திங்கள், 28 நவம்பர், 2011

சனிப்பெயர்க்சி சிலன கூறும் இதழ்



வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் எதிர்வரும் 2011.12.21 ஆம் திகதி காலை 7.24 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

துலா ராசிக்கு இடம்பெயரும் சனி பகவான் 2012.03.26 ஆம் திகதி பின்னோக்கி மீண்டும் கன்னி ராசிக்குச் சென்று 2012.12.16 ஆம் திகதி பிற்பகல் 2.44 வரை துலா ராசியிலிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி துலா ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்,
மேஷ ராசிக்கு கண்ட சனியும்.
கடக ராசிக்கு அர்த்தாஷ்டமி சனியும்
கன்னி ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
துலா ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்
விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
மகர ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும்
மீன ராசிக்கு அஷ்டம சனியும்
டைபெறவுள்ளது.

இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக ரிஷபம், சிம்மம், தனுசு நேயர்கள் அனுகூலமான பலன்களை அடைவார்கள்.

மிதுனம், கும்பம் ராசி நேயர்களுக்கு மத்தியமமான பலன்கள் ஏற்படும்.

இவ்வாறு சனிப் பெயர்ச்சி பலன்கள் அக்கு வேறாக கணித்து திறம்பட தந்துள்ளார் தமிழ்நாடு, சென்னை, வட பழனி முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளரும் தமிழகத்தில் ‘நலம் தரும் ஜோதிடம்’ எனும் மாத இதழை வெளியிட்டு வரும் ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்.

இவர் கணித்துக் கூறியுள்ளதை தொகுத்து மாதாந்த, நாளாந்த பஞ்சாங்கக் கலண்டர்களை (நாட்கட்டிகளை) தனி மனிதனாக நின்று வருடாந்தம் வெளியிட்டு வரும் யுனிலங்காஸ் வே. பாலேந்திரா ‘சனிப் பெயர்ச்சி’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் மாதாந்த இதழ்களுக்கு சற்றும் சளைக்காத வண்ணம் அழகுற, சிறப்புற இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திலிருந்து கொண்டு வரும் பொருளொன்றை இலங்கையில் வாங்குவதாக இருந்தால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் விலையில் மும்முடங்கு பெறுமதியான விலையை கொடுத்துத்தான் வாங்க வேண்டுமாம். ஆனால் இந்த சனிப் பெயர்ச்சி இதழ் 80 ரூபா என்ற மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆலயமொன்றின் மூலஸ்தானத்தில் கொலு இருக்கும் சனீஸ்வரனின் திருவுருவச் சிலையுடன் இராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் திருவுருப் படங்கள் இந்த இதழின் முன் அட்டையை அலங்கரித்திருக்கிறது.

சனி பகவானைப் பற்றியும் அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரை சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என சனியின் வகைகளைப் பற்றியும் இவ்வாறான சனிகளின் பலாபலன்களையும் இவர் விரிவாக இந்த இதழில் கூறியுள்ளார். அதுபோல் சனி மாற்றத்தால் ஒவ்வொரு ராசிகாரருக்கும் ஏற்படக்கூடிய பலாபலன்களையும் இவர் கணித்துள்ளார். உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என சகல பிரிவினருக்கும் இந்த சனிப் பெயர்ச்சியினால் ஏற்படும் பலாபலன்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...