திங்கள், 30 ஆகஸ்ட், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம் -
தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(கோலம்)

7203) விஷ்ணு பகவான் கோலம் இடுதலை என்னவென்று குறிப்பிடுகிறார்?
பிண்டி மாறுதல்

7204) விஷ்ணு பகவான் கோலத்தை இவ்வாறு கூறியது ஏன்?
அரிசி மாவினால் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட அந்த மாவை எறும்புகளும் காகங்களும் பிற உயிரினங்களும் உண்பதிலிருந்து நம் தர்ம சிந்தனை தொடங்க வேண்டும் என்பதுதான் அவர் சொன்னதன் பொருளாகும்.

7205) இந்த அரிசி மாவை உண்ணும் எறும்புகள் என்ன செய்யுமாம்?
இப்படிப்பட்ட தர்மத்தைச் செய்தவர்களின் கண்பார்வை நன்கு விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுமாம்.

7206) வைகுண்டத்தில் யார் கோலம் போட்டதாக புராணங்கள் கூறுகின்றன?
மஹா லட்சுமி

7207) மாக்கோலம் இடும்போது செம்மண் கரை தீட்டுவார்கள் இது ஏன்?
அழகுக்காகவா? அழகுக்காக மட்டுமல்ல, வெள்ளையும் சிவப்புமாய் கோலம் போடுவது விஷ்ணுவிற்கே கோயில் கட்டுவது போலாகுமாம்!


(இராஜகோபுரம்)

7208 இராஜகோபுரத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தூலலிங்கம்

7209 தூலம் என்பதன் பொருள் என்ன?
கண்ணால் பார்க்கக்கூடியது

7210 யோகிகள் கோபுரத்தை என்னவென்று குறிப்பிடுவார்கள்?
பிரமந்திர மத்ய கபாலத்வாரம்.

7211 கோபுரம் எத்தனை அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்படும்?
3, 5, 7, 9.

7212 மூன்று அடுக்கு கோபுரம் எதனை குறிக்கும்?
ஐம்பொறிகளை

7213 ஐந்து அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி

7214 ஒன்பது அடுக்கு கோபுரம் எவற்றைக் குறிக்கும்?
ஐம்பொறிகளுடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றை

(தீபாராதனை)

7215 இறைவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்?
16 வகை

7216 16 வகை உபசாரங்களில் மிகச் சிறந்தது எது?
தீபாராதனை.

7217 முக்கோடி தேவர்களும் தீபங்களில் அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வது எப்போது? தீபாராதனையின்போது.

7218 தீபாராதனையின் போது தீபத்தை இறைவனுக்கு எத்தனை முறை காட்டுவார்கள்? மும்முறை.

7219 முதல் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தை காக்க.

7220 இரண்டாம் சுற்று எதன் பொருட்டு காட்டப்படுகிறது?
அண்ட சராசரத்தில் உள்ள ஜீவராசிகளை காக்க.

7221 மூன்றாம் சுற்று எதற்காக காட்டப்படுகிறது?
பஞ்ச பூதங்களை காக்க.

7222 ஒன்பது தீபங்கள் எதைக்குறிக்கும்?
நவசக்தியை.

7223 ஏழு தீபங்கள் எதைக் குவிக்கும்?
சப்த கன்னியரை

7224 ஐந்து தீபங்கள் எதைக் குறிக்கும்?
ஐந்து கலைகளை.

7225 மூன்று தீபங்கள் எதைக் குறிக்கும்?
சூரிய, சந்திர, அக்கினியை.

7226 அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியை குறிப்பது எந்த தீபம்?
ஒற்றைத்தீபம்.

7227 தீபாராதனையில் இறுதியாக காட்டப்படுவது எந்த தீபம்?
கும்ப தீபம்

7228 கும்பதீபம் எதை குறிக்கும்?
உலக தத்துவமான சதாசிவத் தத்துவத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...