திங்கள், 16 டிசம்பர், 2013

திருநீறு

கே. ஈஸ்வரலிங்கம் 10473) திருநீறு என்பது என்ன? திருநீறு சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். 10474) திருநீறு வேறு எவ்வாறு அழைக்கப்படும்? விபூதி, ஐசுவரியம் என்றும் கூறப்படும். 10475) திருநீறு உணர்த்தும் தத்துவம் என்ன? எத்தகையினராக இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் எனும் தத்துவத்தை இது உணர்த்துகிறது. 10476) மனித உடலில் மிக அதிகமாக சக்தி வெளிப்படும் பாகம் எது? மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கி யமான பாகம்.அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதேபோல் உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸ்தானம் ஆகும். 10477) திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? திருநீறு அணிவதால் தடையற்ற இறை சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல் வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலமும் இரத்த ஓட்டமும் சீர்படும். 10478) நெற்றியில் திருநீறு பூசுவது ஏன்? சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழி யாக கடத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்யும். அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசு கிறார்கள். இதனால்தான் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பார்கள். 10479) சைவ சமய மக்களுக்கு மிக முக்கியமான மூன்றும் எவை? சைவ சமய பெருமக்களுக்கு திருநீறு, உருத் திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமை யாதவையாகும். 10480) விபூதி என்பது என்ன? பசுவின் சாணத்தை எடுத்து அத னை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். 10481 விபூதி தரிப்பதால் விளை யும் வேறு நன்மைகள் என்ன? விபூதி தரிப்பதால ஆன்மீக சம்பந்தமான நன்மைகள் விளை வதுடன், உடல் நலம் சார்ந்த நன்மைகளும் உண்டா கும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினி யும் கூட. அதனை உடல் முழுவதிலும் பூசுவதால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறு கிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர் க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது. 10481) திருநீறின் பெருமையை பாடியவர் யார்? திருஞானசம்பந்தர் 10482) திருநீறின் பெருமையை திருஞான சம்பந்தர் எந்த பதிகத்தில் பாடினார்? தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். 10483) திருநீறு அணியும் போது கூற வேண்டிய மந்திரம் எது? சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்ற ஏதாவ தொரு பஞ்சாட்சர மந்திரம் 10484) திருநீறை எவ்வாறு அணிய வேண்டும்? பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி நெற்றி முழுவதும் அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடு களாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். 10485) திரிபுண்டரிகமாக திருநீற்றினை அணிய பயன்படும் விரல்கள் மூன்றும் எவை? ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும், 10486) திருநீறை எந்த திசையை நோக்கியபடி அணிதல் வேண்டும். முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். உடலுக்கும் உயிரிற்கும் இம்மை யிற்கும் மறுமைக்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாமும் அணிந்து உயர்வடைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...