புதன், 14 அக்டோபர், 2020

Navarathri 17.10.2020

நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள். விரதமுறை: நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாகக் கருதி வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்ததால் இவளை, சாமுண்டா என்றும் அழைப்பர். இவள் நீதியை காக்க கோபமாக இருக்கிறாள். இவளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும். இரண்டாம் நாள் அம்பிகையை வாராஹியாக வழிபடவேண்டும். இவளுக்கு தயிர்ச்சாதம் படைத்து வணங்க வேண்டும். மூன்றாம் நாள் அம்பிகையை இந்திராணியாக வணங்க வேண்டும். அரச பதவிகள், அரசு பதவிகள் அனைத்தும் இவள் அருளாலேயே கிடைக்கும். இவளுக்கு எலுமிச்சை சாதம் படைக்க வேண்டும். நான்காம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக கருதி வழிபட வேண்டும். இவளை விஷ்ணு சக்தி என்பர். இவளுக்கு கல்கண்டு சாதம் படைக்க வேண்டும். ஐந்தாம் நாள் அம்பாளை திரிசூலம், பிறைசந்திரன், பாம்பு ஆகியவை தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். இவளை மஹதீ என்றும் அழைப்பர். சர்வமங்களம் தரும் இவள் தர்மத்தின் திருவுருவமானவள். உழவர்கள், உடலுழைப்பு கொண்டவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும் வரத்தைத் தருபவள். இவளுக்கு பால் பாயசம் படைக்க வேண்டும். ஆறாம் நாள் நாள் அம்பாளை மயில் வாகனத்துடன், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்பர். இவள் தைரியத்தை அருளுபவள். பாவங்களைப் போக்குபவள். குமார கண நாதம்பா என்றும் இவளை அழைப்பர். இவளுக்கு சித்ரான்னம் படைக்க வேண்டும். ஏழாம் நாளில் இருந்து அம்பிகையை கல்வி தெய்வமாக கருதி வழிபட வேண்டும். இதன் முதல் கட்டமாக அவளை வித்யாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரையை ஆசனமாகக் கொண்டு, தாமரை மலரேந்தி, யானைகளை இருபுறமும் நிறுத்த வேண்டும். இவளது கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுதகலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். இவளுக்கு பால் அன்னம் நிவேதனம் வைக்க வேண்டும். எட்டாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். இவள் சரஸ்வதி வடிவம் தாங்கியவள். அன்ன வாகனம் அமைத்து, அதில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, வெள்ளைத் தாமரை மேடை அமைத்து, அதில் சரஸ்வதியாக அம்பிகையை அலங்கரித்து அமர்த்த வேண்டும். வீணை இருக்கக்கூடாது. கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். விரல்களை சூசிஹஸ்தம் என்னும் நிலையில் வைக்க வேண்டும். அதாவது ஆள்காட்டி விரல் மட்டும் விரிந்திருக்க மற்ற விரல்கள் மடங்கியிருக்க வேண்டும். இவ்வுலகம் பொய்யானது, அவ்வுலகம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது என்ற ஞானத்தை இந்த முத்திரை பக்தர்களுக்கு உணர்த்தும். இவளுக்கு புளியோதரை நிவேதனம் செய்ய வேண்டும். அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். இந்நாளில் அம்பிகையை நரசிம்ஹியாகவும் அலங்கரிப்பதுண்டு. இவளுக்கு வெண்பொங்கல் படைக்க வேண்டும். நவராத்திரி பிரார்த்தனை: நவராத்திரி நாட்களில் மாலைவேளையில் பக்தி சிரத்தையோடு, அம்பாள் முன்னிலையில் இதனைப் படிப்பவர்கள் அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...