திங்கள், 6 டிசம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8211 வேதம் எத்தனை வகைப்படும்?

நான்கு

8212 வேதங்கள் நான்கையும் தருக?

இருக்கு, சாமம், யசுர், அதர்வம்

8213 வேதாங்கம் எத்தனை வகைப்படும்?

ஆறு

8214 ஆறு வகை வேதாங்கங்களையும் தருக?

சிக்ஷ, சந்தசு, சோதிடம், வியாகரணம், நிருந்தம், கற்பம்.

8215 உபாங்கம் எத்தனை வகைப்படும்?

நான்கு

8216 உபாங்கங்கள் நான்கையும் தருக?

மீமாஞ்சை, நியாயம், புராணம், ஸ்மிருதி.

8217 மீமாஞ்சை எத்தனை வகைப்படும்?

இரண்டு.

8218 இரண்டு மீமாஞ்சைகளையும் தருக?

பூருவமோமாஞ்சை, உந்தரமீ மாஞ்சை.

8219 நியாயம் எத்தனை வகைப்படும்?

இரண்டு.

8220 இரண்டு வகை நியாயங்களையும் தருக?

கெளதமசூத்திரம், காணத சூத்திரம்.

8221 புராணங்கள் எத்தனை வகைப்படும்?

18

8222 பதினெட்டு வகை புராணங்களையும் தருக?

பிரமபுராணம், பதும புராணம், வைணவ புராணம், சைவ புராணம், பாகவத புராணம், பவிடிய புராணம், நாரதிய புராணம், மார்க்கண்டேய புராணம், ஆக்கினேய புராணம், பிரமகைவர்த்த புராணம், இலிங்க புராணம், வராக புராணம், காந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மற்சிச புராணம், காருட புராணம், பிரமாண்ட புராணம்.

8223 ஸ்மிருதி எத்தனை வகைப்படும்?

18

8224 பதினெட்டு வகையான ஸ்மிஞதிகளையும் தருக?

மனு ஸ்மிருதி, பிரகஸ்பதி ஸ்மிருதி, தக்ஷ ஸ்மிருதி, யமஸ்மிருதி, கெளதம ஸ்மிருதி, அங்கிர ஸ்மிருதி, யாஞ்ஞ வல்கிய ஸ்மிருதி, பிரசேந் ஸ்மிருதி, சாதாதப ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, சமவர்ந்த ஸ்மிருதி, உசன சங்க, விகித, அத்திரி, விஷ்ணு, ஆபத்தம்ப ஹாரித.

8225 சைவாகமம் எத்தனை வகைப்படும்? 28

8226 சைவாகமங்களைத் தருக? காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகக்சிரம, அஞ்சுமான, சுப்பிரபேதம், விஷயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், கெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோந்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்.

8227 வைவர்ண வாகமம் எத்தனை வகைப்படும்?

இரண்டு.

8228 வைவர்ண வாகமங்களைத் தருக?

பாஞ்சராத்திரம், வைகானசம்,

8229 மேலுலகம் எத்தனை?

ஏழு

8230 ஏழு மேலுலகங்களையும் தருக?

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், சனலோகம், தபோலோகம், சந்தியலோகம்.

8231 தூவீபம் எத்தனை?

ஏழு

8232 தூவீபங்களைத் தருக?

ஐம்பூந்துவீபம், பிலேஷத்துவீபம், சானமலித்துவீபம், குசத்துவீபம், கிரெளஞ்சித்துவீபம், சாகத்துவீபம், புஷ்கரத்து வீபம்.

8233 சமுத்திரங்கள் எத்தனை?

ஏழு

8234 ஏழு சமுத்திரங்களையும் தருக?

லவண சமுத்திரம், சிV சமுத்திரம், சுரா சமுத்திரம், சர்ப்பி சமுத்திரம், ததி, சமுத்திரம் lர சமுத்திரம், சுத்தோதக சமுத்திரம்.

8235 லவணவம் என்பது என்ன?

உப்பு

8236 இக்ஷ¤ என்பது என்ன?

கருப்பஞ்சாறு.

8237 சுரா என்பது என்ன?

கள்ளு

8238 சர்ப்பி என்பது என்ன?

நெய்.

8239 ததி என்பது என்ன?

தயிர்

8240 lரம் என்பது என்ன?

பால்

8241 சுத்தோகம் என்பது என்ன?

நல்ல நீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...