திங்கள், 20 செப்டம்பர், 2010


அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

ஆய கலைகள் 64

7982) நீரில் நடத்தலை என்னவென்பர்? ஜல ஸ்தம்பம்

7983) காற்றில் நடத்தலை என்னவென்பர்? வாயு ஸ்தம்பம்

7984) திட்டி ஸ்தம்பம் என்பது எதனை? கண் பயிற்சி

7985) வாக்கு ஸ்தம்பம் என்பது என்ன? வாய்ப் பயிற்சி

7986) சுக்கில ஸ்தம்பம் என்பது என்ன? இந்திரியக்கட்டு

7987) கன்ன ஸ்தம்பம் என்பது என்ன? மறைந்தவற்றைக் காணுதல்

7988) கடக ஸ்தம்பம் என்பது என்ன? யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்

7989) அவஸ்தைப் பிரயோகம் என்பது என்ன? ஆத்மாவை இயக்குதல்

விநாயகர் விரதம்
7990) மும்மணிகளைப் போல் விநாயகருக்குரிய மூன்று சிறப்பான விரதங்களைத் தருக? சுக்கிர வார விரதம், சதுர்த்தி விரதம், விநாயக ஷஷ்டி விரதம்.

7991) வாரந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சுக்கிரவார விரதம்

7988) மாதந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சதுர்த்தி

7992) வருடத்தில் ஒரு தடவை அனுஷ்டிக்கும் விரதம் எது? விநாயக ஷஷ்டி விரதம்

7993) சுக்கிரவார விரதம் எப்போது அனுஷ்டிக்கப் படுகிறது? வெள்ளிக்கிழமை தோறும்

7994) இந்த விரதத்தை எப்போது ஆரம்பிப்பது நல்லது? வைகாசி மாத வளர்பிறையில் வரும் முதலாவது வெள்ளிக்கிழமையில்

7995) இவ்விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்கலாம்? இரவு ஒரு நேரம் பால் பழம் அல்லது பலகாரம் உட்கொள்வது நன்று. இயலாதவர்கள் ஒரு நேர உணவு உண்டு விரதமிருக்கலாம்.

7996) விநாயகப் பெருமான் உற்பவமானது எப்போது? விநாயக சதுர்த்தியன்று

7997) இந்த விரதத்தை எப்போது அனுஷ்டிக்க வேண்டும்? ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தித் திதியன்று

7998) அந்த நாளில் சதுர்த்தி எந்த வேளையில் நிற்க வேண்டும்? மத்தியானத்தில்

7999) ஆவணி சதுர்த்தி விரதம் பற்றி எந்த புராணத்தில் சிறப்பித்து கூறுப்பட்டுள்ளது? கந்தபுரணத்தில்

8000) இந்த விரதத்தைப் பற்றி பஞ்சபாண்டவர் களுக்கு உபதேசித்தது யார்? சூத முனிவர்

8001) பாண்டவர்களுக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது எதனால்? துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால்

7999) பாண்டவர்கள் காட்டிலே மிகுந்த கஷ்டமும் மன வேதனையும் அடைந்திருக்கும் நிலையில் யாரை சந்திக்கிறார்கள்? சூத முனிவரை

8000) சூதமுனிவரிடம், தமது கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ வழி கேட்டவர் யார்? தருமர்

8001) அதற்கு வழியாக சூதமுனிவர் உபதேசித்தது எதனை? விநாயக சதுர்த்தி விரதத்தை

8002) சூதமுனிவர் தருமரிடம் வேறு என்ன கூறினார்? இந்த விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்ற வர்களின் வரலாற்றை.

8003) இந்த விரதத்தை அனுஷ்டித்து தமயந்தி அடைந்த பலன் என்ன? நளனை அடைந்தது.

8004) கிருஷ்ணர் அடைந்த பயன் என்ன? ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் பெற்றுக் கொண்டது.

8005) இராமன் அடைந்த நன்மை என்ன? சீதையை மீட்டது

8006) இந்திரன் அடைந்த பயன் யாது? சுரப் பகையை வென்றது

8007) பகீரதன் பெற்ற பலன் யாது? கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது.

8008) இந்த விரதத்தை பாண்டவர்கள் அனுஷ்டித்ததால் அடைந்த பயன் என்ன? உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றது.

8009) இஷ்டசித்திகளை பெற, நினைத்த காரிய சித்தியை விரும்புவோர் எந்த விரதத்தை கைக்கொள்ளலாம்? விநாயக சதுர்த்தி விரதத்தை

8010) விநாயக சதுர்த்தி அன்று முதன் முதலில் என்ன செய்ய வேண்டும்? அதிகாலையில் துயிலெழுந்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடு பட வேண்டும்.

8011) மத்தியானம் உணவு உண்ணலாமா? ஒரு பொழுது உண்ணளாம்

8012) இந்த உணவில் எந்த எண்ணெய் சேர்க்கக் கூடாது? நல்லெண்ணெய்

8013) இரவில் உணவு உண்ணலாமா? பட்டினி இருக்க முடியாதவர்கள் பால் பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

8014) விநாயக சதுர்த்தி பூஜையின் போது நிவேன தனங்களாக படைக்கக் கூடியவை எவை? அறுசுவை உணவும் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை.

8015) இவை ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையாக நிவேதனம் செய்ய வேண்டும்? 21. (வெள்ளரிப் பழத்தை 21 துண்டுகளாக வெட்டி வைக்கலாம்)

8016) விநாயக சதுர்த்தி பூஜையில் இடம்பெறும் இன்னொரு முக்கிய அம்சம் என்ன? 21 பத்திரம், 21 புஷ்பம், 21 அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சனை செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...