திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாத்தளை மாரியம்மனின் மாசிமக பஞ்சரத பவனி

சீருள் சுரக்கும் ஆதிபராசக்தியானவள் வாழை, கமுகு போன்ற கனிச் சோலைகளுக்கு மத்தியில் அழகு மலை அடிவாரத்தில் மலை வளமும், கலை வளமும், மாண்புற்று விளங்கும் மாத்தளை மாநரில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மனாக திவ்விய சிம்ஹாசனத்தில் வீற்றிருந்து அருள் சுரக்கும் திருத்தலமே மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். இலங்கையில் பல திருக்கோயில்களில் பெரிய அளவிலான இராஜ கோபுரங்களுடன் காணப்பட்டாலும் இலங்கை திருநாட்டில் மிக உயர்ந்த இராஜ கோபுரம் அமையப்பெற்ற திருத்தலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமாகும். ஆனால் அதனை மிஞ்சும் வகையில் இப்பொழுது மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு நோக்கி 108 அடி நவதள நவகலசம் கொண்ட நவதள இராஜ கோபுரம் அமைக்கப்பெற்று வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது. இவ்வாறு புகழ் பெற்ற மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசிமக மகோற்சவம் இருப்பத்தைந்து நாட்களுக்கு நடைபெறும். இவ் உற்சவம் கடந்த 02-02-2013 காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 25-02-2013 காலை 7.30 மணிக்கு மேல் பஞ்சரதபவனி இரதோற்சவம் நடைபெறும். தேர்த்தினத்தன்று ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீசிவனம்பாள், ஸ்ரீமுத்து மாரியம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகள் சர்வலங்காரப் பூஷிதைகளாக அதிவிசித்திர விநோதமாக பஞ்சரதங்களில் ஆரோகணிக்கப்பட்டு, வெளி வீதி உலா (நகர்வலம்) நடைபெறும். 26-02- 2013 மாலை 3.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், இரவு கொடியேற்றமும், நடைபெறும். 27-02-2013 பகல் சண்டேஸ்வரி உற்சவமும் நடைபெறும். 01-03-2013 இரவு ஸ்ரீ வைரவர் பூஜை நடைபெறும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு 108 அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெறுவதோடு, தினமும் பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாலயம் கொழும்பிலிருந்து 90வது மைல் கல் தொலைவில், மலைப்பிரதேசமான மத்திய மாகாண கண்டி இராஜதானியிலிருந்து 16வது மைல்கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. வடக்கையும் மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகர் விளங்கி வந்திருக்கின்றது. மாத்தளை என்னும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பெருந் தொகையானவர்கள் மாத்தளையில் குடியமர்த்தப்பட்டமையால் ‘மஹாதலயக்’ (பெருங் கூட்டத்தவர்) எனும் பொருள்பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதே போன்று பண்டுகாபய மன்னனின் மாமன் (மாவல்) கிரிகண்ட சிவ இளவரசன் இப்பகுதியில் வசித்து வந்தமையால் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் ‘சூளவம்சம்’ எனும் சிங்கள காவியத்தில் இப்பிரதேசம் ‘மஹாதிபெதேச’ எனக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப் பேதங்கள் மருவி காலப் போக்கில் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் வரலாற்று ஏட்டுச் சுவடுகள் சான்று பகர்கின்றன. ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட போது ‘தலைமன்னார்’ ‘அரிப்பு’ இறங்குதுறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர். இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர். எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீமுத்து மாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்பவரின் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வ மரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக்கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றன. இத்தகைய சக்தி வாய்ந்த அன்னை முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று அமைக்கக் கிடைக்கப் பெற்றது பெரும் பாக்கியமே. அன்று மாத்தளை நகரம் சிறு கிராமமாகவும் வண்டித்தடம் பதித்த போக்குவரத்து சாலையாகவும் விளங்கியது. இது திருகோணமலைவரை செல்லும் பாதையாகும். அத்துடன் எமது மக்கள் சமய வழிபாட்டுடன் கலைகளையும் பேணி பாதுகாத்து வந்ததுடன் பயபக்தியாகவும் வளர்த்தார்கள். அதில் முக்கியமானது காமன்கூத்து, இது இந்த அம்பிகையின் பதியில் வருடம் தோறும் முன்பு நடாத்தி வந்ததாகவும் அது மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக சமய வழிபாட்டுடன் ஒரு கலாசார கேந்திரதலமாக அந்த ஆலயம் இருந்தமைக்கு பல சான்றுகள் உள்ளன. இவ்வலயத்தில் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பலியிடல் நடைபெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகோற்சவத்தின் போது இரதம் வெளிவீதி செல்வதற்கு முன் பலி பூஜை கொடுத்த பின்பு இரதம் வெளிவீதி செல்வது வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் பலியிடல் பூஜையை மாற்றியமைத்து புது முறையாக சாம்பல் பூசனியை வெட்டி பலி பூசையாக செய்து இரத்தங்களை இழுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உயிர் பலியிடலை நிறுத்தி சாம்பல் பூசணிக்காயை வெட்டி பலி பூசை செய்யும் மரபினை இவ்வாலயத்தில் ஏற்படுத்திய பெருந்தகை முத்தையாபிள்ளை கந்தசாமியாவார். 1955ம் ஆண்டளவில் க. குமாரசாமியார் தலைமை பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாகவும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும் 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம்திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டியதை மறுக்க முடியாது. அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அறங்காவல் சபையினர் மாத்தளை மாவட்டத்தில் இந்து சமய பணிகளை முன்னெடுத்து செயல்படுவதோடு இந்து சமயத்தை வளர்ப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுவருவதை காண முடிகிறது.ஆகவே இம்முறையில் மலையகத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் சமய சமூக மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்து மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயமாக தெய்வ நம்பிக்கையோடு நல்ல சமூகமொன்று உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...