வியாழன், 23 ஜூலை, 2015

கொழும்பில் ஆடி வேல் விழா

கொ ழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இவ் ஆடிவேல் விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வரன் பூஜையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து குமாரசுவாமிக்கும் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு உள்வீதி உலாவுடன் சுவாமி காலை 7.30 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் பவனி வந்து அருள் பாலிப் பார்.
முதலாம் குறுக்குத் தெரு தேவஸ்தானத்தி லிருந்து மூத்த மன்னடியார் கார்த்திக் குழுவினரின் கேரளா பாலக்காட்டு கொச்சி மேளத்துடன் தேர் நகர் பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். காலி முகத்திடலில் பக்தர்களுக்கு திருவமுது ஜேராஜனம் வழங்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு காலி முகத்திடலில் இருந்து மீண்டும் தேர்பவனி ஆரம்பமாகும்.
இத்தேர் பவனி காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடையும். அதன் பின் பக்தர்களுக்கு திருவமுது அளிக்கப்படும்.
பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து அருள்பலிக்கும் சுவாமிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணிக்கு வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடத்தப்படும். அன்று காலை 11.30 மணிக்கு வேல விழா விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதத்துடன் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் விழா அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவான் கலை மாமணி ராஜேஷ் வைத்தியா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு வழமையான பூஜையுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சவாமியின் மயில்வாகனக் காட்சியும் ஆடிவேல் அச்சர்னையும் நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு விஷேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் விபூதிப் பிரசாதத் துடன் நண்பகல் 12 மணிக்கு அன்னதா னம் வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பெளர்ணமி தினம் என்பதா ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகர் குருமண்டலம் வீரமணிதாசனம் தென் இந்திய திரைப்பட புகழ் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் இணைந்து வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி இடம்பெறும். யாரோ ராஜா இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 2015.08.01 ஆம் திகதி காலை 7 மணிக்குவழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை இடம்பெறும். அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறும்விசேட பூஜையுடன் 12 மணிக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...