செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

இறை திருவுருவங்கள்

9029) கிடந்த கோலம் எத்தனை வகைப்படும்?

இரு வகைப்படும்

9030) அந்த இருவகை கிடந்த கோலங்களையும் தருக

சமசயனம், அர்த்த சயனம்

9031) சமசயனம் என்பது எதனை?

கிடந்த கோலத்தில் கிடத்தலை

9032) அர்த்த சயனம் என்பது எதனை?

பகுதிக் கிடத்தல்

9033) கிடந்த கோலம் எந்த தெய்வத்துக்கு உரித்தான கோலம்?

விஷ்ணுவுக்கு

9034) அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது எந்த சயனம்?

சமசயனம்

9035) அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது எந்த சயனம்?

அர்த்தசயனம்

9036) கூத்தாடிய கோலம் எந்த தெய்வ சிற்பங்களுக்கு உரியதாக உள்ளது?

சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம்.

அட்ஷய திருதி

9037) அட்சய திருதியை எப்போது வரும்?

சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள்

9038) அட்சய திருதியை அன்று என்ன செய்வது நல்லது?

ஆலயங்களுக்குச் சென்று இறையருள் பெறுவது நல்லது

9039) அன்று நல்லது செய்தால் என்ன நடக்கும்?

நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார்.

9040) க்ஷயம் என்றால் என்ன?

தேய்தல், குறைந்து போதல், மறைதல்.

9041) அக்ஷயம் என்றால் என்ன?

வளர்தல், நிறைதல்.

9042) திருதியை என்றால் என்ன?

மூன்றாவது நாள் என்பதாகும்.

9043) திதி என்பது என்ன?

நாள், தினம்

9044) திதிகளில் சிறப்புப் பெற்றது எது?

அட்சய திருதியை

9045) திதிகளில் சிறப்புப் பெற்றது அட்சய திருதியை என்று கூறியவர் யார்?

மகாகவி காளிதாசர்

9046) அட்சயம் என்றால் என்ன?

வளருதல்

9047) அள்ள அள்ள வளர்ந்து கொண்ட பாத்திரம் எது?

அட்சய பாத்திரம்

9048) அள்ள அள்ள வளர்வது அட்சய பாத்திரம் போல் அட்சய திருதி என்பது எது?

செல்வத்தை மென்மேலும் வழங்கக் கூடியது.

9049) அட்சய திருதியையன்று பூஜிக்க வேண்டிய தெய்வங் கள் எவை?

மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன்.

9050) கண்ணன் அவலை என்ன சொல்லி சாப்பிட்டார்?

அட்சயம்

9051) கண்ணன் அட்சயம் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டதால் என்ன நடந்தது?

அஷ்ட லட்சுமிகளும் குசேலர் வீட்டிற்கு வந்ததாகக் கதை.

9052) இந்த சம்பவம் நடந்தது எந்த தினத்தில்?

அட்சய திருதியை தினத்தில்

9053) அட்சய திருதியை அன்று குசேலர் சரித்திரத்தைப் பார்த்தால் என்ன நடக்கும்?

குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஜதீகம்.

9054) மஹாலட்சுமி மஹா விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் எது?

வளர்பிறை திருதியை

9055) அமாவாசையாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன் வளர்பிறையாக மாறக் காரணமானவர் யார்?

சிவன்

9056) சிவன் ஆசியளித்த தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இணைந்து என்னவாக சிறப்புற்றது?

அட்சய திருதியையாக

9057) குலேசன் சரித்திரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர் யார்,

குசேலர்

9058) குசேலர் கிருஷ்ணருக்கு என்ன கொடுத்தார்?

அவல்

9059) மஹாபாரதத்தில் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவர் யார்?

துச்சாதனன்

9060) துச்சாதனன் துயில் உரிய ஆரம்பித்தவுடன் பாஞ்சாலி என்ன செய்தாள்?

தன் மானம் காக்க கதறி அழுதாள்.

9061) அவளின் அபயக் குரல் கேட்ட கண்ணன் என்ன செய்தான்?

அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன்னான்.

9062) கண்ணன் அட்சயம் என்று சொன்னவுடன் என்ன நடந்தது?

திரெளபதியின் புடவை குறைவில்லாமல் வளர்ந்தது.

9063) இந்த சம்பவம் நடந்த தினம் எது?

அட்சய திருதியை அன்று

9064) அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் எது?

திருதியை தினம்

9065) பாண்டவர்கள் காட்டில் இருந்தபோது அன்ன பஞ்சம் தீர்க்க கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினம் எது?

திருதியை தினத்தில் தான்

9066) குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினம் எது?

திருதியை தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...