வெள்ளி, 31 ஜனவரி, 2020

வேதம்

சமயம், ஒழுக்கம், சடங்குகள் மற்றும் கலாசாரங்களி&ன் தோற்றுவாயை எதிலிருந்து தொடங்குவது மரபு? வேதத்தில் இருந்து

வேதங்கள் யாரால் அருளப்பட்டவை ?

கடவுளாகிய பரம்பொருளால்

யாருக்கு அருளப்பட்டது?

தவசீலர்களான முனிவர்களுக்கு

வேதம் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?

உயர்ந்த அறிவு, ஞானம் என்பது பொருள்

வேதங்கள் எத்தனை வகைப்படும்? நான்கு

நான்கு வகை வேதங்களும் எவை?

ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்

பொதுவாக வேதங்கள் எத்தனை நுாற்பிரிவுகளைக் கொண்டது?

மூன்று

அந்த மூன்று பிரிவுகளும் எவை?

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம்

வேதங்களின் சில முக்கிய சொற்களுக்கு உரை எழுதியவர் யார்?

யாஸ்கர் என்னும் முனிவர்

இவர் தம்முடைய நிருக்தம் என்னும் நூலில் எந்த இரு பிரிவுகளைப் பற்றி கூறியிருக்கிறார்?

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் என்னும் இருபிரிவுகளையே குறிப்பிடுகிறார்.

பரம்பொருளான ப்ரஹ்மம், ஜீவாத்மா, மோக்ஷம் ஆகியவற்றை மிக விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராய்ந்து முதன் முதலில் உலகுக்கு அறிவித்த உபநிஷத்துக்கள் பெரும்பான்மை எந்த பகுதியில் அடங்கும்?

ஆரண்யகம் என்னும் பகுதியில்

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் ஆகிய இரு பகுதிகளும் முக்கியமாக எதைப் பற்றி விளக்குகின்றன?

பலவித வேள்விகளைப் பற்றி

வேள்விகளைப் பற்றி விளக்குவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?

கர்மகாண்டம் என்று

சூரியமண்டலத்தில் ப்ரஹ்மத்தைத் தியானித்தல், பஞ்சாக்னி வித்தை முதலிய தியானவகைகளை விளக்குவபவை எவை ?

ஆரண்யகங்கள்

ஆரண்யகங்களை எவ்வாறு அழைப்பர்?

உபாஸனாகாண்டம் என்று

ஞானநிலையைப் பற்றி விரித்துக் கூறுவதால் உபநிஷத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

ஞானகாண்டம்

இதில் பலவித யாப்புகளைக் கொண்ட செய்யுள் (ரிக்) வடிவில் இருப்பவை எது?

ரிக்வேதம்

செய்யுளும் உரைநடையும் கலந்தவடிவில் இருப்பது எது?

யஜுர்வேதம்

பெரும்பான்மை ரிக்வேதத்தின் ரிக்குகளைக் கொண்டு இசைவடிவில் அமைந்துள்ளது எது?

ஸாமவேதம்

“மந்திரங்களும் பிராஹ்மணங்களும் அடங்கிய நூல் எது?

வேதம்

யாஸ்கர் என்னும் மஹர்ஷியின் வாக்கு எது? வேதம்

வேதம் எத்தனை பெரும் நூல்களைக்கொண்டதது?

ஐந்

அவை எவை?

ரிக்வேதம், கிருஷ்ணயஜுர்வேதம், சுக்லயஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் என்பன.

மிகப் பழமையான காலத்தில் வேதம் என அழைக்கபட்டு வந்துள்ள நால்கள் எவை?

ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூவகை நூல்களே

இதனை நாம் எதிலிருந்து அறிந்து கொள்ளலாம்?

பாணினி முனிவரின் வியாகரண நூல் முதலியவற்றிலிருந்து

சற்றுப் பின்னர்வேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது எது?

அதர்வணவேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...