திங்கள், 4 ஜூன், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பொட்டு) 9188) பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பது எது? பொட்டு 9189) முகத்தின் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை என்னவென்பர்? நெற்றிப் பொட்டு 9190) மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் எது? நெற்றிப் பொட்டு 9191) யோகக் கலை இதனை எவ்வாறு அழைக்கிறது? ஆக்ஞா சக்கரம் 9192) எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் எதனை வெளிப்படுத்தும்? சக்தியை 9193) மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை எவை? முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் 9194) இதனை உணர்த்தக்கூடிய செயலொன்றை கூறலாமா? நம் மனம் கவலையால் வாடும்போது தலைவலி அதிகமாவது அதனால்தான். 9195) நெற்றியில் இடப்படும் திலகம் என்ன செய்கிறது? அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது 9196) வேறு என்ன செய்கிறது? நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. 9197) வட்ட வடிவ முகத்துக்கு எந்த வடிவிலான பொட்டு பொருத்தமானது? நீளமான பொட்டுகள் 9198) நீளமான பொட்டு எவ்வாறான அழகை தரும்? இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியது போல் அழகு தரும். 9199) இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால் எந்த இடத்தில் பொட்டு வைக்க வேண்டும்? புருவங்களுக்கு மத்தியில் 9200) இதய வடிவ முகம் கொண்டவர்கள் எந்த பொட்டை இட்டுக்கொண்டால் முகம் அழகாக இருக்கும்? குங்கும பொட்டை 9201) இவர்களது முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டக் கூடியது எந்த வடிவிலான பொட்டு? சிறிய அளவில் நீளமான ஸ்டிக்கர் பொட்டுக்கள் 9202) ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் எந்தப் பகுதியில் எந்தப் பொட்டு வைத்தால் அழகு அதிகரித்து காட்டப்படும்? புருவத்திற்கு மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைத்தால் 9203) இவர்களுக்கு நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தால் என்ன நடக்கும்? வசீகரமாக இருக்கும் 9204) சதுர முகம் உள்ளவர்கள் எந்த வடிவமான பொட்டுகளை வைக்கலாம்? அகலம் அதிகமுள்ள பொட்டுகளை 9205) வேறு எந்த வடிவமான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்? உருண்டை மற்றும் முட்டை 9206) வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் இவர்களுக்கு எப்படி இருக்கும்? எடுப்பாக இருக்கும் 9207) முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு எந்த பொட்டுகள் பொருந்தும்? எல்லா வகை பொட்டுகளும் 9208) இவர்களது நெற்றி அகலமாக இருந்தால் எந்த வடிவ பொட்டு பொருந்தும்? நீளமான, முக்கோண பொட்டுகள் 9209) அகலமான நெற்றியாக இருந்தால் இவர்கள் எங்கு பொட்டு வைக்க வேண்டும்? புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல். ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிN~கம்; கொழும்பு, ஆமர்வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ்ஷ மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 10ம் திகதி காலை 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 08ம் திகதி காலை 7 மணி முதல் மறுநாள் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். இன்று 4ம் திகதி கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, மஹா கும்பாபிஷேகம் ஆச்சார்ய வர்ணம், தேவ பிராமண அனுஞ்ஞை, ஸ்ரீ மஹா காளி அனுஞ்ஞை, பரிவார மூர்த்திகள் அனுஞ்ஞை திரவிய சுத்தி திரவிய யாகம், தனிபூஜை, ஸ்தல விருட்ச பூஜை, யந்திர பூஜை, பேரீதாடணம், மஹா கணபதி ஹோமம், நூதன மூர்த்திகள் பூர்வாங்க கிரியை, நூதன மூர்த்திகள் கிரம பிரதட்சணம் என்பன நடைபெறும். நாளை 5ம் திகதி காலை 8 மணிக்கு குபேர சம்புடித தனகர்ச்சனை மஹா லட்சுமி ஹோமம், யந்திர பூஜை, தீபாராதனை என்பனவும் அன்று மாலை 5 மணிக்கு கிராம சாந்தி, பிரவேச பலி என்பனவும் இடம்பெறும். எதிர்வரும் 7ம் திகதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பூமிதேவி பூஜை, கங்கா பூஜை, கோ பூஜை, சூரிய அக்னி சங்கிரணம், மிருத் சங்கிரகணம் என்பனவும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு அங்குரார்ப்பணம், சிவாச்சார்ய இரட்சாபந்தனம் என்பனவும் நடைபெறும். எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். பிரம்மஸ்ரீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் திருக்கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ சுசீந்திர குமார குருக்கள், உதவி அர்ச்சகர் பிரம்மஸ்ரீ வை. திருக்குமர சர்மா, பால சண்முகக் குருக்கள், லட்சுமி காந்த கேதீஸ்வர குருக்கள், சுதாகரக் குருக்கள், விக்னேஸ்வர குரக்கள், பைரவமூர்த்தி குருக்கள், தியாகராஜ குருக்கள், சிவபாலக் குருக்கள், அந்தர்ராம் குருக்கள், பிரபாகர குருக்கள், கு.க. வைத்தீஸ்வர குருக்கள், ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். எதிர்வரும் 10 ம் திகதி காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்றுமாலை 5 மணிக்கு சாயரட்சை, வசந்த மண்டப தீபாராதனை, திருமாங்கல்ய தாரணம் திருவூஞ்சல், நாட்டியாஞ்சலி, ஸ்வாமி வீதி, பிரதர்சனம் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...