திங்கள், 4 அக்டோபர், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(விநாயக சஷ்டி)


8037) விரத காப்பை எப்போது கட்டிக்கொள்ள வேண்டும்?

விரத ஆரம்ப நாளில்

8038) எத்தனை இழையிலான விரத காப்பை கட்டிக் கொள்ள வேண்டும்?

21 இழையிலான

8039) பெண்கள் விரதக் காப்பை எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

இடது கையில்

8040) ஆண்கள் எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

வலது கையில்

8041) விரதாரம்பத்தில் பவித்ரம் அணிந்து சங்கல்பம் செய்யும் போது காப்பு கட்டுவது எந்தெந்த விரதங்களின் போது என்று கூற முடியுமா?

விநாயக சஷ்டி, கந்த சஷ்டி விரதங்களின் போது

8042) இந்தக் காப்பை எப்போது அவிழ்க்க வேண்டும்?

விரதம் முடிந்த மறுநாள் அதாவது பாரணையிலன்று காலை விதுர் ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும்.

8043) விநாயக சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து இடையிலே கைவிட்டு விரதக் காப்பையும் அவிழ்த்து வீசிய பெண் யார்?

இலக்கணசுந்தரி

8044) இலக்கண சுந்தரி யாருடைய மனைவி?

விக்கிரமாதித்த மன்னனின்

8045) விரதக் காப்பை வீசியதால் இலக்கண சுந்தரிக்கு நேர்ந்தது என்ன?

அன்றிலிருந்து அநேக கஷ்டங்களை அடைந்து மன்னனால் விலக்கப்பட்டு காட்டையடைந்தாள்.

8046) அவள் வீசிய காப்பு எதன் மீது விழுந்தது?

ஒரு அவரைக் கொடி மீது

8047) அந்த அவரைக் கொடிக்கு என்ன நேர்ந்தது?

அளவின்றிச் செழித்து வளர்ந்தது.

8048) அவரைக் கொடியிற் கிடந்த விரதக் காப்பைக் கண்டெடுத்து அணிந்து கொண்டது யார்?

பணிப்பெண்ணொருத்தி

8049) இவள் இந்த விரதக் காப்பை என்ன செய்தாள்?

தான் அதனைக் கையில் கட்டி விரதம் அனுஷ்டித்தாள்

8050) அவ்விரத பலனாக அவள் பெற்ற பெறுபேறு என்ன?

மன்னனை மணந்து அரண்மனை சேர்ந்தது.

8051) காட்டில் இருந்த இலக்கணசுந்தரி என்ன செய்தாள்?

அங்கொரு மூதாட்டியின் அறிவுரைப்படி விநாயக சஷ்டி விரதத்தை மறுபடி தொடங்கி முறைப்படி நோற்றாள்.

8052) அந்நாளில் காட்டுக்கு வேட்டையாட வந்தது யார்?

விக்கரமாதித்த மன்னன்

8053) வேட்டையாட வந்த விக்கிரமாதித்தனுக்கு என்ன நடந்தது? களைப்பால் தாகம் ஏற்பட்டது

8054) விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

தண்ணீருக்காக இலக்கண சுந்தரி இருந்த குடிலை நாடினார்.

8055) இலக்கண சுந்தரியைக் கண்ட விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

மறுபடி அவளை மணம் செய்து அழைத்துச்சென்றான்.

8056) ஒரு பொதுத் தெய்வமாக வணங்கப்படுபவர் யார்?

விநாயகர்

8057) இவர் ஏன் ‘பொதுத் தெய்வமமாக’ கருதப்படுகிறார்?

இந்துக்கள், பெளத்தர்கள், வைஷ்ணவர்கள் என அனைவரும் வணங்குவதால்.

8058) பெளத்தர்கள் கணபதியை என்ன சொல்லி போற்றி வணங்குகிறார்கள்?

‘சித்தி தாதா’ என்று

8059) ‘கணபதி ஹிருதயம்’ என்ற ஸ்தோத்திரம் யாரால் உபதேசிக்கப்பட்டது?

புத்தபகவானால்

8060) இது யாருக்கு உபதேசிக்கப்பட்டது?

ஆனந்தர் என்பவருக்கு

8061) கணபதி ஹிருதயத்தை புத்தர் உபதேசித்தார் என்று எதில் கூறுப்பட்டுள்ளது?

நேபாள புராணக் கதையில்

8062) இந்து மதத்திற்கு மூலாதாரமாக விளங்குவது எது?

அறுவகைச் சமய வழிபாடு

8063) இதனை அருளியது யார்?

ஸ்ரீ சங்கரர்

8064) அறுவகைச் சமய வழிபாட்டில் கணபதியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயம் எது?

காணபத்தியம்

8065) விநாயகரின் திருவுருவம் எத்தனை என போற்றி வணங்கப்படுகிறது?

32

8066) அந்த 32 நாமங்களையும் தருக?

பால கணபதி, பக்தி கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்விஜ கணபதி, சித்தி கணபதி உச்சிஷ்ட கணபதி, ஷிய்ர கணபதி, விக்ன கணபதி, ஹோரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊருத்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாஷர கணபதி, ஷிப்ரபிரசாத கணபதி, ஹரித்திரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரணமோசண கணபதி, துண்டி கணபதி, துவிமுக கணபதி, மும்முக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...