திங்கள், 2 ஏப்ரல், 2012

கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

எழில் கொஞ்சும் மத்திய மாகாணத்தின் தலைநகரமான கண்டி மாநகரிலே கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஆலயம் ஸ்ரீ செல்வ விநாயகர் பெருமாள் ஆலயம். இவ்வாலயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சோமசுந்தரேஷ்வர சுவாமிகளின் பங்குனி உத்தர மகோற்சவம் கடந்த 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இங்கு எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆனந்த வல்லி சமேத சந்திரசேகர பெருமானின் வெளி வீதி வலம் வந்து அருள்பாலிப்பார். அதனைத் தொடர்ந்து பால்குட பவனியும் இடம்பெறும்.

அன்று காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சமுக விநாயகருக்கும், ஸ்ரீ சோமஸ்கந்தருக்கும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாத பெருமானுக்கும் விசேட அஸ்டோத்திர சத சங்காபிஷேகமும், விசேட அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை விசேட மேளக்கச்சேரியும் பஜனையும் பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 6 மணி முதல் வசந்த மண்டப பூஜையும் சுவாமிகள் உள் வீதி வலம் வருதலும் இடம் பெறும். அன்று இரவு 7.30 மணியளவில் பஞ்சரதத்தில் எழுந்தருளி இரத பவனி இடம் பெறும்.

இந்த ரத பவனி கோவிலிலிருந்து புறப்பட்டு பேராதனை வீதி வழியாக வந்து வடுகொட பிட்டிய வீதி வழியாக கொழும்பு வீதி, கொட்டுக்கொடல்ல வீதி, கந்த வீதி, மாநகர சபை சந்தி, திருகோணமலை வீதி வழியாக கொட்டுக்கொடலை வீதி மேல் பக்கம் சென்று தலதா வீதி கீழ் பக்கம் மணிக் கூண்டு ஊடாக பேராதனை வீதி, வெம்பிளி தியேட்டர் சந்தி வரை வந்து ஆலய வெளி வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும்.

பஞ்சரத பவனியில் கலந்து கொள்ளும் சகல அடியார்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆலய வரலாறு

பதினேழாம் நூற்றாண்டின் முற் பகுதியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் ஒரு பெரியகுளம் இருந்தது. அக்குளத்தின் அருகே ஓர் அரச மரமும் அதன் பக்கத்தில் குன்று ஒன்றும் அமைந்திருந்தன.

அக்குளத்தில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பது வழக்கமாக இருந்தது. குறிப்பாக அக்கால இராசதானியைச் சேர்ந்த பிரமுகர்களின் துணிகளை அக்குளத்திலே சலவை செய்ததாக அறியப்படுகிறது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி ஸ்ரீ குருசாமி என்பவரும் அவரது உதவியாளர் ஒருவரும் அக் குளத்தின் அருகில் சிறிது காலம் தற்காலிகமாகத் தங்கி இருந்தனர். ஒரு நாள் சுவாமி ஓர் அதிசயமான கனவு கண்டார். விநாயகர் சிலையொன்று குளத்தின் குன்றின் அடிப்பாகத்தில் இருப்பது அவரது கனவில் தோன்றியது.

மறு நாள் சுவாமி அயலவர்களை குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது கனவில் தோன்றியவாறே அங்கு விநாயகர் சிலை இருப்பதைக் கண்ணுற்றார். சிலையின் முன்புறம் மணலில் குப்புறப் புதைந்தவாறு இருந்தது.

சிலையின் முதுகுப் புறத்தை சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கும் சலவைக் கல்லாகப் பாவித்தனர். சுவாமியவர்கள் அந்த விநாயகர் சிலையை மக்களின் உதவியோடு எடுத்து வந்து, தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். முன்பு அழுக்கு நீக்குவதற்கு கருவியாகப் பயன்பட்ட விநாயகர் அன்று முதல் அடியார்களின் அக அழுக்குகளை நீக்கும் கர்த்தாவாகி அருள்பாலித்து வருகின்றார். இப்படி பல வரலாறுகளைக் கொண்ட இவ் ஆலயம் கண்டி நகரிலே புகழ் பெற்ற இந்து ஆலயமாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...