திங்கள், 14 நவம்பர், 2011

அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீட மகரNஜhதி விழா



அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் நடத்தும் 29வது ஆண்டு 48 நாட்கள் மண்டல பூஜை மகரஜோதிப் பெருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகும். அன்றுகாலை 6 மணி முதல் மஹா கணபதி ஹோமந் தொடர்ந்து, விரத முத்திரை மாலை அணிதல் இடம்பெறும். அன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, ஐயப்பன் கவச பாராயணம், ருத்ரபாராயணம் என்பன நடைபெறும். மாலை 6 மணி முதல் ஸ்ரீ ஐயப்பன் திருவிளக்குப் பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கவச பாராயணம், விஷேட ஐயப்பன் பஜனை 18 படி விசேட தீபாராதனை, ஹரிவராசனம், நடை சாத்துதல், அருட் பிரசாதங்கள் வழங்கல் என்பன இடம்பெறும்.

பிரதி புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் விசேட நவோத்தர ஸஹஸ்ர (1008) மஹா சங்காபிஷேகம், விஷேட மலையாள பூஜை, அன்னதான பூஜை இடம்பெறும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணக்கு ஹரிவராசனம் இடம்பெறும்.

இவ்வாலயத்தில் 2011.12.04 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹிஷ சம்காரம் வேட்டைத் திருவிழாவும் எதிர்வரும் 09 ஆம் திகதி மாலை 5 மணிக்கு (உயிருள்ள) நாகராஜானுக்கு பூஜையும், 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தீபஜோதி – தீச்சட்டி வழிபாடும், 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு பால் காவடிப் பெருவிழாவும் பால்குட பவனியும், 24 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மஹா யாகாரம்பமும் இடம்பெறும். இந்த மஹா யாகம் 24 ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு இடம்பெறும்.

2011.01.01 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹாயாக பூர்த்தி, மஹா பூர்ணாகுதி, 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஐயப்ப சுவாமி ரதபவனிப் பெருவிழாவும் 2011.01.03 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் தீர்த்தத் திருவிழாவும் 2011.01.05 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கருப்பண்ண சுவாமி பூஜையும் இடம்பெறும்.

கப்பித்தாவத்தை பிரம்மஸ்ரீ பா. ஷண்முகரெத்ன சர்மா, கனடா சாம்பசிவ சோமாஸ்கந்த சிவாச்சாரியார், இணுவில் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், அவுஸ்திரேலிய சிவஸ்ரீ இராமச்சந்திரன் குரு, திருகோணமலை சிவஸ்ரீ ரவிச்சந்திரக் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் கிரியைகள் நடைபெறும்.

தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன 23வது குரு மஹா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீன 2வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோரின் அருளுரைகளும் இங்கு இடம்பெறும்.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் சாம்பசிவ ஸ்ரீ மணி கண்ட சர்மா பூஜைகளை நடத்துவார்.

ஆலய குரு சிவஸ்ரீ இ. சபாரெத்தினக் குருக்களும் இதில் கலந்து கொள்வார். பிரம்மஸ்ரீக்களான நித்தியானந்த சுதானந்த சர்மா, ந. ஜெகதீஸ்வர சர்மா, சி. பாலசுப்பிரமணிய சர்மா, மோகன காந்த சர்மா ஆகியோர் கா. சாதகாசிரியார்களாக விளங்குவார்கள். 2012.01.04 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குரு பீடாதிபதியின் 29 வது ஆண்டு பீடரோஹண விழா (குருபூஜை) நடைபெறும்.

ஸ்ரீ சாஸ்தா பீட ஆஸ்தான வித்துவான்களான இராஜமாணிக்கம் ரவிச்சங்கர் குழுவினரும் விமல் – சிவா குழுவினரும் என். புண்ணியமூர்த்தியும் மங்கள இசை வழங்குவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...