திங்கள், 31 டிசம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9770) எண் கோணக் குண்டம் எந்த பாகத்தில் அமைக்கப்படும்?
வடகிழக்கு
9671) எண் கோணத்தில் எந்தனை குண்டங்கள் அமைக்கப்படும்?
எட்டு
9672) எண் கோணக் குண்டம் யாரைக் குறிக்கும்?
சந்திரன்
9673) யாகசாலையில் தென்கிழக்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்த குண்டம்?
அரசிலைக் குண்டம்
9674) இதனை ஏன் அரசிலைக் குண்டம் என அழைக்கின்றனர்?
அரச இலை வடிவத்தில் அமைக்கப்படுவதால்.
9675) அரச இலைக் குண்டம் எதனைக் குறிக்கிறது?
இயமானன் என்ற ஆன்மா மாயா தத்துவத்தை
9676) யாகசாலையில் தென்மேற்கு பாகத்தில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்?
முக்கோண குண்டம்
9677) இதனை ஏன் முக்கோண குண்டம் என்று அழைக்கின்றார்கள்?
முக்கோண வடிவத்தில் அமைக்கப்படுவதால்
9678) ஆறு கோண வடிவத்தில் குண்டம் அமைக்கப்படுவது எந்த பாகத்தில்?
வடமேற்கு
9679) இதனை என்ன கோணம் என்று கூறுவார்கள்?
அறுகோணம்
9680) அறுகோணம் எதைக் குறிக்கும்?
காற்றை
9681) எட்டு திக்குகளிலும் அமைக்கப்பட்ட குண்டங்களுக்கும் ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைக்கப்படுவது எந்தக் குண்டம்?
பிரதான குண்டம்
9682) பிரதான குண்டம் எந்த வடிவில் அமைக்ககப்படும்?
வட்டவடிவம்
9683) யாகசாலையின் நான்கு பக்கங்களிலும் என்ன அமைக்கப்படும்?
நான்கு கலசங்கள்
9684) இந்த நான்கு கலசங்களும் எதைக் குறிக்கும்?
நான்கு கலைகளை
9685) இரண்டு காப்பாளர்களுக்கு என கலசங்கள் வைப்பது எங்கு?
வாசலில்
புதன், 26 டிசம்பர், 2012
கும்பாபிஷேகம்
9640) கோயில்களில் தினமும் எத்தனை கால பூசை செய்ய வேண்டும்?
ஆறு
9641) பல கோவில்களில் ஆறு கால பூசை செய்வ தில்லை. அந்த குறையை நீக்க என்ன செய்வார்கள்?
பிரம்மோற்சவம்
9642) பிரம்மோற்சவம் எப்போது செய்யப்படும்?
வருடத்துக்கு ஒரு முறை
9643) பிரம்மோற்சவம் செய்யும் போது ஏற்படும் குறைகளை நீக்க என்ன செய்வார்கள்?
கும்பாபிஷேகம்
9644) கும்பாபிஷேகம் எப்போது செய்யப்படும்?
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
9645) வேறு என்ன காரணங்களுக்காக கும்பாபிஷேகம் செய்யப்படும்?
கோவில் கட்டி பல வருடங்களாகி இருந்தால் நித்தியபூஜை, நிவேதனம் தடைபட்டு இருந்தால், அஷ்டபந்தன மருந்தின் சக்தி குறைந்து இருந்தால்
9646) கும்பாபிஷேக யாகம் எத்தனை நாட்களுக்கு செய்யப் படும்?
ஏழு, ஐந்து, மூன்று, ஒரு நாள் என்ற விதி முறைப்படி நடக்கிறது.
9647) இதை என்ன வென்று சொல்லுவார்கள்?
புனராவர்தம்
9648) பிரதிஷ்டைக்கு முதலில் என்ன செய்வார்கள்?
பாலஸ்தானம்
9649) பிம்பத்தில் பிளவு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்?
ஸ்தலகர்ம ஆதார பத்ம பீடம், பிரத்யங்கம் முதலியவற்றை நிவர்த்தி செய்வார்கள்.
9650) இதற்கு முதலில் என்ன செய்வார்கள்?
நல்ல நேரம் பார்ப்பார்கள்.
9651) குண்டங்கள், கம்பங்கள் என்ற அரு உருவ நிலை மாறி, இறைவனின் முழு உருவமும் திருமேனியில் இடம் பெறச் செய்வதை என்னவென்று கூறுவார்கள்?
கும்பாபிஷேகம்
9652) இந்த காரியம் நடத்தும் இடத்தை என்னவென்று கூறுவார்கள்?
யாகசாலை
9653) யாகசாலை என்ற விதத்தில் ‘ய’ என்பது என்ன?
யஞ்ஞம்
9654) ‘க’ என்பது என்ன?
செல்லுதல்
9655) ‘ஸ’ என்பது என்ன?
சுகம்
9656) ‘ல’ என்பது என்ன?
லயம்
9657) எட்டு திக்குகளிலும் யாக சாலையில் என்ன அமைக்கப்படுகிறது?
குண்டங்கள்
9658) கிழக்கில் என்ன வடிவமான குண்டம் அமைப்பார்கள்?
சதுர வடிவமான
9659) இந்த சதுர வடிவமான குண்டத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
நாற்கோண குண்டம்
9660) இந்த நாற்கோண குண்டம் எதை குறிக்கும்?
நிலத்தை
9661) தெற்கில் எந்த வடிவமான குண்டம் அமைப்பார்கள்?
நிலா வடிவமான
9662) இந்த குண்டத்தை என்னவென்று சொல்லுவார்கள்?
