திங்கள், 25 மே, 2015

(11349) வி என்றால் என்ன?

பட்சி (மயில்) (11350) சாகன் என்றால் என்ன? சஞ்சரிப்பவன் (11351) விசாகன் என்று அழைப்பது யாரை? முருகனை (11352) முருகனை விசாகன் என்று அழைப்பது ஏன்? மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து எந்த கடலில் போர் புரிந்தார்? திருச்செந்தூரில் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து தரையிலே போர் புரிந்த இடம் எது? திருப்பரங்குன்றம் (11354) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து வானத்திலே போர் புரிந்த இடம் எது? திருப்போரூர் (11355) போரின் பெயரால் இந்த ஊருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? போரூர் (11356) பழங்காலத்தில் இத்தலத்தை எவ்வாறு அழைத்தனர்? சமராபுரி, யுத்தபுரி (11357) ஸ்ருதி என்றால் என்ன? ரிக், யஜுர். சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். வேதம் என்ற சொல்லுக்கு சத்தியமான தத்துவத்தை அறியச் செய்யும் அறிவின் மூல இருப்பிடம் என்று பொருள். வேதம் எந்த மனிதராலும் உருவாக்கப்படவில்லை. அநாதி காலம் தொட்டே இருந்து வருகிறது. கடவுளின் சுவாசக் காற்றாக விளங்குகிறது. பிரம்மா, வேதத்தைக் கொண்டே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். வேதத்திற்கு ச்ருதி (ஸ்ருதி) என்ற பெயருண்டு, ச்ரோத்ரம் என்ற சொல்லுக்கு காது என்று பொருள் சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை ஸ்ருதி என்றனர்.

11338) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? து, ஷா, ஜு, சா, சி, சீ, டா, தா, த, ஜ, ஞ 11340) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? தே, தோ, ச, சி, டே, டோ, சா, சி வைகாசி விசாகம் (11341) சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக விளங்குபவர் யார்? முருகப்பெருமான் (11342) பழனி தலத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? சித்தன்வாழ்வு (11343) பழனிக்கு சித்தன்வாழ்வு என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன? சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் (11344) முருகனை பழநியாண்டி என்று அழைப்பது ஏன்? பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் (11345) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்? விசாக (11346) வைகாசி மாதத்தில் சந்திரன் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன? வைசாக மாதம் என்றிருந்து பின்னாளில் வைகாசி என்றானது. (11347) இந்த மாத பௌர்ணமி நாளை என்ன நாள் என்று குறிப்பிடுகிறோம்? வைகாசி விசாகம் (11348) இந்த நாளில் யார்; அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன? முருகப்பெருமான்

வியாழன், 7 மே, 2015

11314) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்?

சு, சே, சோ, ல, ர 11315)) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? லி. லு. லே. லோ 11316)) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? அ, இ, உ, ஏ 11317)) ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஒ, வ, வி, வு 11318)) மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? வே, வோ, கா, கி, ரு 11319)) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கு, கம், ஹம், ஜ, ங, ச. க 11320)) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? கே, கோ, ஹா, ஹீ 11321) பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ஹு, ஹே, ஹோ, டா 11322) ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டி, டு, டெ, டோ, டா 11323)) மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? ம, மி. மு. மே 11324)) பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? மோ, டா, டி. டு 11325)) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்? டே, டோ, ப, பா, பி

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...