திங்கள், 21 நவம்பர், 2011

கொழும்பு, ஆமர்வீதி, பெரடைஸ் பிளேஸ்ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்






கொழும்பு மாநகரில் வர்த்தக நிலையங்களும் தொழிலகங்களும் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்புமிக்க ஆமர் வீதியில், பெரடைஸ் பிளேஸில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மஹா காளியம்பாள். மிகவும் பழமையான சின்னஞ்சிறு மடாலயமாக இருந்த இந்த ஆலயம், இன்று ஆகம விதிகளுக்கமைய அமைக்கப்பட்டவர் பெரும் ஆலயமாகத் திகழ்கிறது.

இங்குள்ள அம்பாளின் அருள் மகிமை உணர்ந்து இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இவ்வாலயத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன், ஆலய திருப்பணி வேலைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

இங்குள்ள பக்தர்களினதும் இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களினதும் உதவியுடன் சுமார் மூன்று கோடி ரூபா செலவில் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ரவி சங்கர் ஸ்தபதி பக்தியும் கலைவண்ணமும் மிளிரும் வண்ணம் இவ்வாலயத்தை அமைத்து வருகிறார். இவ்வாலயத்தில் திரிதள இராஜ கோபுரம் அமைக்கப்படுவதுடன், விசாலமான மண்டபமும் அமைக்கப்படுகிறது.

ஆகம விதிப்படி, மத ஆசாரப்படி கலை அலங்காரத்துடன் நவீன வசதிகளோடு தாராளமான இடவசதி கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012-03-25ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

2012-03-23ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகும். 24ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

2011-05-11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகப் பூர்த்தி நடைபெற்று 12ஆம் திகதி முத்தேர்த்திருவிழாவும் 13ஆம் திகதி பால்குட பவனியும் 14ஆம் திகதி வைரவர் மடையும் நடைபெறும்.

ஆலய முன்னாள் போஷகர் பிரதிஷ்டை சிரோன்மணி நவாலியூர் சாமி விஸ்வநாத குருக்களின் ஆசியுடன் அவரது புதல்வர் பிரதிஷ்டா பூஷணம் வெங்கட சுப்பிரமணியம் கும்பாபிஷேக கிரியைகளை நடத்திவைப்பார். ஆலய பிரதம குரு சுசீந்திர குருக்களும் இதில் கலந்துகொண்டு கிரியைகளை நடத்துவார்.

இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு “ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்” என்ற இறுவட்டு (விளி) ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் பின்னணிப் பாடகர்களான டி. எம். எஸ். பால்ராஜ், ஸ்ருதி, முகேஸ் ஆகியோருடன் சாம்பசிவமணிக் குருக்களும் இந்த இறுவட்டில் காளி அம்பாளின் அருள் மகிமையை உணர்த்தும் திருப்பாடல்களை பாடியுள்ளார். இந்த இறுவட்டில் அம்பாளின் புகழ்மணக்கும் ஏழு திருப்பாடல்கள் உள்ளன. ஜெய்ச்சா என அழைக்கப்படும் ஜெயச்சந்திரன் இதற்கு இசை அமைத்துள்ளார்.

கிராமத்து மண்வாசனை கமழும் வண்ணம் தென்னிந்திய பக்தி திரையிசைப் பாடல்களுக்கு ஒப்பானதாக இப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இறுவட்டு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு 200 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது.

அம்பாளின் புகழ் மணக்கும் இந்த இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10ஆம் திகதி கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெற்றது. கொழும்பு வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலரும் தொழிலதிபருமான ஈஸ்வரன், கொழும்பு, முகத்துவாரம் ஸ்ரீ விஷ்ணு ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் தொழிலதிபருமான தேசமான்ய துரைசாமி, தொழிலதிபர் சுப்புராமன், பிரைட்டன் ரெஸ்ட் உரிமையாளர் செல்வராஜ் அருள் ஜுவலர்ஸ் உரிமையாளர் கணேச பெருமாள் ஆகியோர் இந்த இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறும் போது எல்லாம் வல்ல ஸ்ரீ மகா காளி அம்மனின் அருள் மணக்கும் மேலும் இரண்டு இறுவட்டுகளை (விளிக்களை) வெளியிடவுள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.

இதுவரை ஆமர் வீதியெங்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருந்த ஸ்ரீ அம்பாளின் அருள்மகிமை இந்த இறுவட்டு மூலம் எல்லோரது உள்ளங்களில் மட்டுமன்றி இல்லங்களிலும் ஒலிக்க வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இறுவட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் அம்பாளின் அருள்மகிமையை பரப்ப உதவுவதுடன், ஆலய கும்பாபிஷேகத்துக்கும் உதவி செய்தவர்களாவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...