திங்கள், 18 ஜூலை, 2011

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணி

அவன் இன்றி அணுவும் அசையாது என் பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த இந்துக்கள் ஆதிகாலம் தொட்டு இயற்கைக்கு மதிப்பளித்து இயற்கையை போற்றி வணங்கி வருகின்றனர். உலகெங்கும் வாழ்ந்த இந்துக்க ளைப் போல் கொழும்பு, தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி மாவில ஒழுங்கையில் வாழ்ந்த இந்துக்களும் 1980 ஆண்டுக்கு முன்பிருந்து ஒரு மரத்தின் கீழ் கல்லை வைத்து வழிபட்டு வந்தனர்.

1980ம் ஆண்டுக்கு முன் இங்கு 80 இந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. 1983ம் ஆண்டுக்குப் பின் மேலும் பல குடும்பங்கள் இங்கு வந்து சேர்ந்தன் விளைவாக இங்கு பலகை யால் மடாலயம் அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு பலகையாக இருந்த மடாலயம் கல்லால் கட்டி 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

2000ம் ஆண்டு பேஸ்லைன் வீதி பெருந் தெருவாக்கப்பட்டது. மேம்பாலமும் அமைக் கப்பட்டதுடன் மாடி வீடமைப்புத் திட்டங்களும் இங்கு உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக மேலும் பலர் இங்கு வந்து சேர 2005ம் ஆண்டு இங்குள்ள மக்கள் ஒன்றுகூடி இவ்வா லயத்தை விஸ்தரித்து அமைக்க தீர்மானித்தனர். இதற்கமைய 2005-02-10ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் ஆலயம் தரைமட்டமாக்கப் பட்டது. மறுநாளான 11ம் திகதி ஆலயத்தை புனரமைக்க அடிக்கல் நடப்பட்டது.

தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகளை சிற்ப சிந்தாமணி விஸ்வஸ்ரீ செ.ச. சந்தனகுமார் ஸ்தபதி மேற்கொண்டு வருகிறார். ஆலயத்தில் ஆரம்ப காலத்திலிருந்து வந்த விநயாகப் பெருமானின் திருவுருவச் சிலையும் அம்பாளின் திருவுருவச் சிலையும் பின்னப் பட்டிருப்பதால் இத்திருவுருவச் சிலைகளுக்கு பதிலாக புதிய திருவுருவச் சிலைகளை பிரதி ஷ்டை செய்ய ஆலய திருப்பச் சபையினர் திருவுளங்கொண்டனர்.

இவ்வாலயத்தில் சிவன், துர்க்கை, முருகன், மஹாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படு கின்றன. இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ். செல்லச்சாமி, பொ. இராதகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர, மனோ கணே சன் ஆகியோர் உதவியுள்ளனர்.

இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் பிரதி ஷ்டை செய்யப்படவுள்ள 2 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் தயாகாந்த பெரேரா நிதியுதவி அளித்துள்ளார்.

ஆலய மூலஸ்தானம் அர்த்த மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் வசந்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு 60 பிள்ளைகளுடன் இவ் வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாணிவித்தியா அறநெறி பாடசாலை இவ் வாலயம் புதுப்பொலி வுடன் விஸ்திரமாக்க உதவியது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 2011.08.26ம் திகதி நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபை தலைவர்: எம். முருகேசன் (பரமு), செயலாளர்: ஆர். விஜயகுமாரன் (விஜயன்), பொருளாளர்: ஆ. குமரன், உபசெயலாளர்: பீ. சிரஞ்ஜீவன், நிர்வாக சபை உறுப்பினர்கள்: கே. கணேஷ், பீ. முருகேசன், எம். சுரேஷ், கே. அசோக், எஸ். நேசன், எம். கணேஷ், ஆனந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...