ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி



நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன்.

குருஷேத்திரப் போர் தொடங்கும் நேரத்தில் தன் எதிரில் நின்ற உறவுகளைக் கண்டதும் அர்ச்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினான். அவனுக்குள் எழுந்த எண்ணற்ற சந்தேகங்களுக்கு கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக உருப்பெற்று விளங்குகிறது. மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக ‘பகவத் கீதை’ நூல் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர், தனக்கு போதித்த கீதையைப் பற்றியே அர்ச்சுனனுக்கு சந்தேகம் எழுந்தது. அவனது எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ‘நுட்பமான பல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல, கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந் தெடுத்தார்? தத்துவ உபதேசங்களுக்குத் தகுதியான பிதாமகர் பீஷ்மரிடம் ஏன் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பீஷ்மர் எதிர் முகாமில் இருந்ததால் அவரை தவிர்த்திருப்பாரோ?.. ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே! அவரை விட கீதையைக் கேட்க பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? வயதில் மூத்தவராகவும் தரும நீதிகளை உணர்ந்தவராகவும் இருக்கும் தருமனை, ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? பீமன் பலசாலி மட்டுமல்லாது.. மிகச் சிறந்த பக்திமானும் கூட.. இதுபோன்ற நல்லவர்களை எல்லாம் விட்டு விட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டம் உள்ளவனும் உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்பவனும் ஆத்திரக்காரனுமான என்னை எதற்காக கீதை உபதேசம் கேட்க தகுதி உள்ளவனாக தேர்வு செய்தார்’ என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ச்சுனன்.

தன்னுடைய சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டு விட எண்ணினான். அதன்படி கிருஷ்ணரைச் சந்தித்து தன்னுடைய சந்தேகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தான்.

அவனது சந்தேகத்தைக் கேட்டதும் கிருஷ்ணர் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசம் செய்யவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்களை உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிட முடியாது.

அந்த சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதால் தான் சிறப்பு வந்து சேரும். கெளரவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே சாய்ந் திருந்தார். அதே சமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறினார். இப்படி ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போடுவது சரியில்லாதது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக யாரிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மன் கீதை கேட்கத் தகுதியானவர் என்பதும் உன்னுடைய எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்து விட்டுப் பிறகு வருந்துபவர். தர்மன் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் அவன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தால் அவனால் விளைந்த விபரீதங்களே ஏராளம்.

ஆனால் நீ இவர்களைப் போன்றவன் அல்ல, சிறந்த வீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தைகளைக் கற்றவன் என்றாலும் கூட நீ முன் சிந்தனை கொண்டவனாக இருக்கிறாய். அதுதான் உன்னுடைய தனிச் சிறப்பு. நீ இப்போது வாதிடுவதில் இருந்தே தெரியவில்லையா? உன்னைவிட வயதிலும் அறிவிலும் பெரியவர்களான பலரை மதித்ததன் காரணமாகவே நீ என்னிடம் இப்போது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறாய். குருஷேத்திர களத்தில் நின்றபோதும் உற்றார்- உறவினர், மதிப்பிற்குரிய பெரியவர்களை எல்லாம் எப்படிக் கொல்வது?, இந்த யுத்தமும், இழப்பும் தேவைதானா? அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியை பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கியவன் நீ. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.

பழைய விரோதங்களுக்கு பழிவாங்க நினைத்திருந்தாலும் களத்தில் புகுந்தபோது போரே வேண்டாம் என்று எண்ணும் உள்ளம் உன்னிடம் இருந்தது. நீதி எது? அநீதி எது? என்று ஓரளவு சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந் திருக்கிறாய். இதுபோன்ற விஷயங்கள்தான் உனக்கு நான் கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன். இதைத்தவிர நான் உனக்கு எந்த சிறப்புச் சலுகையும் வழங்கவில்லை’ என்றார் கிருஷ்ணர்.

தன்னை கிருஷ்ணர் கீதை கேட்க தேர்வு செய்த விதத்தை எண்ணி மெய்சிலிர்த்த அர்ச்சுனன் அடக்கத்தோடு அவரை வணங்கி நின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...