வியாழன், 12 செப்டம்பர், 2019

"ஷர்மிளாவின் இதய ராகத்தின்" இரண்டாவது நாயகன் மோகன்குமார்



1958 இல் பிறந்த கிருஷ்னண் மோகன்குமார் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதல் மேடை நாடங்களில் ஆர்வம் செலுத்தினார். 40 வருடங்கள் கலை உலகிற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்த அவர்

வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள் என பல துறைகளிலும் சிறந்த நடிகராக விளங்கினார். இலங்கையின் மூத்த கலைஞர் கே.மோகன்குமார் தனது 59 வது வயதில் ஜாஎலயில் காலமானார்.

பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள மோகன் குமார் சக்தி சின்னத்திரையின் உதவி இயக்குனராக கடமையாற்றியுள்ளார். எழுத்தாளர், தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிணாமங்கள் ஊடாக மோகன்குமார் கலைத்துறைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் வெற்றிகொண்டிருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக கலைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர் கே. மோகன்குமார் இவர் சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படத்திலே நடித்த ஒரு கலைஞராவார். உயிரே , 13 பீ , முட்டை, ஒத்தல்லோ, ஆஸ்திகமா நாஸ்திகமா, சிவாஜி கண்ட இந்து ராஜ்சியம், மகரந்தம் ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். மகரந்த ஒரு வீடியோ எல்பமாம். சர்மிளாவின் இதய ராகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் இவர். 42 சிங்களப் படங்களுக்கு நடனக்காட்சிகளை திரையிடுவதற்கு பயிற்சி அளித்தவர்.

அந்தனி ஜீவாவின் அக்னி பூக்கள் நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமாகிய இவர் இறுதியாக்கம், நெறியாள்கை போன்றவற்றிலும் பணியாற்றியவர். சிறிக்கியும் பொறுக்கியும் என்ற நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற நாடகமேதை சேக்கிஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் ஒத்தல்லோவின் தளபதி கேசியோவாக நடித்தவர். பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்த ராஜ்சியத்தின் சிவாஜியின் தளபதி சந்திரமோகரான நடித்தவர்.

கிருஷ்ண கலாலாயம் என்ற நாடகமன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றியவர். கலைஞர்களை பாராட்டி கௌரவித்தவர். இவ்வாறு 40 ஆண்டு காலமாக கலைத்துறையில் சேவையாற்றிய கலைஞர் இவர். முரண்பாடுகளும் முற்றுப்புள்ளிகளும் இவர் நடித்த இன்னுமொரு நாடகமாகும். சிதைந்த மலர் இவர் நடித்த மற்றுமொரு நாடகமாகும். சலங்கை நாதம், மௌத்திரை ஆகியவை இவர் நடித்த மற்றும் பல நாடகங்களாகும். பாவக்கரை, மௌனத்திரை, அவள் மீண்டும் வருகிறாள் போன்ற நாடகங்கள் நடித்த இவர் இலங்கையில் கலைஞர்கள் இறந்தபோதும் அவர்களது நனவாக தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தி வந்த ஒரு கலைஞர் இவராவார். இப்படி எல்லாக் கலைஞர்களுக்கும் அனுதாபக் கூட்டம் நடத்துகின்றீர்களே ஒரு நாளைக்கு நீங்கள் இறந்தால் உங்களுக்கு யார் அனுதாபம் கூட்டம் நடத்துவார் என்று ஒருவர் கேட்டபோது, எனக்காக அனுதாபம் கூட்டம் நடத்த இதோ இந்த கலைஞர் சரவணா இருக்கிறார் என்று அவரை காட்டிக்கூறியவர். அந்த கூற்றுக்கமைய இந்த நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும். உரிமைக்குரல், புயலில் ஒரு மலர், பைத்தியங்கள் பலவிதம், மனிதன் என்னும் தீர்வு என்று இவர் நடித்த நாடங்களின் பெயர்களை விரித்துக்கொண்டு போகலாம்.

கலைஞர் கே. மோகன் குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் எதிர்வரும் 2019.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் கலைஞனுக்கோர் கண்ணீர் துளி என்ற இந்த நிகழ்வை நடாத்தவுள்ளது. இதில் இவருடன் நடித்தவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழர் நற்பணி மன்றத்தின் சார்பில் கலைஞர்களான கே. ஈஸ்வரலிங்கம், எஸ். சரவணா ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர். 18 வருடங்களுக்கு மேலாக மார்கழி மாதமானதும் மாலை அணிந்து ஐயப்ப விரதமிருந்து ஒவ்வொரு வருடமும் சபரி மலைசென்று தரிசனம் செய்து வந்த இவர். சபரிமலை சாஸ்தா பீடத்தின் செயலாளராகவும் நீண்டகாலம் சேவையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம் கலைத்துறை என இவரது சேவைகள் நீண்டுகொண்டே சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...