ஞாயிறு, 28 டிசம்பர், 2014

சின்முத்திரை விளக்கம்!

அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பனின் வலது கரத்தை கவனித்தால் ஓர் அடையாளம் காட்டி கொண்டிருப்பார். கட்டைவிரலோடு ஆள்காட்டி விரல் இணைந்து ஒரு வளையத்தை ஏற்படுத்த, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும். கட்டை விரல் கடவுள். சுவாமி ஐயப்பன் ஆள்காட்டி விரல் ஆன்மா. அதாவது, ஆன்மாவை தாங்கி கொண்டிருக்கின்ற மனிதன், ஏதாவது ஒரு பிறவியில் ஆன்மாவாகிய ஆண்டவனை சென்று அடைய வேண்டும். ஆனால், ஆள்காட்டி விரல் குறிக்கும் ஆன்மா மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. நடுவிரல் மற்றும் மோதி விரல் விவரத்தை பார்ப்போம். ஆணவம் : நடுவிரல் என்று சொல்லக்கூடிய உயரமான விரல் ஆணவம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்லப்படுகிறது. இதுதான் ஆண்டவனை நாம் அடையவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. கன்மம் : மோதிரவிரல் கன்மம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த பிறவி தமது வாழ்க்கை, போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கபடி அமையும். அதுவே தலைவிதியாகவும் அமைகிறது. இதை மாற்ற வேண்டுமென்றால் இறைவன் அருள் வேண்டும். மாயை : பொய்யை உடனே நம்பி விடுகிறோம். உண்மையை நம்ப நிறைய யோசிக்க வேண்டும். மாயத்தோற்றங்கள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும். போலி கம்பெனிகளும், போலி சாமியார்களும் உருவாவது இதனால்தான். நாம் இறைவனை அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று அழுக்குகளும் நீங்க வேண்டும். இதைத்தான் ஐயப்பனின் சின்முத்திரை காட்டுகிறது. விரதம் இருப்பதன் நோக்கம்! ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளை நீக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை அகற்ற வேண்டும். எளிய உடை உடுத்த வேண்டும். எளிய உணவுகளை உண்ண வேண்டும். காலில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டும். தன்னை அழகுப்படுத்தி கொள்ள கூடாது. கோபம் கொள்ளக்கூடாது. யாரையும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆதலால்தான் மேல்அதிகாரி பியூனை பார்த்து சாமி என்றும், பியூன் மேல் அதிகாரியை சாமி என்றும் அழைக்கும் சமநிலை ஏற்படுவதை பார்க்கிறோம். துளசி மாலை ஏன்? விரத காலத்தில் ஐம்புலன்களையும் அடக்கும் அனுபவத்தை பெற வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ருத்திராட்சை மாலை அல்லது துளசி மாலை அணிந்து கொள்வது அதற்காகத்தான். இவை துறவு உணர்வை ஏற்படுத்தி புலனடக்கத்திற்கு உதவி செய்யும். காவி ரகசியம்! ஐயப்பருக்கு மாலை அணிவித்து விரதம் இருக்கும் காலத்தில் காவி உடை அல்லது கருப்பு உடை அணிவது வழக்கம். துறவு உணர்வு மேம்படுத்த இது உதவும். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை போக்கி ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தும். மற்றவர்கள் நம்மை எதிர்படும்போது நம்மை அடையாளம் கண்டு பக்தியோடு பழக வழி செய்யும். மலைப்பகுதியில் பயணம் செய்வதால் காட்டு விலங்குகள் இந்த உடையை கண்டு விலகி போகுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...