திங்கள், 12 மார்ச், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8990) பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்த்தனையின் மூலம் யாகசாலையில் வைத்து என்ன செய்யப்படுகின்றன?

யாகமும் பூஜைகளும்

8991) சக்திவாய்ந்த மந்திரங்களால் கும்ப நீரு என்ன செய்யப்படுகிறது?

சுத்தி செய்யப்படுகிறது

8992) கும்ப நீர் இவ்வாறு சுத்தி செய்யப்பட்டு என்ன செய்யப்படுகிறது?

தெய்வ ஆவாகனம்

8993) இந்த நீர் கெடாதிருக்க என்ன சேர்க்கப்படுகின்றன?

கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ.

8994) இதில் மாவிலை வைக்கப்படுவது ஏன்?

அஷ்ட லஷ்மிகளின் கடாட்சம் நிறைந்திருக்க

8995) கும்பம் எத்தனை மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது?

எட்டு

8996) அந்த எட்டு மங்கலப் பொருட் களையும் தருக.

தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை.

8997 சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராக பயன் படுவது எது?

ஸ்ரீ

8998 ஸ்ரீ என்பது எதைக் குறிக்கும்?

செல்வத்தை

8999 செல்வதுக்கு உரிய கடவுள் யார்?

இலட்சுமி

9000 இலட்சுமி யாரின் துணைவி யார்?

விஷ்ணுவின்

9001 ஸ்ரீதேவி என்னும் பெயர் யாரைக் குறிக்கும்?

இலட்சுமியை

9002 வளத்துக்கு உரிய கடவுள் யார்?

பிள்ளையார்

9003 ஸ்ரீ என்ற பெயர் யாரைக் குறிக்கும்?

பிள்ளையாரை

9004 புனிதத் தன்மை உள்ளவர்கள் என நம்ப ப்படுகிறவர்களின் பெயர்கள் முன் எந்த சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது?

ஸ்ரீ

9005 வேறு எந்த மதத்தில் “ஸ்ரீ” என்ற சொற் பயன்பாடு காணப்படுகிறது?

பெளத்த சமயத்தில்

9006 பெளத்த சமயத்தில் “ஸ்ரீ” என்ற பதம் இடம்பெறக் காரணம் என்ன?

வடமொழி மற்றும் இந்தியத் தோற்றத்தின் காரணமாக

9007 வணக்கத்துக்குரிய அல்லது பெரு மதிப்பு க்குரிய நபர்களின் பெயருக்கு முன் “ஸ்ரீ” என்ற பதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

பெரு மதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக




வவுனியா, சிதம்பரபுரம் (மலைக் கோவில்)
திருப்பழனி முருகன் ஆலயம்

வட மாகாணத்தில் மலை உச்சியில் இருக்கும் ஒரே முருகன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியா நகரில் தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் சிதம்பரபுரம் எனும் அழகிய கிராமத்தில்தான் இவ் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. காடு பகுதி என்பதால் யானை, மான், குரங்கு என பல மிருகங்கள் இங்கு இருந்தாலும் 1995 ஆண்டு முதலாவது மக்கள் வீடுகள் அமைத்து குடியேறினார்கள். ஆனால் இம்மலையில் முருகனுடைய கோவில் கட்டுவதற்கு முன் மலை உச்சியில் கல்லில் ஓம் என்ற எழுத்து வடிவம் இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

1996ஆம் ஆண்டு கட்டுமான பணிகளும் புனர்நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதற்குப்பின் கிணறு, வெட்டுதல், மின்சார இணைப்பு வேலைகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. வவுனியா அரசாங்க அதிபர் கே. கணேஸ் ஊடாகவே இவ்வேலைத் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலய திருப்பணி வேலைகளும் மலை ஏறி செல்வ தற்கான படி கட்டும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிரதேச செயலாளர் திருமதி துரைசாமி அம்மையாரால் வவுனியா அரசாங்க அதிபர் சன்முகத்தின் ஒத்துழைப்புடனும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் திருப்பணிகள் முடிக்கப்பட்டன.

மலை அடிவாரத்தில் விநாயகர் ஆலயம், இரண்டு கிணறுகள் மண்டபம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலை அடிவாரத்தில் காரியாலயம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அத்தோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மாத்திரம் அல்லாது கடந்த 11 வருட காலமாக வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்கள் சங்கம் உதவி வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவருடைய பங்களிப்புடன்தான் இவ்வாலயம் இத்தனை சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது கதிர்காமம் கதிரமலை (ஏழுமலை)யில் இருந்து தரிசிப்பது போன்று இருக்கும். ரம்மியமாக காற்று வீசிக் கொண்டுயிருக்கும். மேல் இருந்து வட மாகாணத்தையும் வட மத்திய மாகாணத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். இவ் மலையில் இருந்து பல மூலிகைச் செடிகள் பறிக்கப்பட்டு இயற்கை மூலிகை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னி மாவட்டத்தில் இவ்வாறான கோவில் அமைந்திருப்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

வவுனியா பிரதேச செயலாளரும் ஆலயத்தின் போஷகருமாகிய சிவபாலசுந்தரம், தற்போதைய வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து “யாத்திரிகர் மலை” என இதற்கு பெயர் சூட்டினார்கள். இவ்வாலயம் மலை உச்சியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இவ்விடத்தில் தியான மண்டபம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 650 அடி உயரத்தைக் கொண்ட இம்மலையில் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரில் இருந்து கோவில் அடிவாரம் வரை அடியார்கள் வருவதற்கு இ.போ.ச., தனியார் பஸ் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாலயத்தில் தினந்தோறும் நித்திய பூஜைகள் கந்தசஷ்டி, தைபூசம், சஷ்டி விரதம் என்பவற்றுடன் ஆடிமாத மகோற்சவம் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் போது இங்கு கொடியேற்றமும் நடைபெறும்.

ஆகவேதான் இது சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படுகின்றது. ஆலய பரிபாலன சபை தலைவர் அ. மாதவன், செயலாளர் செல்வநாயகம் (டாக்டர்), பொருளாளர் இ. பன்னீர் செல்வம், உபதலைவர் இ. ராமசாமி, உபசெயலாளர் மு. வசந்தகுமார், உறுப்பினர்கள்: தி. கிருஷாந்தன், க. தர்மகுலசிங்கம், மு. பஞ்சவர்ணம், இ. முத்தழகு, வி. அழகுமுருகன், டாக்டர் சூரியகுமார் (போஷகர்), சி. தர்மராசா (ஆலோசகர்), திருப்பழனி முருகன் அறநெறி பாடசாலை கடந்த 10 வருடங்கள் நடைபெற்று வருவதோடு, ஆலய நித்திய பூஜைகளை சுப்பிரமணியம் பூசகர், பழனியப்பன் பூசகர் மேற்கொண்டு வருகின்றனர்.

அறநெறி பாடசாலையில் செல்வி. தி. விஜித்ரா, செல்வி. வி. கீர்த்திகா ஆகியோர் ஆசிரியர்களாக கற்பிக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...