திங்கள், 15 ஜூலை, 2013

கொழும்பில் ஆடிவேல் விழா

கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று உள் வீதி உலாவுடன் சுவாமி காலை 7.05 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி பவனி வந்து அருள்பாலிப்பார். கொழும்பு, புறக்கோட்டை, முதலாம் குறுக்குத்தெரு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து புறப்படும் சித்திரத்தேர், பிரதான வீதி, கோட்டை ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். அங்கு பக்தர்களுக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும். அதன்பின் பி. ப. 1.30 மணிக்கு காலி முகத்திடலிலிருந்து புறப்படும் சித்திரத் தேர் காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் அமுது அளிக்கப்படும். எதிர்வரும் 21 ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சுவாமிக்கு காலை 5 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு வேல் விழா விசேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் கிராமிய இசை பேரரசர் நாட்டுப்புற பாடல் நல்லிசை நாயகன் கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமியுடன் கிராமிய பாடல் இசை, குயில் மக்கள் இசை மாதரசி அனிதா குப்புசாமி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். பெளர்ணமி தினமான எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு விபூதிப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் வேல் விழா அர்ச்சனையும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமி இசை மாதரசி அனிதா குப்புசாமி தம்பதிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு திருவமுது போஜனம் வழங்கப்படும். எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து காலி வீதியூடாக பம்பலப்பிட்டி சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலிமுகத்திடலை வந்தடைந்து அருட்காட்சி புரிவார். எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அலங்கார புருஷராக சித்திரத் தேரில் கொலுவிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி காலிமுகத்திடலிருந்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டம், பிரதான வீதி வழியாக இரண்டாம் குறுக்குத் தெருவில் திரும்பி, ஒல்கொட் மாவத்தை, சந்தி வரை சென்று திரும்பி, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதி சென்று நான்காம் குறுக்குத்தெரு, கெயிசர் வீதி சந்தி வழியாக முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் திரும்பி மீண்டும் பிரதான வீதி, கான் மணிக் கூட்டுகோபுர சுற்று வட்டம், பேங்ஷால் வீதி வழியாக முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள தேவஸ்தானத்தை வந்தடைவார். சுவாமிகள் எழுந்தருளி நகர்பவனி வரும் போது சித்திரத் தேரை சுற்றியோ அல்லது தேருக்கு முன்னால் பன்னீர் தெளிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிக்க விரும்பும் பன்னீரை அபிஷேகம் செய்ய ஆலயத்திற்கு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சித்திரத் தேர் நகர் பவனி நாட்களில் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு விடுமுறை வழங்கி வேல் விழாவில் பங்கேற்குமாறும் வேல் விழா பவனி வரும்போது தங்களது வர்த்தக நிலையங்களிலும் இல்லங்களிலும் வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டி, புஷ்பங்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து பூஜை தட்டுடன் பட்டு சாத்தி, மலர் சொரிந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியை வரவேற்று உபசரிக்கும்படியும் ஆலய அறங்காவலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...