செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழ் கலைஞா்கள் பலருக்கு களம் அமைத்து கொடுத்த "கலியுக காலம்" இது

கே. எஸ். பாலச்சந்திரன் உள்ளிட்ட பல வானொலி கலைஞர்கள் திடைப்படத்துறையோடு முதல் தொடர்பை எற்படுத்திக்கொண்டது கலியுக காலம் என்ற மொழிமாற்றப்படத்தின் மூலமாகததான்.

"கலியுக காலய" என்ற சிங்களப்படத்தை T.அர்ஜுனா என்ற தமிழர் தயாரித்தார். இவர் எற்கெனவே "வசந்தயே தவசக்" என்ற சிங்களப்படத்தை தயாரித்து இயக்கியவர். அந்தப்படத்திற்காக சிறந்த படம் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். கலியக காலய படத்தில் ரொனி ரணசிங்க, நீற்றா பெர்னாண்டோ போன்ற நடிகர்கள் நடித்தனா்.( இந்த நடிகை பின்னாளில் கனடாவிற்கு குடிபெயர்ந்து, மொன்றியேல் மருத்துவமனையில் வரவேற்புபணியாளராக வேலை பார்த்தவர்) சிங்களப் படத்தை திரையிடுவதற்கு முன்னரே தமிழில் மொழிமாற்றம் செய்துவிட்டு இரண்டு மொழிகளிலும் வெளியிடலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்கவேண்டும்.



தமிழில் குரல் என்றவுடன் இலங்கை வானொலிதானே நினைவுக்கு வரும். அப்போது வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த கே.எம்.வாசகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வானொலி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகர் பட்டாளத்தை அழைத்துக்கொண்டு "சிலோன் ஸ்டூடியோ" வுக்குப் போனார்.

அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ கதாநாயகன் ரொனி ரணசிங்கவுக்கு குரல் கொடுக்க, "தணியாதாகம்" விஜயாள் பீற்றர் கதாநாயகிக்கு (நீற்றா பெர்னாண்டோ) பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடாகியது. இப்படியே ராம்தாஸ், ராஜகோபால், செல்வசேகரன், சுப்புலக்சுமி காசிநாதன் ஆகியோருடன் கே. எஸ். பாலச்சந்திரனும் குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் விஜய் கொரியா என்றொரு பிரபல ஆங்கில அறிவிப்பாளர் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். (பின்னாளில் இலங்கை ஒலிப்ரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்) அவருக்கு நடிக்கும் ஆசை ஏன் வந்ததோ தெரியவில்லை. அர்ஜுனாவின் நண்பராக இருக்கவேண்டும். அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. பீ.எஸ்.வீரப்பாவின் "ஹஹஹா" சிரிப்பு ஒன்றும் இல்லை. ஒரு சாதா வில்லன். அவருக்குத்தான் கே. எஸ். பாலச்சந்திரன் பின்னணிக் குரல் கொடுத்தார்.

ஈழத்து இரத்தினம் தமிழ் வசனங்களையும் அத்தனை பாடல்களையும் எழுதினார். தமிழ், சிங்களப்படங்களுக்கான இசையமைப்பாளராக "சண்" அறிமுகமானார். தற்போது நோர்வேயில் வசிக்கும் "சண்" 5 பாடல்களுக்கு இசையமைத்தார். "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்.. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்' என்றொரு இனிமையான பாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஏ.குலசீலநாதன், சுஜாதா என்று பலரும் பாடினார்கள். அமுதன் அண்ணாமலை ஆரம்பப் பாடலைப் பாடி அறிமுகமானார். கோணேஷ் பரமேஸ் குழுவின் எம்.பி.பரமேஸ் தனது முதலாவது திரைப்படப்பாடலை பாடியது பற்றி இவ்வாறு கூறினார்.

"கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை இசையமைப்பாளர் 'சண்' கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது"

சிங்களப்படம் வெளியிடப்படுவதற்கு முன்ன்ரே வெள்ளவத்தை
"சவோய்" தியேட்டரில்1974 ஏப்ரல் 14ந் திகதி
"கலியுகாலம்" திரையிடப்பட்டது.

இது பற்றி கே. எஸ். பாலச்சந்திரன் கூறியது, எங்கள் குரல் பெரிய திரையில் ஒலிப்பதை கேட்க ஆவலுடன் நாங்கள்தான் முண்டியடித்துப் போனோம். மற்றப்படி தியேட்டர் ஈயோட்டிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் ஓடியதே பெரிய காரியம். படத்தை இயக்கி, தயாரித்த அர்ஜுனா ஒரு ஆங்கிலப்படப்பிரியராக இருக்கவேண்டும். ஆங்கிலப்படப் பாணியில் Light Comedy படமாக எடுத்திருந்தார். சென்சார் கத்திரிக்கோல் பாவிக்கவேண்டிய காட்சிகளும் இருந்தன.

1975 மார்ச் மாதம் 3ந்திகதி ஒரிஜினல் படமான " கலியுகாலய"(சிங்களப் படம்) வெளியானது. ஆனால் அதற்குள் இது தமிழ்ப்படத்தை "டப்" பண்ணியது என்று யாரோ கதையைக் கட்டிவிட சிங்கள்ப்படமும் ஓடாமல் விட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...