வியாழன், 5 மே, 2022

கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருபவர் கணவர்

பரதநாட்டியக் கலைஞராக தன் திறமையை காட்டிவரும் திருமதி தர்ஷி சுகன் ஆன்மீகம், கலை, கலாசாரம் என பல் வேறு துறைகளில் அரும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரை அண்மையில் செந்துாரம் இதழுக்கு பேட்டி கண்ட போது அவர் அளித்த விபரங்கள் வருமாறு, உங்களைப் பற்றி கூறுங்களேன்......... நான் தென்கைலை எனப் பெயர் பெற்ற திருகோணமலை நகரில் பிரபல மருத்துவரான Dr. நடராஜகுரு ரவிச்சந்திரனுக்கும் திருமதி கருணைமணிக்கும் (மலர்) இரண்டு சகோதரர்களுடன் கனிஷ்ட புதல்வியாகப் பிறந்தேன். எனது மூத்த சகோதரர் துஷ்யந்தன். இளைய சகோதரர் ஹ்ரித்திக்ரோஷன். கல்வியில் கரைகண்ட விபரங்கள் பற்றி கூறுங்களேன்.... எனது ஆரம்பக் கல்வியினை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் (St. Mary's College) ஆரம்பித்து திருமலை புனித பிரான்சிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் (St. Francis Xavier TMV) நிறைவு செய்தேன். நடனத்தில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன? சிறுவயதில் இருந்தே எனக்கு நடனம் பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது தந்தையாரும் சிறு வயதில் நடனம் கற்றுப் பின் மருத்துவக் கல்வி காரணமாகத் தொடரமுடியாமல் கைவிட்டார். அதனால் அவரது கனவும் என்னை நடனக்கலையில் சிறந்த தேர்ச்சி பெற்றவளாக்க வேண்டும் என்பதே. அவரது கனவுடன் எனது ஆர்வத்தினையும் புரிந்து கொண்ட எனது தந்தையார் நான் பரதநாட்டியக் கலையைப் பயில்வதற்குப் பலவழிகளிலும் ஊக்கமளித்தார். அதற்கு வித்திடும் வகையில் எனது ஆரம்ப நடனக்கல்வியை நடன ஆசிரியை திருமதி சசிகலா பிரபாகரனிடம் மிகவும் ஆரவத்துடன் பயில ஆரம்பித்தேன். அத்துடன் எனது பாடசாலை ஆசிரியை திருமதி கலைச்செல்வி ரவிச்சந்திரனிடமும் நடனம் பயின்றேன். பாடசாலையில் பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றிப் பரிசில்களையும் பாராட்டினையும் பெற்றேன். அதன் பிறகு எனது தந்தையாரது தொழில் இடமாற்றம் காரணமாக தலைநகராம் கொழும்பிற்குக் குடிபெயர்ந்தோம். அங்கு கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா நாட்டியப்பள்ளியில் நடன ஆசிரியை திருமதி சுமதியிடம் நடனக் கல்வியைத் தொடர்ந்தேன். அதே போன்று இசைக் கலையையும் முறையாகப் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை சங்கீத சபை நிறுவனரும் அதன் அதிபருமான திருமதி கௌரீஸ்வரி ராஜப்பனிடம் சங்கீதம் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி பரமேஸ்வரி மோகனவேலிடம் வயலின் கலையையும், திருமதி ராதிகா மற்றும் திருமதி அனுஷா மொறாயஸிடம் வீணைக் கலையையும் முறையாகப் பயின்றேன். அத்துடன் நில்லாது திருமதி துஷ்யந்தி பிரகலாதனிடமும் நடனம் பயிலத் தொடங்கினேன். அவர் எனது திறமையினைப் பட்டைதீட்டி நடனக் கலையில் தேர்ச்சி பெறப் பெரிதும் பாடுபட்டார். அருங்கலையைப் போதித்து அனுபவங்களைப் பகிர்ந்து ஆயகலைகள் கற்பித்து வாழ்விற்கு வழிகாட்டும் வாழ்வியல் புத்தகமே இவர் எனது தந்தையையும் தாயையும் போன்றும் ஒரு உற்ற நண்பனைப் போன்றும் என்னை வழி நடத்திய ஆசிரியர் என்றே கூறலாம். இவரது ஊக்கத்தின் காரணமாகவும் எனது தந்தையாரின் முயற்சியினாலும் என்னுடைய மேற்படிப்பினை இந்தியாவில் சர்வதேசப் புகழ் பெற்ற திருச்சி மாநகரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியக் கல்வியைப் பயின்று முதல் வகுப்பில் தேறி பரதநாட்டியத்தில் இளங்கலைப் (BFA) பட்டம் பெற்றேன். இதற்குப் பலவழிகளிலும் எனது தந்தையுடன் இணைந்து எனது கணவர் சுகந்தன் உதவி புரிந்தார். எனக்கு அமைந்த கணவர் மிகவும் சிறந்தவர் என்பதுடன் அவர் ஒரு ஆன்மீகவாதியுமாவார். நான் எனது இலட்சியத்தினை அடைய அரும்பாடு பட்டவர்களில் அவரும் ஒருவராவார். இன்றுவரை எனது கலைப்பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றார். கோணேஸ்வரா இசை நாட்டியப்பள்ளியை நிறுவிப் பல மாணவர்களுக்கு இசை, நடன வகுப்புகளை நடாத்தி வருகின்றேன். அத்துடன் ஹேகித்தை சபரிகிரீஷ ஐயப்பன் தேவஸ்தானத்தில் அறநெறி ஆசிரியையாகவும் வத்தளை ஹூணுப்பிட்டி அருண் மாணிக்கவாசகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றேன். இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிச் சான்றிதழ்களையும், வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட நடனம், இசை மற்றும் வீணைப் பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளேன். கே. ஈஸ்வரலிங்கம் எனது மகள்மார் ரம்யவர்ஷினி , சதுர்ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...