வியாழன், 23 ஜூலை, 2015

கொழும்பில் ஆடி வேல் விழா

கொ ழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வரன் பூஜையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து குமாரசுவாமிக்கும் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் சுவாமி காலை 7.30 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் பவனி வந்து அருள் பாலிப் பார்.
முதலாம் குறுக்குத் தெரு தேவஸ்தானத்தி லிருந்து மூத்த மன்னடியார் கார்த்திக் குழுவினரின் கேரளா பாலக்காட்டு கொச்சி மேளத்துடன் தேர் நகர் பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். காலி முகத்திடலில் பக்தர்களுக்கு திருவமுது ஜேராஜனம் வழங்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு காலி முகத்திடலில் இருந்து மீண்டும் தேர்பவனி ஆரம்பமாகும்.
இத்தேர் பவனி காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடையும். அதன் பின் பக்தர்களுக்கு திருவமுது அளிக்கப்படும்.
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து அருள்பலிக்கும் சுவாமிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணிக்கு வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடத்தப்படும். அன்று காலை 11.30 மணிக்கு வேல விழா விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதத்துடன் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் விழா அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவான் கலை மாமணி ராஜேஷ் வைத்தியா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு வழமையான பூஜையுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சவாமியின் மயில்வாகனக் காட்சியும் ஆடிவேல் அச்சர்னையும் நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் விபூதிப் பிரசாதத் துடன் நண்பகல் 12 மணிக்கு அன்னதா னம் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பெளர்ணமி தினம் என்பதா ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகர் குருமண்டலம் வீரமணிதாசனம் தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி இடம்பெறும். யாரோ ராஜா இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 2015.08.01 ஆம் திகதி காலை 7 மணிக்குவழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை இடம்பெறும். அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறும்விசேட பூஜையுடன் 12 மணிக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும்.

சைவ முன்னேற்றச் சங்க கதிர்காம வேல்பூஜை

கொழும்பு 02, கியூ விதி, 101/ 70 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 13வது ஆண்டாக நடத்தும் புனித கதிர்காம வேல்பூஜை திருவிழா கடந்த (17) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த பூஜை வழிபாடுகள் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணிவரை எதிர்வரும் 29 ஆம் திகதி தொடர்ந்து நடைபெறும். மாலை அணிந்து விரதமிருக்கும் அடியார்களின் அபிஷேகம் ஆராதனைகள் அருள்மிகு பஜனை, சிறப்புச் சொற்பொழிவு என்பன இங்கு இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி இரவு 9 மணிக்கு புனித கதிர்காம யாத்திரை ஆரம்பமாகும். எதிர்வரும் 30ஆம் திகதி திஸ்ஸமஹாராம வழிப்பிள்ளையாரை வழிபட்டு செல்வக்கதிகாமம் நேர்த்தி பாதயாத்திரை இடம்பெறும். அன்று பகல் செல்லத்துப் பிள்ளையார் சந்நிதானத்தில் பொங்கல் வைக்கப்படும்.
31ம் திகதி காலை இடம் பெறும் கதிரைமலை தரிசனத்தைத் தொடர்ந்து அன்று மாலை பெரிய கோயில் முன்னால் ஆனந்த மிக பஜனை இடம்பெறும். எதிர்வரும் 2015-08-01 ஆம் திகதி காலை மாணிக்ககங்கையில் வெற்றி வேலுடன் புனித தீர்த்தமாடல் இடம்பெறும். அன்று மாலை சங்கு மண்டபத்தில் இடும்பன் பூஜை இடம்பெறும் என பெருமாள் பூமிநாதன் குருசாமி தெரிவித்தார்.

