புதன், 3 டிசம்பர், 2025
தட்டாரத்தெரு அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய சங்காபிஷேகம்
கொழும்பு, புதுக்கடை, சில்வர் சிமித்லேன் (தட்டாரத்தெரு) அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 09-12-2025 ஆம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் விஷேச அபிஷேகமும் ஹோமத்துடன் இலட்சார்ச்சனையும் நடைபெறும். எதிர்வரும் 10-12-2025 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நவோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று காலை 10.00 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகும்.
ஆலயத்தில் இருந்து ரதம் அப்துல் ஹமீட் வீதி, குவாரிரோட், பழைய சோனக தெரு, ஸ்ரீ சங்கராராஜ மாவத்த, பண்டாரநாயக்க மாவத்த வழியாக ஆலயத்தை வந்தடையும். அன்று நண்பகல் 13.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இவ்வாரலயத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பால்குட பவனி நடைபெறும். இந்த பால்குட பவனி, அன்று காலை 8.30 மணிக்கு தட்டாரத்தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடையும். அத்தோடு தீர்த்தமும், கொடி இறக்குமும் நடைபெறும்.
12-12-2025 வெள்ளிக்கிழமை மாலை திருவூஞ்சலும் 16-12-2025 செவ்வாய்க்கிழமை வைரவர் மடையும் இடம்பெற்று திருவிழா நிறைவுபெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக