திங்கள், 24 ஜூன், 2013

சிவன்

கே.ஈஸ்வரலிங்கம் 10115) நடராஜப் பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதை எண்ணவென்று அழைப்பார்கள்? ஆனித்திருமஞ்சனம் 10115) ஆனித்திருமஞ்சனம் விசேஷமாக எங்கு கொண்டாடப்படும்? சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் 10116) ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் யார்? பதஞ்சலி மகரிஷி 10117) பதஞ்சலி மகரிஷி யாரின் அம்சம்? ஆதிசேஷனின் 10118) பஞ்ச சபைகளும் எவை? ரத்தின சபை, கனக சபை, ரஜித சபை, தாமிர சபை, சித்திர சபை 10119) ரத்தின சபை எங்கு உள்ளது? திருவாலங்காட்டில் 10120) கனகசபை எங்கு உள்ளது? சிதம்பரத்தில் 10121) ரஜிதசபையை வேறு எவ்வாறு அழைப்பர்? வெள்ளி சபை 10122) வெள்ளிசபை எங்குள்ளது? மதுரையில் 10123) திருநெல்லியில் உள்ளது எது? தாமிரசபை 10124) திருக்குற்றாலத்தில் உள்ளது எது? சித்திரசபை 10125) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், 10126) சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்? பிரம்ம தாண்டவம் 10127) ஆனந்த தாண்டவம் தலம் எங்குள்ளது? சிதம்பரம், பேரூர் 10128) அஜபா தாண்டவம் தலம் எங்குள்ளது? திருவாரூர் 10129) சுந்தரத் தாண்டவம் தலம் எங்குள்ளது? மதுரை 10130) ஊர்த்துவ தாண்டவம் தலம் எங்குள்ளது? அவிநாசி 10131) பிரம்ம தாண்டவம் தலம் எங்குள்ளது? திருமுருகன் பூண்டி 10132) சிவனின் தாண்டவங்கள் எத்தனை? ஐந்து 10133) இந்த ஐவகை தாண்டவங்களும்எதனை உணர்த்துகின்றன? ஐந்தொழில்களை 10134) ஐந்தொழில்களையும் தருக. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 10135) ஐ வகை தாண்டவங்களையும் தருக. காளிகா, கவுரி, சங்கார, திரிபுர, ஊர்த்துவ 10136) படைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? காளிகா 10137) காத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? கவுரி 10138) அழித்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? சங்காரம் 10139) மறைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? திரிபுர 10140) அருளல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? ஊர்த்துவ 10141) தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது எது? மார்கழி 10142) காலைச் சந்திக்கு சமமானது எது? மாசி 10143) உச்சி காலத்திற்கு சமமானது எது? சித்திரை 10144) மாலைக் காலத்திற்கு சமமானது எது? ஆனி 10145) இரவுக்கு சமமானது எது? ஆவணி 10146) அர்த்த யாமத்துக்கு சமமானது எது? புரட்டாதி 10147) ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனத்தை எவ்வாறு அழைப்பார்கள்? ஆனி உத்திரம் 10148) ஆனி உத்திரத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்? ஆனித் திருமஞ்சனம் 10149) தில்லையில் எத்தனை சபைகள் உள்ளன? ஐந்து 10150) அந்த ஐந்து சபைகளையும் தருக சித்சபை, கனக சபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை. 10151) கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் என்ன? ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே! 10152) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...