திங்கள், 17 மே, 2010

அறநெறி அறிவு நொடி

6802) பேரின்ப வடிவிளான இறைவனை அடைய அடிப்படையானது எது? அன்பு

6803) இல்லற தர்மம் எதை போதிக்கிறது?அன்பை மையமாகக் கொண்ட நெறிகளை

6804) இல்லற தர்மத்தின் கோட்பாடு எது?ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி அதற்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்வது.

6805) தம்பதியரில் ஆணுக்கு 60 வயது நிறைவ டை ந்து அறுபத்தொன்று தொடங்கும்போது கொண் டாடப்படும் விழா எது? மணி விழா

6806) எழுபத்தொன்று தொடங்கும் போது கொண்டாடப்படுவது என்ன விழா?பவள விழா

6807) எண்பத்தொன்று தொடங்கும் போது கொண்டாடும் விழா எது?முத்து விழா

6808) அன்பு செலுத்துவதற்கான எல்லை விரிவ டைவதற்கான தொடக்க விழா எனப்படு வது எது? மணி விழா

6809) இவ்வாறான இறை முயற்சியில் ஒருவருக்கு எத்தனை விதமான அருள் அனுபவங்கள் கிட்டுகின்றன? மூன்று

6810) அந்த மூன்று விதமான அருள் அனுபவங் களையும் தருக. பொன்னுடல், ஓங்கார உடல், அறிவுடல்

6811) பசு கரணங்கள் என்னவாகும்?பதி கரணங்களாக மாறும்

6812) பசு கரணங்கள் பதி கரணங்களாக மாறு வதால் உடல் என்னவாகும்?பொன்மயமாகும்.

6813) உடல் பொன்மயமாகி அதற்கடுத்த நிலை யில் உடல் என்னவாகும்?காற்று மயமாகும்

6814) உடல் காற்று மயமாகியபின் நடைபெறுவது என்ன?ஆன்ம நாதமே எல்லாமாய் மாறி ஓங்கார உடல் கிட்டும்.

6815) ஓங்கார உடல் கிட்டியபின் நடைபெறுவது என்ன?ஆன்மா ஞான மயமாய் விளங்கி அறிவுடல் கிட்டும்.

6816) பொன்னுடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்? மணி விழா

6817) பிரணவ தேகமாகிய ஓங்கார உடல் வாய்ப்பதை என்ன விழாவாக கருதுவர்?பவள விழா

6818) முத்து விழாவாக கருதுவது எதனை?ஞான உடல் வாய்ப்பதை

6819) சஷ்டியப்த பூர்த்தி என்பது எதனை?ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாளை.

6820) 360 பாகைகளின் வழியாக ஒரு வட்டப் பாதையை நிறைவுசெய்ய சூரியனுக்கு எவ் வளவு காலம் எடுக்கும்? ஒரு ஆண்டு

6821) செவ்வாய்க்கு எவ்வளவு காலம் எடுக்கும்?ஒன்றரை ஆண்டு

6822) சந்திரனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு மாதம்

6823) புதனுக்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒரு வருடம்

6824) வியாழனுக்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?12 வருடங்கள்

6825) வெள்ளிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?ஒரு வருடம்

6826) சனிக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?30 வருடங்கள்

6827) ராகுவிற்கு எடுக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்

6828) கேதுவிற்கு பிடிக்கும் காலம் எவ்வளவு?ஒன்றரை வருடங்கள்

6829) ஒருவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் தமிழ் ஆண்டு, மாதம் ஆகியவை மாறாமல் அமைந்திருப்பது எப்போது?ஒருவர் பிறந்து 60 வருடங்கள் நிறைவடைந்த நாளிற்கு அடுத்த நாளில்

6830) பூமி எத்தனை பாகைகளாக கணிப்பிடப் பட்டுள்ளன? 360 பாகைகளாக

6831) அந்த 360 பாகைகளும் எத்தனை ராசி வீடுகளாக வகுக்கப்பட்டுள்ளன? 12 ராசி வீடுகளாக

6832) சஷ்டியப்த பூர்த்தியன்று என்ன செய்வர்?64 கலசங்களில் தூய நீர் நிரப்பி மந்திரங்களை ஜயிப்பதன் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அதைக் கொண்டு அபிஷேகமும் செய்வர்.

6833) 64 கலசங்களும் எதை குறிக்கும்?60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரை குறிப்பதாக ஐதீகம்.

6334) பிரபது முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்?அக்கினி பகவான்

6835) ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சூரியன்

6836) ஈஸ்வர முதல்துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? சந்திரன்

6837) இறைவனைத் தேடும் மனப் பக்குவம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கு வது எப்போது? மணிவிழாவின் போது

6838) சித்ரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு அதிபதி யார்? வாயு பகவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...