திங்கள், 25 நவம்பர், 2013

அட்லாண்டா சுவாமி நாராயண மந்திர்

அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சுவாமி நாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பு 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டட அளவு 22 ஆயிரத்து 442 சதுர அடி கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக் கல்லால் ஆனது தரைத் தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற் பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 தொன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 தொன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற் துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும், 14 ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலின் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளாலானவை. கீழ் தளம் முழுவதும் ஜெல் டியூபால். உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபா ஒப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும் முழு கட்டமைப்பும் சிற்ப சாஸ்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500 க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய வரலாறு: 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண பக்தர்களால் இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாகவும் செயல்படத் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...