திங்கள், 4 ஏப்ரல், 2011

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள் ஆலய வள்ளுவர் அறநெறி பாடசாலை



மட்டக்குளி, கதிரானவத்த, எக்கமுத்தபுரவில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றவள் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்.

கொழும்பு நாரஹேன்பிட்டி, மாவத்தை ஆகிய பகுதிகளின் சேரிப்புறங்களில் வாழ்ந்தவர்கள் 1991 ஆம் ஆண்டு இங்கு குடியேற்றப்பட்டனர். நகர சபைக்கு சொந்தமான சதுப்பு நிலமாக இருந்த பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் இரண்டு கட்டங்களாக குடியேற்றப்பட்டன. இவ்வாறு இங்கு வந்து குடியேறியோர் கோயில் இல்லாத குறையை கண்டனர். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று கூறுவதால் இவர்கள் இங்கு கோயிலொன்றை எழுப்ப தலைப்பட்டனர். இதன் விளைவாக 1993ஆம் ஆண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தோடு சேர்ந்ததாக 1995 ஆம் ஆண்டு வள்ளுவர் அறநெறி மன்றம் அமைக்கப்பட்டது. கே. பி. பத்மராஜா இந்த மன்றத்தை ஸ்தாபித்து இதன் தலைவராக இன்றும் இருந்து வழிநடத்தி வருகிறார். இம்மன்றத்தின் வரழைத் தொடர்ந்து 1995.03.26 ஆம் திகதி இங்கு வள்ளுவர் அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை உள்ள இந்தப் பாடசாலையில் இன்று 150 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 9 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கு 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை மாதாந்தம் சம்பளம் வழங்கப்படுகிறது. திருமதி எஸ். பத்மராணி (நந்தினி) இதன் தலைமை ஆசிரியராகவும் எம். செல்வகுமார் நடன ஆசிரியராகவும் இங்கு பணிபுரிகின்றனர். இங்கு தற்போது ஆசிரியராக இருக்கும் விஸ்வலிங்கம் வித்தியா, கந்தசாமி முகுந்தினி ஆகிய இருவரும் இதே பாடசாலையில் கல்வி கற்றவர்கள். இவர்களைத் தவிர திருமதி மைக்கல் சித்ராதேவி, திருமதி எஸ். சாந்தி, திருமதி கருப்பையா புஷ்பலதா, திருமதி சிவராஜா சாந்தி, சிவசங்கர், கே. கோபிகா ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர்.

வள்ளுவர் அறநெறி மன்றத்தின் செயலாளராக எஸ். புனிதாவும், பொருளாளராக ஆர். நாகேஸ்வரனும் இருக்கின்றனர். இந்த மன்றத்தினரும் அறநெறி பாடசாலையின் மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழா, சிவராத்திரி விழா, நவராத்திரி விழா, திருவெம்பாவைக்கு பஜனை ஆகியவற்றை ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்த மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும் அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியருமான கே. பி. பத்மராஜா இந்த அறநெறி பாடசாலைக்கு என்று கையேடொன்றை வெளியிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா என்பவற்றோடு மந்திரங்கள், அறநெறி கீதம், எழுச்சிப் பாடல்கள், மாணவர்கள் ஒழுக்க வழிகாட்டி என பல்வேறு அம்சங்களைக் கொண்ட அறநெறி தீபம் என்ற இந்த கையேடு அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்விக்கு அதிபதியான கலைமகளின் வீணை ஏந்திய திருவுருவம் முன்புற அட்டை படத்தை அலங்கரித்துள்ளது. பின்புற அட்டையை திருவள்ளுவரின் திருவுருவம் தனதாக்கிக்கொண்டுள்ளது.

பண்பாடு மனித வாழ்க்கைக்கு உயிர்நாடி, இறை உணர்வு இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம் போன்ற தத்துவ முத்துக்கள் பல வித்தாகி இருப்பதை இந்நூலில் காணலாம்.

சுத்தம் அறநெறிக் கல்வியின் அவசியம், போன்ற பெற்றோரை அறிவுறுத்தும் கருத்துக்கள் பலவும் இந்நூலில் இடம் பிடிக்கத் தவறவில்லை. சுகமான சிந்தனைகளுடன் நலமான பல கருத்துக்கள் இதில் விளைந்துள்ளதால் இது பண்பட்ட ஒரு உள்ளத்தின் பாராட்டுக்குரிய கைங்கரியம் என போற்றுவது தகும் என எண்ணுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...