திங்கள், 26 செப்டம்பர், 2011


பிள்ளையார் கதை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு




இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆற்றும் பல்வேறு செயற்திட்டங்களுள் பல்துறை சார்ந்த நூற் பதிப்புக்களும் அடங்குகின்றன. அண்மையில் இத்திணைக்களத்தின் மூலம் “பிள்ளையார் கதை” எனும் சிறுகைநூலொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்துப்பொது மக்கள் ஆகியோருக்கு இலவசமாக விறியோகிக்கப்படுகின்றது.

அழகிய நால்வர்ண விநாயகப் பெருமானின் அட்டைப் படத்துடன் இப்புத்தகம் அமைந்துள்ளது. நூலில் பிள்ளையார் கதை, கதைப் பொழிப்பு, போற்றித் திருவகவல், விநாயகர் அகவல், வருகைக் கோவை, காரிய சித்தி மாலை என்பன அடங்கியுள்ளன. திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் இந்நூலுக்கு வழங்கியுள்ள வெளியீட்டுரையில் இந்நூல் பரவலாகக் கிடைப்பதில்லை என்ற இந்து மக்களின் கோரிக்கைக்கு அமையவே திணைக்களத்தால் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பூரணையும் கார்த்திகை நட்சத்திரமும் கழிந்த மறுநாள் பிரதமை முதல் மார்கழி மாதச் சுக்ல பட்ச ஷஷ்டி ஈறாக இருபத்தியொரு நாட்கள் பிள்ளையார் கதைக் காப்பு இந்து ஆலயங்களில் விரதமாக அநுட்டிக்கப்படுவதாகும். இக்காலங்களில் பிள்ளையார் கதை ஆலயங்களில் படிக்கப்படுவதோடு பொருள் சொல்லி விளங்கப்படுத்தப்படும்.

பக்தர்கள் பிள்ளையார் கதையைப் பக்தி சிரத்தையோடு கேட்டு மகிழ்வர். இந்நூலில் அடங்கும் பிள்ளையார் கதையின் பாடல் வரிகளுக்குரிய பொழிப்பினை மிகவும் எளிய தமிழ் நடையில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதி வழங்கியுள்ளார்.

விநாயகப் பெருமானின் பக்தர்கள் பயன் பெறும் பொருட்டு திணைக்களம் இந்நூலை இலவசமாக விநியோகிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் திணைக்களத்திற்கு நேரிற் சமுகமளித்து பெற்றுக்கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் 10 x 7 அங்குல அளவுள்ள கடிதவுறையில் தமது சுய முகவரியை


எழுதி முப்பது ரூபா (30/=) பெறுமதியுடைய முத்திரையை ஒட்டி அதனை வேறொரு கடிதவுறையில் வைத்து,

பணிப்பாளர்,

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,

248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04

என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இக்கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் “பிள்ளையார் கதை - இலவச வெளியீடு” என எழுதப்பட்டிருத்தல் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...