புதன், 10 ஏப்ரல், 2019

சிவனின் ஐந்து திருநாமங்கள்




சிவன் என்பது ஆழ்ந்த மெளனத்தின் மற்றும் அசைவற்ற நிலையின் பரப்பு; அங்கு மனதின் அனைத்து செயல்களும் களையப்படுகின்றன. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த இடம் கிடைக்கும். தெய்வத்தைக் கண்டுபிடிக்க நீண்ட புனித யாத்திரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் இருக்குமிடத்தில் கடவுளை நீங்கள் காணாவிட்டால், அவரை வேறு எங்கும் தேடிக் காண முடியாது. நீங்கள் நிறுவப்பட்டு மையமாக இருக்கும்போது அனைத்து இடங்களிலும் தெய்வத்தைக் காண்கின்றீர்கள். தியானத்தில் இதுதான் நிகழ்கின்றது.
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று ஆதியந்தாஹினம் - ஆரம்பம் அல்லது முடிவில்லாதது என்பதாகும். சிவன் தனது கழுத்தில் ஒரு பாம்புடன் அமர்ந்து இருப்பதாக நாம் கருதுகிறோம். சிவனிடமிருந்து அனைத்தும் பிறக்கின்றன; சிவன் அனைத்தையும் உள்ளடக்கியவர். அனைத்தும் சிவனிடமே கரைகின்றன. இப்படைப்பில் காணும் ஒவ்வொன்றும் சிவனது வடிவமேயாகும்.
அவர் முழு படைப்பிலும் ஊடுருவிச் செல்கிறார். அவர் ஒருபோதும் பிறக்கவில்லை, முடிவும் அற்றவர். நித்தியமானவர்.
சிவபெருமான் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுகிறார் - அதாவது வடிவமற்றவர் ஆயினும் அனைத்தையும் காண்பவர். இது குவாண்டம் இயக்கவியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காண்பது மற்றும் காண்பவர் இரண்டும் காணும் செயல் முறையில் பாதிக்கப்படுகின்றன. நம்மைச் சுற்றி காற்று உள்ளது என்பதையும் அதனை உணரமுடியும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் காற்று நம்மை உணர ஆரம்பித்தால் என்ன செய்வது? விண்வெளி நம்மை சுற்றி உள்ளது, நாம் விண்வெளியை அடையாளம் காணமுடியும் . ஆனால் நம்முடைய இருப்பை விண்வெளிப்பரப்பு அறிந்தால் என்ன ஆகும்? தெய்வம் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளது; மற்றும் நம்மைக் காண்கின்றது.
இது இருப்பு மற்றும் இலக்கின் வடிவமற்ற மையமாகும். காண்பவர், காணும் செயல் மற்றும் காட்சி ஆகியவற்றைக் காணும் இந்த வடிவமற்ற தெய்வம் சிவன். இந்த சிவ தத்துவத்தை உணர்ந்தறிந்து அனுபவித்தல் சிவராத்திரி.
வழக்கமாக கொண்டாட்டங்களில் விழிப்புணர்வு இழக்கப்படுகிறது. ஆழ்ந்த ஓய்வு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டம்தான் சிவராத்திரி. நீங்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்கின்றீர்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போது நாம் ஓய்வெடுக்கிறோம். ஆனால் சிவராத்திரியில் நாம் விழிப்புணர்வுடன் ஓய்வெடுக்கிறோம். அனைவரும் உறங்கும்நேரம் ஓர் யோகி விழித்திருப்பதாகக் கூறப்படுகிறது. யோகிக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரி.
மெய்யுணர்வின் நான்காவது நிலை சிவன். விழித்திருத்தல், ஆழ்ந்த தூக்கம் மற்றும் கனவு ஆகிய நிலைகளுக்கு அப்பால் உள்ள நிலை துரியா அவஸ்தா எனப்படும் தியான நிலையாகும். அனைத்து இடங்களிலும் இருக்கும் இருமையற்ற மெய்யுணர்வு எங்கும் வியாபித்துள்ளது. அதனால் தான் சிவனை வழிபட சிவனிலேயே கரைந்து விட வேண்டும்.
சிவனை வழிபட சிதநந்தருபர் - தூய பேரின்பம் என்ற மெய்யுணர்வு நிலையில் சிவமாகி விட வேண்டும். தபோ யோக கம்யா - அதாவது தவம் மற்றும் யோகா மூலம் அறியப்படும் ஒருவர் என்பதாகும். யோகா இன்றி சிவனை அனுபவிக்க முடியாது. யோகா என்பது ஆசனங்கள் (உடல் தோற்ற நிலைகள்) மட்டும் அல்ல, அது தியானம் மற்றும் பிராணாயாமம் (சுவாச நடைமுறைகள்) மூலம் சிவதத்துவத்தை அனுபவிப்பது ஆகும்.
பஞ்சமுகம், பஞ்சத்துவம் அதாவது ஐந்து கூறுகள் சிவனின் ஐந்து முகங்கள் என குறிப்பிடப் படுகின்றன. நீர், காற்று, பூமி, நெருப்பு மற்றும் விண்வெளி. இந்த ஐந்து உறுப்புகளை புரிந்து கொள்வது தத்துவஞானம் . சிவ வழிபாடு என்பது சிவதத்துவத்தில் கரைந்து அனைவருக்கும் நன்மையை வேண்டிக் கொள்ள வேண்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...