திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் ரதம் இன்று புறக்கோட்டையை வலம் வரும்



நகரம் என்பது வான் உயர்ந்த கட்டிடங்களையும் வண்ணமயமான வர்த்தக நிலையங்களையும் அனைத்து வசதிகளையும், வளங்களையும் கொண்ட ஒரு சுறுசுறுப்பான இடமாகும். எமக்குத் தேவையான அனைத்தையும் தேவையான நேரங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத் தான் இருக்கும். இது ஓர் இயந்திரமயமான வாழ்க்கையாகத் தான் இருக்கும்.

இந்த இறுக்கமான வாழ்வுக்குள்ளும் இதயத்துக்கு இதமூட்டக் கூடியவையாக விளங்குபவை ஆலய திருவிழாக்கள். அதுவும் கடந்த 137 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் கொழும்பு நகரை மண்வாசனை கமழும் அழகிய கிராமமாக மாற்றி வந்தது ஆடிவேல் விழா. கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆடி மாதத்தில் கொழும்பில் ஆடிவேல் விழா என்றால் ஒரே ஊர்த்திருவிழா வாகத்தான் இருக்கும்.

கொழும்பு முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து அல்லது செட்டியார் தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திற்கு ஸ்ரீ முருகப் பெருமானின் வேல் திருவிழாவின் தேர்த்திருவிழா சென்றடைந்து அவ் வாலயத்தில் இருக்கும் வரை ஆடிவேல் விழா பூசைகள் நடைபெறும்.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆடிவேலின் தேர்த்திருவிழா இரவில் புறப்பட்டு ஆலயத்திற்கு திரும்பும் தினத்தன்று கொழும்பில் ஆங்காங்கே வாழ்கின்ற இந்துக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம் குடும்பமாக ஏறி ஜல் ஜல் என்று சவாரியாக பம்பலப்பிட்டி ஆலயத்திற்கு வந்து ஆடி வேல் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு மீண்டும் மாட்டு வண்டிகளில் ஏறி கொழும்பு காலிமுகத்திடலுக்கு (மிallலீ பிaணீலீ) சவாரியாக வந்து சேருவார்கள். அன்று காலி முகத்திடல் முழுவதும் மாட்டு வண்டிகளால் மட்டுமல்ல பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். காலிமுகத்திடலே ஒரு கிராமமாக உருமாறி இருக்கும்.

வேல் விழாவின் ரதபவனி மறுநாள் விடியற் காலை காலி முகத்திடலை வந்தடையும். அந்த ரத பவனி வரும் வரை மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்தவர்கள் முருகப் பெருமானை கண்டு திருவருளைப் பெற காத்திருப்பார்கள். அந்த ரதபவனியைக் கண்டபின் தான் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

அதன் பின் திருமுருகப் பெருமானின் ரதம் கொழும்பு புறக்கோட்டை எங்கும் பவனி வந்து புறப்பட்ட ஆலயத்தை சென்றடையும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை போன்று கொழும்பில் மீண்டும் ஆடிவேல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அன்று இருந்த மாட்டு வண்டிகளை தவிர அனைத்தும் வழமை போல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நேற்று மாலை ஆடிவேல் விழா ரதம் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் காலிமுகத்திடலை வந்தடைந்தது. அங்கிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ரத பவனி இன்று காலை முழுவதும் புறக்கோட்டை எங்கும் வலம் வந்து ஆலயத்தை அடையும்.

இன்று காலை 6 மணிக்கு காலிமுகத்திடலிலிருந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம், மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.


கே. ஈஸ்வரலிங்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...