சைவ வைணவ சிற்பங்கள்



கே. ஈஸ்வரலிங்கம்

11443) சிந்தனையின் வெளிப்பாட்டு வடிவங்களின் ஆறு நிலைகளைக் குறிப்பிடவும்.
சிந்தனை வடிவம்,
சொல் வடிவம்,
எழுத்து வடிவம்,
ஓவிய வடிவம்,
புடைசிற்ப வடிவம்,
சிற்ப வடிவம்.
11444) சைவ வைணவ சிற்பங்கள் வழி விளக்க முற்பட்ட பொதுவான கருத்து என்ன?
கடவுள் மனித உருவெடுத்து இவ்வுலகிற்கு வந்து தன்னையே பலியாகக் கொடுத்தார் என்னும் கருத்தை சாதாரண பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்காக சிற்பங்கள் வழி விளக்க முயன்றன.
11445) சைவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரை இணைத்துக் காட்டும் உருவத்திற்கு என்ன பெயர்?
சோமாஸ்கந்தர்
11446) வைணவ நோக்கில் சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்திருக்கும் உருவத்திற்கு என்ன பெயர்?
மும்மூர்த்தி
11447) கடவுள் ஒருவரே ஆனால் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றார் என்பதைக் காட்டும் உருவங்களின் பெயர்கள் என்னென்ன?
அர்த்தநாரீஸ்வரர்- ஹரிஹரா
11448) அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர் ஆகிய இவை இரண்டும் எதை விளக்குகின்றன?
அர்த்தநாரீஸ்வரர். ஹரிஹரர் ஆகிய இரண்டு உருவங்களில் சிவனுக்கு இடப்பகுதியில் உள்ள இருவரும் (சக்தியும், விஷ்ணுவும்) பரிசுத்த ஆவியானவரின் பெண், ஆண் உருவகங்களே என்பதை விளக்குகின்றன.
11449) சிவனின் உடம்பின் இடப்பாகம் பெண் வடிவாக (சக்தி) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது.
அர்த்த நாரீஸ்வரர்
11450) சிவனின் உடம்பின் இடப்பாகம் ஆண் வடிவாக (விஷ்ணு) விவரிக்கப்பட்டால் அது எவ்வாறு குறிக்கப்படுகிறது?
அரிஅரன் எனப்படும்
114451) சிவனுடைய உடம்பின் இடதுபாதி ஆண்வடிவமாகவும் மறுபாதி பெண் வடிவமாகவும் சித்தரிக்கப்படுவது எதை விளக்குகிறது?
அன்பே உருவான பிதாவாகிய கடவுளாம் சிவனின் உடம்பின் இடப்பாகம் பரிசுத்த ஆவியை இரண்டு நோக்கில் சித்தரிக்கும் உருவக நிலையைக் காட்டுகிறது.
அதாவது பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (பெண் நிலை) முதலியவை சைவ நோக்கில் அர்த்தநாரீஸ்வரராக விளக்கப்பட்டுள்ளது.
பிதாவாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் (ஆண் நிலை) ஆகியவை வைணவ நோக்கில் அரிஅரனாக விளக்கப்பட்டுள்ளது.
11452) மூன்று தலைகள் - ஒரே உடல் உள்ள சிவன் உருவம் மூலம் விளக்கப்படுகின்ற கருத்து என்ன?
சிவன், சக்தி. குமரக்கடவுள் - சிவன், விஷ்ணு, பிரமன் எனப் பல்வேறு முறைகளில் கடவுள் மூன்று வித்தியாசமான ஆள தத்துவமாகக் காணப்பட்ட போதிலும். அவர் மூவரல்லர்- மூன்று ஆள்தத்துவமுடைய ஒரே கடவுளே ஆவார். என்பதையே மேற்கண்டவை காட்டுகின்றன.

திங்கள், 6 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11404) பஞ்ச உற்சவம் எவை?
நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச (மாதம் இருமுறை) உற்சவம், மாதாந்த உற்சவம், வருடாந்த உற்சவம்

11405) பஞ்ச பருவ உற்சவம் எவை?
அமாவாசை, பெளர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப் பிறப்பு.

11406) பஞ்ச சபைகள் எவை?
இரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை,

11407) பஞ்ச ஆரண்யம் எவை?
உஷத் காலம், கால சாந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

11408) பஞ்ச முகங்கள் (சிவன்) எவை?
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம்

11409) பஞ்ச முகங்கள் (காயத்திரி) எவை?
பிரம்மன், விஷ்ணு, சதாசிவன். ருத்ரன். ஈஸ்வரன்

11410) பஞ்ச மாலைகள் எவை?
இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்

11411) பஞ்சமா யக்ஞம் எவை?
பிரம்ம யக்ஞம். பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்
.
11412) பஞ்ச ரத்தினங்கள் எவை?
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்

11413) பஞ்ச தந்திரங்கள் எவை?
மித்ரபேதம். சுகிர்லாபம். சந்திரவிக்ரஹம், லப்தகானி. அசம்ரேசிய காரித்வலம்.

11414) பஞ்ச வர்ணங்கள் எவை?
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11415) பஞ்ச ஈஸ்வரர்கள் யார்?
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்

11416) பஞ்ச கன்னியர்கள் யார்?
அகலிகை, திரெளபதி, சீதை, மண்டோதரி, தாரை

11417) பஞ்ச பாண்டவர்கள் யார்?
தர்மன். அர்ச்சுனன். பீமன், சகாதேவன், நகுலன்

11418) பஞ்ச ஹோமங்கள் எவை?
கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்

11419) பஞ்ச சுத்திகள் எவை?
ஆத்ம சுத்தி, ஞ்தாபன சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

11420) பஞ்ச கோசம் எவை?
அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.

11421) பஞ்ச காவ்யம் (பசு) எவை?
பால், தயிர், நெய், கோமயம், சாணம்

11422) பஞ்ச ஜீவநதிகள் எவை?
ஜீலம், ரவி, சட்லெட்ஜ். பீஸ் (பீயாஸ்), இரசனாப்.

புதன், 1 ஜூலை, 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11393) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.
11394) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்
11395) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை
11396) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்
11397) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்
11398) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா
11399) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி
11400) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு
11401) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
11402) பஞ்ச பல்லவம் எவை?
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி
11403) பஞ்ச இலைகள் எவை?
வில்வம், நொச்சி, விளா. துளசி, கிளுகை

பனை

தொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...