ஞாயிறு, 15 நவம்பர், 2020

தமிழ் நாடக விழா -2020

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலையமாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் நாடக விழாவை நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சிங்கள நெடு நாடகங்கள், குறுநாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என 70துக்கும் மேற்பட்ட நாடகங்கள் மருதானை டவர் அரங்கிலும் எல்பின்ஸ்டன் அரங்கிலும் மேடை ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந் நிறுவனத்தின் தமிழ்த் துறை பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் செயற்பாட்டால் கடந்த 3ஆம் திகதிமுதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் தமிழ் நாடக விழா நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும் 5 நெடுநாடகங்களும் மேடை ஏறுகின்றன. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்கின்றனர். கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. இந்த நாடக விழாவில் கடந்த 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” கடந்த 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இன்று 5ஆம் திகதி இன்று ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "இப்படி ஒரு நாள்" என்ற நாடகத்தில் நடிக்கும் நடிகையான செல்வராஜ் லீலாவதி நாடகத்துறையில் 16 வருடம் அனுபவமுள்ளவர். சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக எழுத்தாளர் என்ற எல்லா பிரிவுகளிலும் தேசிய மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர். அரங்கச் செயற்பாட்டாளரான இவர் , 2019 ஆம் ஆண்டு சிறிலங்கா, ஜப்பான் சிநேகபூர்வ விருதான "புங்கா" விருதை வென்றவர். இந்நாடகத்தில் நடிக்கும் முருகேசு அஜந்தன் சாந்தகுமார் நாடகத்துறையில் 16 வருடம் அனுபவம் பெற்றவர், அரங்க ஒளியமைப்பு தொடர்பாக சர்வதேச அளவில் பயிற்சிகளை மேற்கொண்டவர். இத்துறைக்காக அரச மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். நாடகங்களையும் இயக்கியுள்ளார் நாடக உபகரணங்கள் காட்சி வடிவமைப்புகளிலும் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 6 ஆம் திகதி நாளை ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரச பணிக்காக மட்டும்”, பி.சிவா பிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "அரச பணிக்காக மட்டும்" என்ற நாடகத்தில் சிரேஷ்ட கலைஞர் ரஞ்சனி ராஜ் மோகன்,கலை ஸ்ரீ, தேவர் முனிவர்,விஜய், ஸ்ரீ பாலன், திவாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீங்களும் இந்த நாடகத்தைப் பார்த்தால், வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பெற்ற பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும் என்று இதற்கு கதை வசனம் எழுதிய கலைஞர் மொழிவாணன் குறிப்பிட்டுள்ளார். 7ஆம் திகதி நாளை மறுதினம் ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறுகின்றன. நெடும் நாடகங்கள் 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஓக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஓக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஓக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவுள்ளன. இலவசமாக நடத்தப்படவுள்ள இவ்விழாவில் தமிழ் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரசிகபெருமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கே. ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...