செவ்வாய், 3 டிசம்பர், 2013

காலியில் அருள்பாலிக்கும் கதிர்வேலாயுத சுவாமி

தென் மாகாணத்தின் எழில் அழகை இன்னும் மெருகூட்ட அதன் தலைமை நகராக காணப்படும் காலியூரில் அற்புதமான கடல் பார்க்கும் சுவாமியான எம் பொருமான் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். ஜாதி, மத பேதமின்றி குறிப்பாக பெளத்த மதத்தவர் விரும்பி வணங்கும் அளவிற்கு அனைத்து மக்களுக்கும் நாமிருக்க பயமேன் என நிமிர்ந்து நிற்கும் எம் பெருமான் அருள்பாலிக்கின்றார். 1790 ஆம் ஆண்டு தேவகோட்டை செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கோவில் இந்த ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலாகும். இக்கோவில் மட்டுமல்லாது உனவட்டுன பிள்ளையார் கோவிலும் இதன் பின் அமைக்கப்பட்டது. இலங்கையில் மேலும் பல கோவில்கள் அமைக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட செட்டிமார் தமது வியாபாரத்தை இந்த காலி ஊரிலேயே முதன் முறையாக ஆரம்பித்தார்கள். இவர்கள் பர்மா ஊரிலிருந்தே அரிசி இறக்குமதி செய்தார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியை கிட்டங்கி என்ற இடத்திலும், டெல்பட்டவுன் வோட்ஸ் வீதி என்ற இடத்திலும் களஞ்சியப்படுத்தி வியாபாரிகளிடையே விநியோகித்தார்கள். இக்காலகட்டத்திலேயே இவர்கள் பர்மாவில் பர்மா டீக் எனப்படும் தேக்க மரக்கட்டைகளை கொண்டு வந்து ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலை நிர்மாணித்தார்கள். இதன் பின் இவர்கள் தமது வருவாயை கொண்டு வங்கித் தொழில், நகை அடகு பிடிக்கும் தொழில் என்பன மேற்கொண்டார்கள். செட்டியார்களாலேயே நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் 1956 இதற்கு முன் வைரவன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், சொக்கலிங்கம் செட்டியார், பழனியப்பச் செட்டியார், ராமசாமி செட்டியார் ஆகியோரால் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டது. 1956 இதிலிருந்து 1981 வரை பெரிஸ்டர் சோமசுந்தரம் செட்டியாரால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் 1981 இதிலிருந்து கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பு தற்போது உள்ள பிரிபாலன சபையான கருப்பன் செட்டியார் அண்ணாமலை செட்டியார் ஏ. எஸ். சீ. முத்தப்பச் செட்டியார் (ஜே.பி.), கே. மாணிக்கம் செட்டியார் (ஜே.பி.) சின்னையா ராமனாதன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஆடிமாதம் நடக்கும் ஆடிவேல் திருவிழா தான் தென் மாகாணத்திற்கே முதன்மை வகிக்கிறது. இத்திருவிழாவில் சுவாமி வீதி வலம் வரும் ரதமே இலங்கையிலேயே பெரிய ரதமாக காணப்படுகிறது. 1973 ஆம் ஆண்டின் பின் இந்த ரதம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 1983 இல் நடந்த இனக் கலவரத்தில் இந்த ரதம் தீக்கிரையாகி சேதமடைந்தது. இன்று வரை அதை மீள்திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.இக்கோவிலில் நகராத்திரி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பூஜைகள் என்பன விமர்சையாக நடைபெறுகின்றன. கதிர்காமத்திற்கு பயணிக்கும் யாத்திரிகள் தென் மாகாணத்தில் அமைந்துள்ள முதல் முருகன் கோவிலான இக்கோவிலை தரிசித்து விட்டே அவர்களது பயணத்தை தொடர்வர். புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட வியக்குமளவிற்கு இக்கோவிலின் உட்புறமாக வரையப்பட்டுள்ள வண்ணச் சித்திரங்களும் அற்புதமான தேக்கு மர வேலைப்பாடுகளும் முருகனை தரிசிக்க வருபவரை மெய்மறக்கச் செய்கின்றன. இவை இக்கோவிலின் ஒரு விசேட அம்சமாகும். இக்கோவில் நம்மவர்களால் மட்டுமன்றி வெளிநாட்டவர்களாலும் போற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...