செவ்வாய், 27 ஜனவரி, 2015

11212) புருவ மத்தியில் மூளையின் முன்புறம் என்ன சுரப்பி உள்ளது? பைனீயல் கிளாண்ட் 11213) யோகசாஸ்திரத்தில் இதனை என்ன என்பர்? ஆக்ஞாசக்கரம் 11214) சந்தனம், குங்குமம் பொட்டு வைப்பது ஏன்? ஆக்ஞாசக்கரத்த குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். 11215) நெற்றியில் இடும் பொட்டை என்ன என்பர்? நெற்றித் திலகம் என்பர் 11216) ‘திலம்’ என்றால் என்ன? எள் 11217) பொட்டு திலகம் என்று எப்படி பெயர் வந்தது? பொட்டை எள் அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் ‘திலகம்’ என்று பெயர் வந்தது. 11218) அக்காலத்தில் அரசர்கள் நெற்றியில் எதனை வரைந்து கொள்வர்? வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். 11219) இதற்கு உபயோகப்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என்னென்ன? சந்தனம், ஜவ்வாது 11220) இதற்கு என்ன பெயர்? ‘திலக தாரணம்’ என்று பெயர் 11221) இதில் என்னென்ன வடிவங்கள் இடம்பெறும்? பூக்கள். பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் 11222) இதில் இடம்பெறும் சிறப்பான வடிவம் எது? தாமரை மலர் 11223) “மாளவிகாக்னிமித்ரம்’ என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளவர் யார்? மகாகவி காளிதாசர் 111224) பசுவையும் நீரையும் விற்கலாமா? கூடாது 11225) கலியுகத்திலிருந்து வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டுவித செயல்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுவார்கள் அந்த இரண்டுவித செயல்களும் எவை? ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன் தரகு பெறுவது கூடாது. மற்றொன்று தண்ணீரை விற்று இதனால் பலவித நோய் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 11226) நெருப்பை யாருக்கும் கொடுக்கலாமா? நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. 11227) கோயிலில் தீபமேற்றினால் ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றலாமா? ஏற்றக் கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். 11228) இதை தன் வாழ்வில் கடைபிடித்தவர் யார்? அனுமன் இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக் கூடது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுகுக் அருமையான விருந்து அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...