அர்த்த சந்திர குண்டம்
9663) அர்த்த சந்திர குண்டம் எதை குறிக்கும்?
நீரை
9664) மேற்கில் எந்த வடிவமான யாகம் அமைக்கப்படும்?
வட்டவடிவமான
9665) இந்த வட்ட வடிவமான யாகத்தை என்ன வென்று சொல்லுவார்கள்?
விருத்த குண்டம்
9666) விருத்த குண்டம் எதை குறிக்கும்?
ஆகாயத்தை
9667) வடக்கு யாகத்தில் எந்த வடிவ குண்டம் அமைக்கப்படும்?
தாமரைப்பூ
9668) தாமரைப்பூ வடிவ குண்டத்தை என்ன வென்று சொல்லுவார்கள்?
பத்ம குண்டம்
9669) பத்ம குண்டம் யாரை குறிக்கும்?
சூரிய பகவானை
திங்கள், 17 டிசம்பர், 2012
9615 சிவன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
96
9616) முருகப்பெருமான் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
36
9617) தாமசாஸ்தா ஐயப்பன் எத்தனை தத்துவங்களை கடந்தவர்?
18
9618) சபரிமலையில் அமைந்துள்ள 18 படிகளில் முதல் ஐந்து படிகளும் எதை குறிக்கின்றன?
இந்திரியங்கள் ஐந்தையும்
9619) அடுத்த 8 படிகள் எதனை குறிக்கும்?
அஷ்டமா சித்திகளை
9620) 14, 15, 16 வது படிகள் எதனை குறிக்கின்றன?
மூன்று குணங்களையும் குறிக்கும்
9621) 17வது படி எதனை குறிக்கும்?
ஞானத்தை
9622) 18வது படி எதனை குறிக்கிறது?
அஞ்ஞானத்தை
9623) கடவுளை காண கடக்க வேண்டிய 18 படிகளும் எவை?
புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, அலங்காரம் ஒன்று
9624) பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரில் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் பெற்றவர் யார்?
ருத்ரன்
9625) ருத்ரன் எத்தகைய சக்தி உடையவர்?
அழியாத சக்தியும் அனந்த சக்தியும்
9626) இவர் எத்தகைய ஆற்றல் உடையவர்?
செயற்கரிய பல காரியங்களைச் செய்யும் பேராற்றல்
9627)’ருத்’ என்றால் என்ன?
துக்கம் அல்லது துக்கத்தை விளைவிக்கக் காரணமாயுள்ளது.
9628) ருத்ரன் என்ற பெயர் இவருக்கு எவ்வாறு பொருத்தமாய் உள்ளது.
தீயோரை அழ வைக்கின்றான் என பொருள் கொள்வதால்
9629) ருத்ரன் நித்யவாஸம் செய்யும் இடம் எது?
திருக்கைலாயம்
9630) பிரம்மன் தங்குமிடம் எது?
ஸத்ய லோகம்
9631) விஷ்ணு வீற்றிருக்கும் இடம் எது?
வைகுண்டம்
9632) லோக ஸ்ருஷ்டியை செய்பவர் யார்?
பிரம்மன்
9633) லோக பரிபாலனத்தை செய்பவர் யார்?
விஷ்ணு.
9634) லோக ஸம்ஹாரத்தை செய்பவர் யார்?
ருத்ரன்
9635 )ஓம் காரத்தின் பொருள் எது?
நமசிவாய
9636) இது ஸப்த கோடி மஹா மந்திரங்களில் முதன்மையானது என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கந்த புராணத்தில்
9637) ருத்ரன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்?
எங்கும் உள்வர் என்றும் எல்லாமாய் இருப்பவர்
9638) அண்டியவர் பிணிகளைப் போக்குவதால் இவர் எவ்வாறு வர்ணிக்கப்படுகின்றார்?
திவ்ய வைத்தியவன்
9639) இவரை வேதாகம இதிஹாச புராணங்கள் எவ்வாறு அழைக்கின்றன?
சம்பூ, சங்கரன், பார்வதீபதி, நீலகண்டன், சிவன்.
திங்கள், 10 டிசம்பர், 2012
கே. ஈஸ்வரலிங்கம்
9603) வாரியார் எதனைப் போல் இனிமை யாக பேசு என்கிறார்?
கிளியைப்போல
9604) எதனைப் போல் ஒருமையுடன் இறை வனை நினை என்கிறார்?
கொக்கைப் போல
9605) ஆடு போல் என்ன செய்ய சொல்கிறார்?
நன்கு மென்று உண் என்கிறார்.
9606) யானையைப் போல் என்ன செய்ய சொல்கிறார்?
குளி
9607) நாயைப் போல் என்ன செய்ய சொல்கிறார்?
நன்றியுணர்ந்து ஒழுகச் சொல் கிறார்
9608) எதனைப் போல் குறிப் பறிந்து கொஎன்கிறார்?
காக்கையைப் போல்
9609) எதனைப் போல் சுறு சுறு ப்பாக இருக்க சொல் கிறார்?
எறும்பைப்போல்
9610) செல்வம் பெற வேண் டின்எதனை வணங்கச் சொல்கிறார்?
அக்னியை
9611) ஆற்றல் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்?
அம்பிகையை
9612) சுகம் பெற வேண்டின் யாரை வணங்க வேண்டும்?
திருமாலை
9613) பெண்களுக்கு உரியவை எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
9614) ஆண்களுக்கு உரியவை எவை?
அறிவு, நிறை, கடைப்பிடிப்பு
வெள்ளி, 7 டிசம்பர், 2012

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...