செவ்வாய், 27 ஜனவரி, 2015
அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர்
11212) புருவ மத்தியில் மூளையின் முன்புறம் என்ன சுரப்பி உள்ளது?
பைனீயல் கிளாண்ட்
11213) யோகசாஸ்திரத்தில் இதனை என்ன என்பர்?
ஆக்ஞாசக்கரம்
11214) சந்தனம், குங்குமம் பொட்டு வைப்பது ஏன்?
ஆக்ஞாசக்கரத்த குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம்.
11215) நெற்றியில் இடும் பொட்டை என்ன என்பர்?
நெற்றித் திலகம் என்பர்
11216) ‘திலம்’ என்றால் என்ன?
எள்
11217) பொட்டு திலகம் என்று எப்படி பெயர் வந்தது?
பொட்டை எள் அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் ‘திலகம்’ என்று பெயர் வந்தது.
11218) அக்காலத்தில் அரசர்கள் நெற்றியில் எதனை வரைந்து கொள்வர்?
வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர்.
11219) இதற்கு உபயோகப்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என்னென்ன?
சந்தனம், ஜவ்வாது
11220) இதற்கு என்ன பெயர்?
‘திலக தாரணம்’ என்று பெயர்
11221) இதில் என்னென்ன வடிவங்கள் இடம்பெறும்?
பூக்கள். பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள்
11222) இதில் இடம்பெறும் சிறப்பான வடிவம் எது?
தாமரை மலர்
11223) “மாளவிகாக்னிமித்ரம்’ என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளவர் யார்?
மகாகவி காளிதாசர்
111224) பசுவையும் நீரையும் விற்கலாமா?
கூடாது
11225) கலியுகத்திலிருந்து வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டுவித செயல்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுவார்கள் அந்த இரண்டுவித செயல்களும் எவை?
ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன் தரகு பெறுவது கூடாது. மற்றொன்று தண்ணீரை விற்று இதனால் பலவித நோய் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
11226) நெருப்பை யாருக்கும் கொடுக்கலாமா?
நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது.
11227) கோயிலில் தீபமேற்றினால் ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றலாமா?
ஏற்றக் கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள்.
11228) இதை தன் வாழ்வில் கடைபிடித்தவர் யார்?
அனுமன்
இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக் கூடது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுகுக் அருமையான விருந்து அளித்தார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015
பன்விலை செல்வவிநாயகர் ஆலயம்
பன்விலை செல்வவிநாயகர் ஆலய கும்பாபிN'கம்
பன்விலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிN'க நிகழ்வு இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற இறையருள் கைகூடியுள்ளதாக ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
பன்விலை பிரதேசத்தில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் 50 வருட கால பழைமையானது. 1969-01-31 ஆம் திகதியன்று ஆலய பரிபாலன சபை செயலாளர் ம.கருப்பைய்யாப்பிள்ளையின்; அரிய முயற்சியால் கட்டுவிக்கப்பட்டது.
இதன் தலைவர் டீ.;நடராஜப்பிள்ளை, பொருளாளர் எஸ்.ஐ.செல்லமுத்துப்பிள்ளை, துணைத்தலைவர் ஏ.வீ.ஆறுமுகம் ஆசாரியார், துணைச்செயலாளர் ஏ.சங்கரன் ஆகியோர் பக்க பலமாக நின்று ஆலய ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொண்டனர்.
மூல மூர்த்தியான ஸ்ரீ செல்வ விநாயகர் விக்கிரகம் 20-01-1969 அன்று வத்தேகம பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக சி.த சோமசுந்தரம் பிள்ளையால்; கொண்டுவரப்பட்டு கும்பாபிN'கம் இடம்பெற்றது.
கும்பாபிN'கம் 1970- ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி விமரிசையாக இடம்பெற்றது. அன்றிலிருந்து 2004 வரை மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்ந்த இவ்வாலயம் பாலஸ்தானம் கண்டு 10 வருடங்களின் பின்னர் 2015-02-01 அன்று கும்பாபிN'கம் காண எம்பெருமான் அருள் பாலித்துள்ளார்.
பன்விலை பிரதேச பொது மக்கள், தனவந்தர்கள், உட்பட பலரும் ஆலத்திருப்பணிக்காக பல்வேறு வகைகளில் உதவி நல்கி வருகின்றனர். ஆலய அறங்காவலர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். செயலாளர் எஸ்.சிவானந்தம் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய இறைபணி ஆலயத்தை கும்பாபிN'கம் காணச் செய்துள்ளது.
கே.மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, வீ.விஜயகுமார் ஆகியோரின் அரும் பணிகளும் ஆலயத்தை தலைத்தோங்கச் செய்துள்ளன. இவ்வாலயத்தின் சமூகப்பணிகளாக ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை இயங்கி சிறப்பான கல்விப்பணியை மேற்கொண்டு வருகிறது. பன்விலை கல்விக் கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் வகுப்புக்களும் இடம்பெற்று வருகிறது.
இத்துடன் அறநெறி வகுப்புகளும் நடன, சங்கீத வகுப்புகளும் பன்விலை பிரதேசத்திற்கு பாரிய கல்வி, கலை, கலாசார சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது.
இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN'க நிகழ்வின் கிரியாகால நிகழ்வுகள் 30-01-2015 அன்று ஆரம்;பமாகும். 31-01-2015 அன்று பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
01-02-2015 காலை 9.20 மணிமுதல் 10.41 மணிவரை ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிN'கம் இடம்பெறவுள்ளது.
கும்பாபிN'க நிகழ்வுகளுக்கு உபயம் செய்ய விரும்புவோர் ஆலய அறங்காவலர் சபையோடு தொடர்பினை ஏற்படுத்;துமாறு கேட்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு செயலாளர் எஸ்.சிவானந்தம் சைவ மகா சபை பன்விலை.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
111207) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?
இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
111208) கடவுளின் படம் அல்லது சிலை... எது வழிபாட்டிற்கு உகந்தது?
மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம்.
நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
111209) சுமங்கலிகளை வழியனுப்பும் போது குங்குமம் கொடுக்க வேண்டுமா?
அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும் போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.
111209) விரதத்தின் போதும் கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்?
தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை ஆனால் அவற்றுள் செப்பு உலோகம் அதனை வெகு சுலபமாகக் கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.
அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் பொது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும் அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப்பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்குக் கிடைக்கின்றது.
எண் குணங்களும் எவை தன்வயத்தனாதல், தூயஉடம்பின்னாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பனவாகும்.
111210) எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்ன?
சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்டாதவாறு போல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார்.
111211) பொங்கலுக்கு - மஞ்சள் குலை வாங்குவது ஏன்?
மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும் போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுப நிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.
திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத்தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.
சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான்.
இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சிரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...