வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எண்பத்து நான்கு ஆண்டுகள் பழைமைச் சிறப்பு கொண்ட கொழும்பு பரடைஸ் பிளேஸ் மகாகாளியம்மன் ஆலய திருவிழா

கொழும்பில் தமிழர் கள் செறிந்து வாழுகின்ற ஒரு பகுதியான பரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு உரிய தமிழ் வரைவிலக்கணம் ‘சொர்க்கபுரி’ என்பதாகும். அந்நியர் இலங்கையை ஆண்ட போது ஆங்கிலேயரால் இந்நாமம் சூட்டப்பட்டிருக்கலாம். உலகில் தல விருட்சங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்வது அபூர்வம். அரசும் பனையும் பின்னிப் பிணைந்த அபூர்வதலத்திலே 1931 ஆம் ஆண்டு இத்திருத்தலம் அமைந்தது. இத்தல விருட்சங்களில் அன்று நாகமாக நிலைகொண்டு நாகத்தம்பாளாக அருள்பாலித்து வந்தவள் ஸ்ரீ மகா காளியம்பாள். இதனை உணர்ந்த அம் பாள் அடியார்கள் இவ்விருட்சங்களைச் சுற்றி மாடம் அமைத்து அதில் சூலாயுத த்தை வைத்து வணங்கத் தலைப்பட்டனர். அன்று கொழும்பு நகரமாக இருந்த ¡லும் கூட இம்மக்கள் கிராமிய வழக் கப்படியே பூஜைகளை நடாத்தி வந்தனர். அம்பாளின் சக்தி படிப்படியாக வெளிப்பட காலத்தின் கோலத்திற்கேற்ப இவ்வாலயத்தை கட்டியெழுப்ப வாய்ப்புக் கிடைத்தது. அதற்கமைய கொழும்பு பரடைஸ் பிளேஸ் மக்கள் அனைவரும் அம்பாள் அருளால் அமரர் அ. குருசாமி தலைமையில் ஒன்றிணைந்து 1949 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி இவ்வாலயத்தை கட்டியெழுப்பத் திட்டமிட்டனர். அதற்கமைய தமிழகத்திலிரு ந்து சிற்ப சாஸ்திரி யான ஆர். நாகலிங்கம் அழைத்துவரப்பட்டார். ஆவணி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரது கை வண்ணத்தில் மூலமூர்த்தியான சப்தசதி ஸ்ரீ மகாகாளியம்மனுக்கும். ஸ்ரீ முனீஸ் வரப் பெருமானுக்கும் ஸ்ரீ சூலாயுத மூர்த்திக்கும் கோபுரங்களுடன் கூடிய திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன. இக் கோயில்களின் இஷ்ட தெய் வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடா வருடம் திருவிழா வெகு விம ரிசையாகக் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் முதல் நாளன்று காப்புக் கட்டு வைபவம் இடம்பெறும். அதற்கடுத்த ஏழு நாட்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். எட்டாம் நாள் கொழும்பு பரடைஸ் பிளேஸிலிருந்து அருள்பாலிக்கும் அம்பாளுக்கு முகத்துவாரம் சங்குமுகத்தில் கரகம் பாலித்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து கரகம், காவடி தீச்சட்டிகள் என பக்தர்கள் புடைசூழ அம்பாள் முகத்துவாரம் ஆலயத்திலிருந்து பாலத்துறை, சேதவத்தை, பலாமரச் சந்தி, பபாபுள்ளே தோட்டம், கிரா ண்ட்பாஸ் வீதியூடாக ஆலயத்தை வந் தடைவாள். ஒன்பதாம் நாள் காலை பாலாபிஷேக மும் மாலையில் மங்கல மங்கையரின் மாவிளக்கு பூஜையும், ஆலய முற்றத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பத்தாவது நாளன்று பக்த கோடிகள் மஞ்சள் நீராடி அம்மன் அருளைப் பெற்று சக்தி அடியார்களுக்கு அருள் வாக்குக் கூறுவார். அந்த அருளோடு சக்தி கரகமும் தீச்சட்டியும் ஏந்தி முகத் துவார சங்குமுகத்திற்குச் சென்று தீர்த் தமாடுவர். அதனைத் தொடர்ந்து பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் சந்நிதானத்தில் மகேஸ்வர பூஜை நடா த்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இத் திருக்கோவிலில் விஷேஷமாக முதலில் சூரியன், சந்திரனுக்கும் தலவிருட்ஷங்களான அரசும், பனையும் பின்னிப் பிணைந்து நிழலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகருக்கும் பூஜை