ஞாயிறு, 24 மார்ச், 2013

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

கொழும்பு மாநகரிலே பொரளைக்கு அண்மித்ததாக கொழும்பு 7இல் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்பு டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி ஒரு கனிஷ்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதலாம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரைதான் வகுப்புக்கள் இருந்தன. இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது 120 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் மட்டுமே இருந்தனர். அதில் 28 பிள்ளைகள் தமிழ் மொழி மூல பிள்ளைகளும், ஒரேயொரு தமிழ் ஆசிரியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது ஆசிரியராகக் கடமையாற்றிய ஒரேயொரு தமிழ் ஆசிரியர் சி. தாமோதரம்பிள்ளை என்பவராவார். காலப்போக்கில் இவர் தமிழ்ப் பிரிவின் தலைமை ஆசரியராக கடமையாற்றினார். இவரது தலைமையில் 1969 ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக இயங்கிக்கொண்டிருந்த பாடசாலையில் காலப்போக்கில் (க. பொ. த. சா.தரம்) 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற தரமுயர்த்தப் பட்டதுடன் அதன் பின் உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறும் வண்ணம் தரமுயர்த்தப்பட்டது. ஆர். ஐ. டீ. அலஸ் அதிபராக இருந்தபோது 1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலுள்ள நான்கு மதங்களுக்குமுரிய வணக்கஸ்தலங்கள் அமைக்க வேண்டுமென பேசப்பட்டது. இவ்வாறாகப் பேசப்பட்டு 1990 ஆம் 91 ஆம் ஆண்டுகளில் நான்கு மாதங்களையும் சேர்ந்த வணக்கஸ்தலங்களும் அமைக்கப்பட்டதுடன் 1992 ஆம் ஆண்டு இங்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதிஷ்ட கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் ஆலயத்தில் வர்ணப் பூச்சு வேலைகளைச் செய்து முதலாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க தனது தந்தையின் திருநாமத்தால் ஒரு பாடசாலையை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த டி. எஸ். சேனநாயக்க கல்லூரியை ஸ்தாபித்தார். 1969 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தாமோதரம்பிள்ளை தெரிவானது குறிப்பிடத்தக்கது. இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை அங்கு ஆசிரியராக கடமையாற்றினார். 1976 ஆம் ஆண்டு இவர் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இ. க. குலசேகரம் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1976 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களான திருமதி வேலய்யா, செல்வகுமார், இந்திரன் ஆகியோர் இந்தப் பாடசாலையில் இந்து மத வளர்ச்சிக்கும் ஆலய வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றியவர்களாவர். இவர்கள் கடமையாற்றிய பாலஸ்தாபனத்தின் போது அடிக்கல் நாட்டப்படுகிறது காலத்திலே யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலிருந்து தங்கம்மா அப்புக்குட்டி, புலவர் கீரன் போன்ற மதப் பெரியார்களை அழைத்துவந்து பிரசங்கங்கள் நடத்தப்பட்டன. செல்லையா இராஜதுரை, செளமியமூர்த்தி தொண்டமான், பி. பி. தேவராஜ். பெ. சந்திரசேகரன் ஆகிய அரசியல்வாதிகளையும் இந்தப் பாடசாலைக்கு அதிதிகளாக அழைத்து இந்து மதப் பணிக்கு ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அது மாத்திரமன்றி முன்பு சிவராத்திரி வருகின்ற போது இந்தப் பாடசாலை மாணவர்களை முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதர் தேவஸ்தானத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் கண் விழிக்க வைத்து விரதம் இருக்கச் செய்து மறுநாள் அழைத்து வருவதுமுண்டு என்று இந்தப் பாடசாலையின் பழைய மாணவரும் இந்தப் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய வருமான கணேசராஜா தெரிவித்தார். தற்பொழுது இந்தப் பாடசாலையின் அதிபராக டி. எம். டி. திசாநாயக்கவும், உப அதிபராக பரமேஸ்வரனும், உதவி அதிபராக திருமதி சிவபாலனும் கடமையாற்றிக் கொண்டிருப்பதுடன் இந்து மன்ற பொறுப்பாளராக ஆசிரியர் ஜெயரத்தினம் சேவையாற்றி வருகின்றனர். இப்பொழுது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் 18 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. தற்பொழுது சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலையும் புதிதாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அமைக்கப்பட்டதிலிருந்து ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு ஏற்ப பூஜை புனஸ்காரங்களை செய்யவும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விரதங்களுக்கு ஏற்ப பூஜைகளை செய்யவும் வழி அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களும், உப, உதவி அதிபர்களும் ஏனைய மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதற்கு மேலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். கே.ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...