ஞாயிறு, 15 நவம்பர், 2020

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறை (அறநெறி அறிவு நொடி)

)ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் என்ன செய்யப்படும்? சுத்தம் செய்யப்படும் ) சுத்தம் செய்யப்பட்டு பின் என்ன செய்யப்படும்? ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் அமிழ்த்தி வைக்கப்படும். ) எந்த ஜலவாசத்தில் வைக்கப்படும்? அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து வைப்பார்கள். ) புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை எவ்வளவு காலம் ஜலவாசத்தில் வைப்பார்கள்? ஒரு மண்டலம் ) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்? 48 நாட்கள் ) ஜலவாசத்தில் இருக்கும் சிலை என்னவாகும்? குளிர்ந்து உறுதியாக உருவாகும். ) இவ்வாறு ஜலவாசத்தில் வைப்பதால் அறிவியல் படி எதனை அறியலாம்? சின்னமான சிலையா அல்லது வழிபடத்தக்க சிலையா என்று அறியலாம் )சின்னமான சிலை என்று எவ்வாறு அறியலாம்? ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். ) இவ்வாறு செய்வதால் என்ன நன்மை? பின்னமான சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. ) குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வதால் என்ன நடக்கும்? அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். ) அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை என்ன? ஜலவாசம். ) 48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக என்ன செய்வார்கள்? தானிய வாசத்தில் வைப்பார்கள். ) தானிய வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கப்படும். ) இதனை என்னவென்று அழைப்பார்கள்? தான்ய வாசம். ) தான்ய வாசத்தில் எத்தனை நாட்கள் வைக்கப்படும்? இதுவும் 48 நாட்கள் தான். ) நவ தானியங்களோடு இங்கு வேறு என்ன வைக்கப்படும்? நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ) மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் எத்தனை ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்? ஆறு ) அந்த ஆறு வாசங்களும் எவை? ஜலவாசம், தான்ய வாசம், ரத்ன வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் ) ஜலவாசம், தான்ய வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்? நவரத்தினங்களில் மூழ்க வைக்கப்படும் ) நவரத்தினங்களில் மூழ்க வைப்பதை என்னவென்று சொல்வார்கள்? ரத்ன வாசம். ) ரத்ன வாசம் செய்தபின் என்ன செய்யப்படும்? தன வாசம் செய்யப்படும் ) தன வாசம் எப்படி செய்யப்படும்? பொற்காசுகளில் மூழ்க வைக்கப்படும் ) தன வாசம் செய்த பின் என்ன செய்யப்படும்? வஸ்திர வாசம், ) வஸ்திர வாசம் எப்படி வைக்கப்படும்? பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்ய வைக்கப்படும். ) இறுதியாக எந்த வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும்? சயன வாசத்தில் ) சயன வாசத்தில் வைக்கப்படுவதை என்னவென்று அழைப்பார்கள்? ஹம்சதூளிகா மஞ்சம் ) சயன வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ) இந்த ஆறு வாசமும் எத்தனை நாட்கள் செய்யப்படும்? 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் ) இவற்றில் இப்போது எத்தனை வாசத்தால் முடித்துக் கொள்ளப்படுகிறது? இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. ) எனினும் தான்ய வாசத்தில் வேறு என்ன செய்யப்படுகிறது? தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது. ) இந்த தான்ய வாசம் ஏன் செய்யப்படுகிறது? நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும் என்பதாலாகும். ) நவதானியத்தில் இருந்து என்ன வெளியாகும்? வெவ்வேறு விதமான வெப்பம் ) இந்த வெவ்வேறு விதமான வெப்பம் என்ன செய்யும்? சிலையை தாக்கும். ) 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் என்ன நடக்கும்? அவை உடைந்து விடும். ) அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் என்ன நடக்கும்? சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ) அதைப் போல ரத்தின வாசத்தில் என்ன நடக்கும்? வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். ) அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் என்ன நன்மையை பெறும்? தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். ) 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகள் என்ன செய்யப்படும்? பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர் கண்கள் திறக்கப்படும். ) இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைப்பதால் ஏற்படும் நன்மை என்ன? குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வரப்படும். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. ) இந்த வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்? 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலை வைக்கப்படும். ) புஷ்பாதி வாசம் என்பது எவ்வாறு செய்யப்படும்? பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை வைக்கப்படும். ) புஷ்பாதி வாசம் செய்யப்படுவதால் ஏற்படும் நன்மை என்ன? அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறும். ) புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக என்ன செய்யப்படும்? தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படும். ) சயனாதி வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடப்படும். ) இந்த வாசத்தில் என்ன செய்யப்படுகிறது? சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. ) இத்தனைக்குப் பின் என்ன செய்யப்படும்? கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. ) கண் எவ்வாறு திறக்கப்படும்? தகுந்த பூஜைக்கு பின் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படும். ) கண் இவ்வாறு யாரால் திறக்கப்படும்? தலைமை ஸ்தபதியால் ) அந்த சிலைக்கு தெய்வீகத் தன்மை ஊட்டப்படுவது எப்போது? கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடக்கும் யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. ) கடைசியாக செய்யப்படும் வாசம் என்ன? ஸ்பரிசவாதி ) ஸ்பரிசவாதியத்தில் என்ன செய்யப்படும்? ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படும். ) இந்த காரியத்தை யார் செய்வார்? கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...