திங்கள், 2 ஜூலை, 2012

ஸ்ரீ சக்கரம் 9241. ஸ்ரீ சக்கரத்திற்கு எத்தனை முக்கோணம் உண்டு? 43 9242. ஸ்ரீ சக்கரத்தில் எத்தனை சிவகோணம் இருக்கு? மூன்று 9243. சக்திகோணம் எத்தனை உள்ளது? ஐந்து 9244. ஸ்ரீ சக்கரத்தில் வேறு என்னென்ன இருக்கும்? அஷ்டதளம், ஷோடசதனம், மூன்று வலயங்கள், 4 சக்கரங்கள், பிந்துநாதம் கலை. 9245. ஸ்ரீ சக்கரத்தில் யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ளபடி வேறு என்ன இருக்கும்? ஆதாரங்கள். 9246. ஆதாரங்கள் எத்தனை இருக்கும்? ஆறு 9247. ஆறு ஆதாரங்களையும் தருக? மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை 9248. ஸ்ரீ சக்கரத்தில் மூலாதாரமாக விளங்குவது எது? முக்கோணம் 9249. இதில் சுவாதிஷ்டானமாக விளங்குவது எது? அஷ்டாரம் 9250. மணிபூரகமாக விளங்குவது எது? தசாரம் 9251. அனாஹதமாக விளங்குவது எது? பஹிர் தசாரம் 9252. விசுத்தியா விளங்குவது எது? மன்வச்ரம் 9253. ஆக்ஞையாக விளங்குவது எது? பிந்து 9254. அண்டத்திலே சுவாதிஷ்டான §க்ஷந்திரமாக விளங்குவது எது? திரு ஆனைகள் 9255. சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் நான்கு தளங்களைக் கொண்டு இருப்பது என்ன? ரத்னம் 9256. இந்த நான்கு தளங்களைக் கொண்டு விளங்குவது என்ன சக்கரம்? சுவாதிஷ்டானம் 9257. ஆறு இதழ்களோடு ஆறு ஆக்ஷரங்களோடு செந்நிற பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை என்னவென்று அழைப்பர்? சுவாதிஷ்டானம் 9258. அவ்விடத்தில் யார் வசிக்கின்றார்கள்? பாலன் என்ற சித்தனும் ராகினி என்ற தேவியும் 9259. ஆறு இதழ்களில்யார் வசிக்கின்றனர்? பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம், பேஷ்டி ஆகிய ஆறு தேவிகளும். 9260. இந்த ஆதாரமானது எதனுடன் இணைந்து விளங்குகிறது. அக்னி தத்துவத்துடன் 9261. இவ்விடத்திலே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருப்பது யார்? குண்டலினி 9262. குண்டலினி நானே அதிர்ஷ்டானமாகி கிரந்தினைச் செய்து கொண்டிருக்கும் என சாஸ்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்கு என்ன பெயர்? சுவாதிஷ்டானம் அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம் திருமணம் 9236) திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும் போது ஏன் கெட்டி மேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக் கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே. 9237) மணமக்கள் வீட்டுக்குள் நுழையும் போது ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்? மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? ஊர்வலம் வருகிறது என்று ஏன் சொல்லுகிறார்கள்? பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கை, கால்களைவிட வலது கை கால்கள் பலம் வாய்ந்தவை. சக்தியோடு வாழ, நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினதாலாகும். தனது வலிமையின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள். 9238) இந்துக்கள் சாதாரணமாக நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.அதன் பொருள் என்ன? இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும். நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதற்காகவே. 9239) மணமக்களை ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள் இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்கட் பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாகும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெற வேண்டும் என்பதையே இந்துக்கள் பதினாறும் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். 9240) கணவனின் பெயரை மனைவி சொன்னால் என்ன நடக்கும் என்று இந்துக்கள் நம்பினார்கள்? மரியாதையும் மங்கலமும் குறையும் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...