புதன், 28 நவம்பர், 2012

சமஸ்கிருதம் 9573. சமஸ்கிருத இலக்கியம் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது? 4000 ஆண்டுகளாக 9574. சமஸ்கிருத இலக்கிய பரப்பினை எத்தனை பெரும் பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்? மூன்று 9575. அம் மூன்று பெரும் பகுதிகளையும் தருக. வேத இக்கியம், இதிகாச இலக்கியம், பிற்கால இலக்கியம். 9576. இருக்கு, யசுர், சாமம், அதர்வம் இவை நான்கும் என்ன? வேதங்கள் 9577. வேதங்களின் சார்பு நூல்கள் எவை? பிராணங்கள், ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் 9578. வேத இலக்கியம் என அழைக்கப்படுபவை எவை? இருக்கு, யசுர், சாம, அதர்வ வேதங்களும் அவற்றின் சார்பு நூல்களான பிராணங்கள் ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் ஆகியனவும் ஆகும். 9579. இவற்றுள் உலக இலக்கியங்களில் அழகிய கவிதையோடும் சீரிய கருத்துடனும் இன்று எமக்கு கிடைத்துள்ளவற்றுள் மிகப் பழையது எது? இருக்கு வேதம் 9580. இந்நூல் எவ்வாறு திகழ்கிறது, பல ரிஷிகள் பல காலங்களில் இயற்றிய 1028 பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. 9581. இது எங்கு பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாக காணப்படுகிறது? வேள்விகளில் 9582. இதனையும் ஏனைய மூன்று வேதங்களையும் என்னவென்று அழைப்பார்கள்? சங்கிதைகள் 9583. இருக்கு வேதப் பாடல்களை வேள்வி யிலே பயன்படுத்தும் யாக விதிகளை கூறுவது எது? யசுர் வேதம் 9584. யசும் வேதம் எந்த நடையில் அமைந்துள்ளது? வசன நடையில் 9585. யசுர் வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? இரண்டு 9586. அந்த இரண்டு பிரிவுகளையும் தருக. கிருஷ்ண யசுர் வேதம், சுக்ல யசுர் வேதம் 9587. ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒரே வட்டத்தைச் சேர்ந்த மூன்று வேதங்கள் எவை? இருக்கு, யசுர், சாமம் 9588. இந்த மூன்று வேதத்திலும் கூறப்பட்டுள்ளவை எவை? வேள்வியிலே பயன்படுத்தப்படும் பாடல்கள், அதற்கான இசை, கிரியை விதிகள். 9589. பாமர மக்களின் சமய நம்பிக்கை களும் சமூகப் பழக்க வழக்கங்களும் எந்த வேதத்தில் இடம்பெற்றுள் ளன. அதர்வ வேதங் களில் 9590. அதர்வ வேதத்தில் எவ்வாறான பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன? மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அல்லல்களை நீக்கவல்ல பாடல்கள் 9591. இந்த நான்கு வேதத் திற்கும் தனித்தனியே என் னென்ன காணப்படு கின்றன? பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் 9592. வேள்விகளுக்கான வேத சூக்தங்கள் வேள்வி விதிகளின் விபரங்கள் விளக்கங்கள் முதலியன எதில் உள்ளன? பிராமணங்களில் 9593. காட்டில் வாழும் துறவிகளுக்காக எழுதப்பட்டவை எவை? ஆரணியங்கள் 9594. ஆரணியங்களில் இடம் பெற்றிருப்பது என்ன? வேள்விகளுக்கான மறை பொருள் விளக்கம். 9595. ஆரணியங்களைத் தொடர்ந்து தோன்றிய தத்துவ நூல்கள் எவை? உபநிடதங்கள் 9596. இவை வைதீக சிந்தனையின் சாரமாகவும் முடிவாகவும் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது? வேதாந்தம் 9597. இவை சூத்திர வடிவில் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது? சூத்திரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...