செய்தபின் ஸ்ரீ விநாயகர், மூல மூர்த்தியும் சப்த சதி நாயகியாகிய ஸ்ரீ மகா காளியம்மனுக்கு, ஸ்ரீ முருகனுக்கும் பூஜை நடைபெற்று ஏனைய பரிவார மூர்ததிகளுக்கும் பூஜை நடைபெறும். தினந்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறும். காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பால் பூஜை காலை 6.30 மணிக்கு காலைச்சந்தி காலை 10.30 மணிக்கு உச்சிக்காலம் கோபூஜை மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மாலை 6.30 மணிக்கு இரண்டாம் காலம் மாலை 8.00 மணிக்கு அர்த்த சாமம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9.00 மணிக்கு அர்த்த சாம பூஜையும் நடைபெறும். ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் வருடா வருடம் வரும் விசேட விழாக்களாவன: வருஷாபிஷேகம், முதல் பத்து நாட்களும் காலையும் மாலையும் இலட்சார்ச்சனை வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் பூர்வ பட்ச அத்த நட்சத்திரத்தில் வருஷாபிகேம் சகஸ்ட சத சங்காபிஷேகம் நடைபெறும். ஆதி காலந் தொட்டு கிராமிய முறையில் நடைபெற்றதுபோல் இன்றும் கொழும்பு முகத்துவாரம் சங்குமுகத்தில் அம்பாள் அருளோடு தீமிதிப்பும் இரதபவனி, பால்குட பவனியும் பாலாபிஷேகமும். மாவிளக்கு பூஜையும் நடாத்தப்பட்டு இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டத்துடன் கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் தீர்த்த உற்சவம் நடைபெறும். அதன்பின் மகேஸ்வர பூஜை நடாத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். மாலை ஸ்ரீ பைரவருக்கும். ஸ்ரீ பத்ராகாளியம் மனுக்கும் மடைபரவி பொங்கல் படைத்து பூஜை நடாத்தப்படும்.இத் திருக்கோவிலில் நான்கு நவராத்திரி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.முதலாவதாக தை மாதம் சியாமளா நவராத்திரியும், சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் ஆஷாட நவராத்திரியும், புரட்டாதி மாதம் சாரதா நவராத்திரியும் நடைபெறும். சாரதா நவராத்திரியுடன் விஜயதசமி நடைபெறுவது போல ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கப்பட்ட பத்தாம் நாள் மஹா சண்டி ஹோமமும் நடாத்தப்படும். ஆவணி மாதம் திருக்குளிர்த்திப் பெருவிழா நடைபெறும். இவ்விழா வேறு எந்தவொரு ஆலயங்களிலும் நடைபெறுவதில்லை. இத்திருந்கோவிலில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.மாதா மாதம் வரும் பெளர்ணமி நாளன்று விஷேஷமாக 108 சங்காபிஷேகமும். ஸ்ரீ சக்கர பூஜையும், கோபூஜையும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் நடைபெறும். பங்குனி மாதம் வரும் பங்குனித் திங்கள் நான்கிலும் இத்திருக்கோவில் முற்றத்தில் அடியார்கள் தங்கள் கரங்களாலே பொங்கல் வைத்து ஸ்ரீ பத்ராகாளியம்மனுக்குப் படைத்து பூஜை செய்வர். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலப் பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஏனைய விஷேஷங்களாவன: விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஸ்கந்த ஷஷ்டி, வரலட்சுமி நோன்பு, கெளரி நோன்பு இன்னும் விஷேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. வேண்டியவருக்கு வேண்டிய வர த்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மனை நடி வரும் பக்த கோடிகளின் எண் ணிக்கையை நாளுக்கு நாள் பெருகி கொண்டிருப்பதன் மர்மம் அம்பாளின் மகிமையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...