறு இல்லை என்று சிவனை வேண்டிய வர்கள் யார்?
சிலாத முனிவரும் சித்ராவதியும்.
8949. இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் என்ன கூறினார்?
யாகம் செய்வதற்கு நிலத்தை உழுதால் எம்மைப்போல் மகன் தோன்றுவான் என்றார்.
8950. நந்தி தேவர் எத்தனை முறை தவம் செய்தார்?
மூன்று முறை
8951. முதன் முறை தவம் செய்து எதனைப் பெற்றார்?
திருவடியில் நீங்காத அன்பினை
8952. இரண்டாம் முறை என்ன பெற்றார்?
சிறு நிந்தனை, சிவனடியார் நிந்தனை
முதலிய நிந்தனைகளைச் செய்கின்றவர்களை தண்டிக்கும் ஆணையை ஏற்றார்.
8953. மூன்றாம் முறை எதனைப் பெற்றார்?
என்றும் நிலைத்திருக்கும் தன்மையை
8954. நந்தி தேவர் யாரை மணந்தார்?
சுயசையை.
திங்கள், 6 பிப்ரவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8926) உலகம் எப்போது தோன்றியதாக ஐதீகம்
தைப்பூசத்தன்று
8927) சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் எது?
தைப்பூசம்
8928) சிவபெருமான் நடனம் ஆடியது எங்கு?
சிதம்பரத்தில்
8929) நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்த மன்னன் யார்?
இரணியவர்மன்
8930) இரணியவர்மன் நடராஜரை எங்கு வைத்து தரிசித்தார்?
சிதம்பரத்தில்
8931) இரணியவர்மன் சிதம்பரத்திற்கு வந்து என்ன செய்துகொண்டிருந்தார்?
அரும்பெரும் திருப்பணிகள்
8932) இரணியவர்மன் என்னும் மன்னன் நடராஜரை சந்தித்தது எப்போது?
தைப்பூசத்தன்று
8933) ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று சமாதியானவர் யார்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.
நந்தி தேவர்
8934. ‘நந்தி’ என்ற சொல் எந்த மொழிச் சொல்?
வடமொழிச் சொல்.
8935. ‘நந்தி’ என்ற இந்த வடமொழி சொல்லுக்கு உரிய பொருள் என்ன?
இன்பம் உடையவன்.
8936. நந்தி என்ற சொல் யாரையும் குறிக்கும்?
சிவனையும் அவனது அம்சமான ஒரு மகனான நந்தி தேவரையும்.
8937. சிவனுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டவர் யார்?
நந்தி தேவர்
8938. சிவனின் வாயில் காவலன் எது?
காளை
8939. சிவனின் வாகனம் எது? காளை
8940. சிவனின் கொடிச் சின்னம் எது?
காளை
வியாழன், 2 பிப்ரவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8926) உலகம் எப்போது தோன்றியதாக ஐதீகம்
தைப்பூசத்தன்று
8927) சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் எது?
தைப்பூசம்
8928) சிவபெருமான் நடனம் ஆடியது எங்கு?
சிதம்பரத்தில்
8929) நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்த மன்னன் யார்?
இரணியவர்மன்
8930) இரணியவர்மன் நடராஜரை எங்கு வைத்து தரிசித்தார்?
சிதம்பரத்தில்
8931) இரணியவர்மன் சிதம்பரத்திற்கு வந்து என்ன செய்துகொண்டிருந்தார்?
அரும்பெரும் திருப்பணிகள்
8932) இரணியவர்மன் என்னும் மன்னன் நடராஜரை சந்தித்தது எப்போது?
தைப்பூசத்தன்று
8933) ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று சமாதியானவர் யார்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...