செவ்வாய், 20 ஜனவரி, 2015

பன்விலை செல்வவிநாயகர் ஆலயம்

பன்விலை செல்வவிநாயகர் ஆலய கும்பாபிN'கம் பன்விலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிN'க நிகழ்வு இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற இறையருள் கைகூடியுள்ளதாக ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார். பன்விலை பிரதேசத்தில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் 50 வருட கால பழைமையானது. 1969-01-31 ஆம் திகதியன்று ஆலய பரிபாலன சபை செயலாளர் ம.கருப்பைய்யாப்பிள்ளையின்; அரிய முயற்சியால் கட்டுவிக்கப்பட்டது. இதன் தலைவர் டீ.;நடராஜப்பிள்ளை, பொருளாளர் எஸ்.ஐ.செல்லமுத்துப்பிள்ளை, துணைத்தலைவர் ஏ.வீ.ஆறுமுகம் ஆசாரியார், துணைச்செயலாளர் ஏ.சங்கரன் ஆகியோர் பக்க பலமாக நின்று ஆலய ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொண்டனர். மூல மூர்த்தியான ஸ்ரீ செல்வ விநாயகர் விக்கிரகம் 20-01-1969 அன்று வத்தேகம பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக சி.த சோமசுந்தரம் பிள்ளையால்; கொண்டுவரப்பட்டு கும்பாபிN'கம் இடம்பெற்றது. கும்பாபிN'கம் 1970- ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி விமரிசையாக இடம்பெற்றது. அன்றிலிருந்து 2004 வரை மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்ந்த இவ்வாலயம் பாலஸ்தானம் கண்டு 10 வருடங்களின் பின்னர் 2015-02-01 அன்று கும்பாபிN'கம் காண எம்பெருமான் அருள் பாலித்துள்ளார். பன்விலை பிரதேச பொது மக்கள், தனவந்தர்கள், உட்பட பலரும் ஆலத்திருப்பணிக்காக பல்வேறு வகைகளில் உதவி நல்கி வருகின்றனர். ஆலய அறங்காவலர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். செயலாளர் எஸ்.சிவானந்தம் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய இறைபணி ஆலயத்தை கும்பாபிN'கம் காணச் செய்துள்ளது. கே.மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, வீ.விஜயகுமார் ஆகியோரின் அரும் பணிகளும் ஆலயத்தை தலைத்தோங்கச் செய்துள்ளன. இவ்வாலயத்தின் சமூகப்பணிகளாக ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை இயங்கி சிறப்பான கல்விப்பணியை மேற்கொண்டு வருகிறது. பன்விலை கல்விக் கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் வகுப்புக்களும் இடம்பெற்று வருகிறது. இத்துடன் அறநெறி வகுப்புகளும் நடன, சங்கீத வகுப்புகளும் பன்விலை பிரதேசத்திற்கு பாரிய கல்வி, கலை, கலாசார சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN'க நிகழ்வின் கிரியாகால நிகழ்வுகள் 30-01-2015 அன்று ஆரம்;பமாகும். 31-01-2015 அன்று பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். 01-02-2015 காலை 9.20 மணிமுதல் 10.41 மணிவரை ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிN'கம் இடம்பெறவுள்ளது. கும்பாபிN'க நிகழ்வுகளுக்கு உபயம் செய்ய விரும்புவோர் ஆலய அறங்காவலர் சபையோடு தொடர்பினை ஏற்படுத்;துமாறு கேட்கப்படுகின்றனர். தொடர்புகளுக்கு செயலாளர் எஸ்.சிவானந்தம் சைவ மகா சபை பன்விலை. "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...