திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் விழாவில் இன்று தீர்த்தோற்சவம் எல். ஆர். ஈஸ்வரியின் இன்னிசை கச்சேரி




ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் தனிச் சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்து வருவது சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. வேல் ஞானத்தின் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப்பெருமானை ஞானவேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி குருபரா உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கியுள்ளோம் எனக் கூறி அவரது நாவில் ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலுக்கு விழா எடுப்பது வருடாந்தம் கொழும்பில் நடந்து வரும் ஒரு கைங்கரியமாகும்.

இது இன்று, நேற்று ஒன்று ஆரம்பித்தது இல்லை. 137 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடந்து வரும் ஒரு விழாவாகும். வருடாந்தம் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர்காம உற்சவத்துடன் ஒட்டியதாக இவ்விழா நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இலங்கைத் திருநாட்டின் தலை நகராம் கொழும்பு மாநகரிலே செல்வம் தழைத்தோங்கும் வர்த்தகர்கள் நிறைமிகு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம். இந்த தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா இவ்வாண்டு கடந்த 10 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் கடந்த 11 ஆம் திகதி காலை 8.05 மணியளவில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துகுமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டபின் உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

அதன்பின் முதலாம் குறுக்குத்தெரு தேவஸ்தானத்திலிருந்து சித்திரத் தேர் ரத பவனி ஆரம்பமாகியது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான் மெயின் வீதி, கோட்டை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தார்.

நேற்று (12.08.2011) பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வேல் விழா சுவாமி வீற்றிருக்க ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு நவகலச அபிஷேகம் நடத்தப்பட்டதுடன் நேற்று மு. ப. 11.30 மணிக்கு வேல் விழாவுக்கு விசேட பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் விசேட சமய சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டன.

இன்று (13.08.2011) காலை 7 மணிக்கு வழமையான பூஜையுடன் கதிர்காம பதியின் மாணிக்க கங்கை யில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணிய நீரினால் தீர்த்தோற்சவம் நடத்தப்படும். இதன்போது ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் அர்ச்சனை என்பன நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் சாயரட்சை பூஜையும் வேல் விழா அர்ச்சனையும் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெறும். இன்று மாலை 7 மணி முதல் திரைப்படப் புகழ் கலைஞர்கள் கலைமாமணி டாக்டர் எல். ஆர். ஈஸ்வரி, இளைய குன்னக்குடி வயலின் மணிபாரதி, டிரம்ஸ் ராஜா கலந்துகொள்ளும் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்.

இலங்கைக் கலை வல்லுனர், மிருதங்க வித்துவான், லயஞானபூபதி க. சுவாமிநாதனுடன் இன்னிசை நாயகன் எம். மோஹன்ராஜின் அப்சராஸ் இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெறவுள்ளது.

இவ்வாலயத்தில் நாளை 14 ஆம் திகதி காலை முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து திருவமுது போஜனம் வழங்கப்படும்.

நாளை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காலி வீதி ஊடாக பம்பலப்பிட்டி சந்தி கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலி முகத்திடலை அடைந்து பக்தர்களுக்கு அருட்காட்சி புரிவார்.

15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம் , மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.



கே. ஈஸ்வரலிங்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...