திங்கள், 12 மே, 2014

கர்ணன்

(10797) கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் யார்? துர்வாசர் முனிவர் ஆவார். (10798) துர்வாசர் முனிவர் செய்தது என்ன? குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர் அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. (10799) அந்த மந்திரத்தின் பின்அளவைப் பற்றி விழிப்பு ணர்வின்றி குந்திதேவி என்ன செய்தார்? தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. (10800) கர்ணணை ¨க்ஷத்ரியராக ஏற்றுக் கொள்ளல் மறுக்கப்பட்டது ஏன்? தேரோட்டின் அதிரதனினால் அவர் வளர்க்கப்பட்டதால் (10801) அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் யார்? கர்ணன் (10802) கர்ணன் அத்தினபுரம் சிம்மாசனத்திற்குரிய நபர் என்று அறியப்படாமல் இருந்ததற்கு காரணம் என்ன? கர்ணனின் பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் ஆகும். (10803) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் யார்? இந்திரன் (10804) இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த இந்திரன் என்ன செய்தார்? கர்ணனின் தொடையைக் குடைந்தார் (10805) இதனால் கோபம் அடைந்தவர் யார்? பரசுராமர் (10806) பரசுராமர் யாருக்கு சாபமிட்டார்? கர்ணனுக்கு (10807) இவர் கர்ணனுக்கு ஏன் சாபமிட்டார்? தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக (10808) குருஷேத்திரத்தில் நடக்கவிருந்த படுகொலை பற்றி யாருக்கு தெரியும் என்று வெளி யிடப்பட்டது? பரசுராமருக்கு

புதன், 7 மே, 2014

கர்ணன்

(10768) குந்தி இளமையாக இருந்த போது அவரது தந்தையின் இடத்திற்கு வந்தவர் யார்? துர்வாச முனிவர். (10769) குந்திதேவி துர்வாச முனிவருக்கு எவ்வளவு காலம் பணிவிடை செய்தார்? ஒரு ஆண்டு முழுவதும் (10770) அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் என்ன செய்தார்? அவரது எதிர்காலத்து துயரம் பற்றி கணித்து திருமணத்துக்குப் பின்னர் பாண்டு மூலம் அல்லாத குழந்தையால் ஏற்படும் சிக்கல் பற்றிக் கூறினார். (10771) குந்திதேவிக்கு இவ்வாறு கூறிய துர்வாச முனிவர் என்ன செய்தார்? அவரது துன்பத்தைத் தீர்க்க வரம் ஒன்றை அளித்தார் (10772) அவர் அளித்த வரம் என்ன? குந்திதேவி தனது விருப்பப்படி எந்தக் கடவுளையும் அழைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் (10773) குந்தி மணமாகாமல் இருக்கும் போது என்ன செய்தார்? குந்தியின் முன்னாள் தோன்றி அந்த வரத்தின் சக்தியை சோதிக்க முடிவு செய்தார் (10774) அவர் மந்திரத்தை உச்சரித்து யாரை அழைத்தார்? சூரிய பகவானை (10775) மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு சூரியன் என்ன செய்தார்? அவருக்கு மகனை அளித்தார். (10776) இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? கவசா, குண்டலா அணிந்தே பிறந்தது (10777) கவசா என்பது என்ன? போர்க்கவசம் (10778) குண்டலா என்பது என்ன? காது வளையங்கள் (10779) குழந்தை பிறந்ததும் குந்தி தேவி என்ன செய்தார்? மணமாகாத தாயாக உலகத்தை சந்திக்க விருப்பமின்றி இருந்தார். (10780) இதனால் குந்திதேவி என்ன செய்தாள்? அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து புனித நதியான கங்கையில் மிதக்க விட்டால். (10781) குந்திதேவி இவ்வாறு செய்தது ஏன்? அக்குழந்தை வேறொரு குடும்பத்தால் எடு த்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் (10782) குந்திதேவி யாரது துணையுடன் குழந்தையை நதியில் மிதக்க விட்டார்? அவரது தோழியான தத்ரியின் துணையுடன் (10783) நதியில் மிதந்து வந்த குழந்தை கர்ணனை கண்டெடுத்தது யார்? அதிரதன் (10784) அதிரதன் யார்? தேரோட்டி (10785) யாருடைய தேரோட்டி? திரிதராடிராவின் (10786) திரிதராஷ்டிரா யார்? ஒரு அரசர் (10787) அதிரதனின் மனைவியின் பெயர் என்ன? ராதா (10788) அதிரதனும் ராதாவும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து வந்தார்கள்? தங்களின் சொந்த மகனாகவே வளர்ந்தனர் (10789) இவர்கள் கர்ணனுக்கு இட்ட பெயர் என்ன? வாசுசேனா (10790) கர்ணனை இவர்கள் வேறு எவ்வாறு அழைத்தனர்? ராதேயன் (10791) ராதேயன் என்பதன் பொருள் என்ன? ராதாவின் மகன் (10792) கர்ணன் என்பதன் பொருள் என்ன? காது (10793) கர்ணன் எந்த தேசத்தின் அரசனானான்? அங்க தேசத்தின் (10794) கர்ணனின் உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது எப்போது? அங்க தேசத்தின் அரசனான பின்பு (10795) அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்ததும் கர்ணனுக்கு அது மகிழ்வைத் தந்ததா? இல்லை. வெறுப்பை உண்டாக்கியது. (10796) அவரது மனைவியின் பெயர் என்ன? விருஷாலி

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...