புதன், 3 டிசம்பர், 2025
அறநெறி அறிவு நொடி
207685. திருவுந்தியாரை அருளிச்செய்தவர் யார்?
உய்யவந்ததேவ நாயனார்.
207686. திருக்களிற்றுப்படியாரை அருளிச்செய்தவர் யார்?
திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்.
207687. சிவஞானபோதம் அருளிச் செய்தவர் யார்?
மெய்கண்டதேவர்.
207688. சிவஞானசித்தியார், இருபாஇருபஃது ஆகிய இரண்டையும் அருளிச் செய்தவர் யார்?
அருணந்தி சிவாச்சாரியார்.
207689. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யார்?
மனவாசகங்கடந்தார்.
207690. ஏனைய சிவப்பிரகாசம் முதல் சங்கற்பநிராகரணம் வரையுள்ள எட்டு நூல்களையும் செய்தருளியவர் யார்?
உமாபதி சிவாச்சாரியார்.
207691. உமாபதி சிவாச்சாரியார் செய்தருளிய நூல்கள் எட்டும் எவ்வாறு பெயர் பெறும்?
சித்தாந்த அட்டகம் எனப் பெயர் பெறும்.
207692. இந்த எட்டும் ஏனைய ஆறும் ஆகிய பதினான்கு சைவசித்தாந்த சாத்திர நூல்களும் எவ்வாறு பெயர் பெறும்?
மெய்கண்ட சாத்திரங்கள் எனப் பெயர் பெறும்.
207693. மெய்கண்ட சாத்திரங்கள் எதனை விளக்குகின்றன? சைவசித்தாந்த உண்மைகளை விளக்குகின்றன.
207694. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைகள் யாவை?
பதி, பசு, பாசம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக